Monday, September 29, 2014

மாறுமா அரசியல்???


மாறுமா அரசியல்???


யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம் இத்தனை நாள் முதல்வராய் வலம் வந்த  ஜெயலலிதா இன்று முன்னாள் முதல்வராக‌!!   18 ஆண்டுகாலம் வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி கடைசியில் இவ்வளவு கடுமையான நீதிபதியிடம் வந்து மாட்டிக் கொண்டார். 66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் 100 கோடி அபராதத்துடன் 4 ஆண்டு சிறைக்கும் உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பளித்து இந்தியாவே திரும்பிப் பார்க்கச் செயத‌ நீதிபதியாகிவிட்டார்   நீதியரசர்.திரு மைக்கேல் டி குன்ஹாஅவர்கள்.ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சிறை சென்றிருக்கும் முன்னால் முதல்வருக்கு ஆதரவு அதிகரித்திருப்பது தான். இதற்கு அவரின் இந்த மூன்றாண்டு கால ஆட்சி தான் காரணம். 


Friday, September 26, 2014

எண்ணக் கிறுக்கல்கள் - 2 ( WEEK END SPECIAL-2)


எண்ணக் கிறுக்கல்கள் - 2



இந்த வாரம் முழுதும் எங்கள் பல்கலைக்கழக அலகுத் தேர்வு நடைபெற்றது, அதனால் டீட்டெயிலான பதிவு எதுவும் எழுத முடியவில்லை.வரும் வாரத்தில் பூஜா விடுமுறை வேறு வருகிறது? பார்ப்போம் ...சென்ற வாரம் நான் எழுதிய கிறுக்கல்கள் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது, அதனால் இனி வாரா வாரம் தொடரலாம் என நினைக்கிறேன்....


Wednesday, September 24, 2014

மங்கல்யான் ! கனவு நனவானது !!!!


மங்கல்யான் ! கனவு நனவானது !!!!


உலக வல்லரசுகளே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய கனவை நம் விஞ்ஞானிகள் நனவாக்கியதுடன் , அந்த வல்லரசுகளை எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துவிட்டார்கள். இந்தியன் என்பதற்கான பெருமை இப்போது இன்னும் ஒருபடி மேலே ஏறிப் போய்விட்டது, மற்ற நாட்டவர்களுக்கு மத்தியில். என்னடா, ஒரு செயற்கைக் கோள் வெற்றிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா ? என நீங்கள் நினைத்தால் அது தவறு.ஆம் இது சாதாரண திட்டம் கிடையாது. சந்திரயான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளில் பெரும்பாலானவை வேற்று நாடுகளைச் சேர்ந்தது. ஆனால் மங்கல்யானில் பயன்படுத்தப்பட்டவை அனைத்தும் நமது உழைப்பு, நமது கண்டுபிடிப்பு. இதுவரை உலக நாடுகளில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.ஆனால் நாம் முதல் முயற்சியிலேயே வெற்றியடந்திருக்கிறோம் இதிலிருந்தே இந்த வெற்றி எவ்வளவு முக்கியமானது என உணர்ந்து கொள்ளலாம்.ஒரு வேளை இது தோல்வியடைந்திருந்தால் இழப்பு 450 கோடி பணம் மட்டுமல்ல , உலக நாடுகள் நம் விண்வெளித் துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழந்திருப்போம்...


Monday, September 22, 2014

தி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்

தி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்



ஒரு நாள் எதார்த்தமாக  எங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் தி இந்து தமிழ் நாளிதழை படிக்க நேர்ந்தது. (அறிமுகமான சமீபம்). படித்து முடித்தவுடன் மற்ற தினசரிகளைப் படிக்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு ஏற்படவில்லை. அசாதாரணமான ஒரு உணர்வு தோன்றியது. ஆம் மற்ற தினசரிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததால் முதல் முறை படித்தவுடனேயே அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது நிஜம்.உடனே விடுதியிலும் அந்த நாளிதழை வரவழைக்க பெருமுயற்சி எடுத்து ஒருமாத போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக வரவழைத்தும் விட்டோம்.அதிலிருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன் .மிகைப்படுத்தவில்லை உண்மையாகவே மற்ற தினசரிகளிலிருந்து தி இந்து தமிழ் வேறுபட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.


தினசரிகளுக்கே உரிய அனைத்து வரைமுறைகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்து அதில் வெற்றியும் காண்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை தானே??தமிழ் தினசரிகளுக்கே உரிய சில குறைபாடுகள் இதற்கும் பொருந்தினாலும், நாம் எதிர்பார்க்கும் விசயங்களில் நடுநிலைத்தன்மையோடு நடந்து கொள்வது உண்மையிலேயே பெரிய விசயம் தான்.செய்திகளுடன் சில இணைப்பாக வெளிவரும் மற்ற தினசரிகளுக்கு மத்தியில் இணைப்புகளுடன் சில செய்திகளாக வருவதுதான் இதனுடைய வெற்றி ரகசியம்.ஒவ்வொரு நாளும் வண்ணமயமான இணைப்புகளோடு வெளிவந்து வாசகர் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதோடு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியிருப்பது இதனுடைய வளர்சிக்கு காரணங்களுள் ஒன்றெனக் கூறலாம்.



தி இந்து தமிழ் நாழிதழின் சிறப்பு என்றால் அது நடுப்பக்கம் தான்.அற்புதமான பல அரிய தகவல்களோடு அலங்கரிக்கப்படும் நடுப்பக்கத்தின் ரசினாகவே மாறிவிட்டேன் நான்.நாளிதழ் வாங்கியவுடன் தலைப்புச் செய்தியைப் பார்க்கும் பழக்கம் போய் நடுப்பக்கத்தைப் பார்க்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது என்று கூடச் சொல்லலாம். விடுமுறை நாட்களில் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சிறந்த எழுத்தாளர்களால் நிரப்பப்படும் பக்கமாக நடுப்பக்கத்தை தாராளமாகக் கூறலாம்.கலை, இலக்கியம் ,விளையாட்டு, அறிவியல் என அனைத்தையும் தரும் இடம் தி இந்து தமிழின் நடுப்பக்கமாகத் தான் இருக்க முடியும். இதழாளர் சமஸ் எழுதும் நிலம்,நீர்,காற்று எனும் தொடர் மிகவும் நன்றாக இருக்கும். இப்போது தான் நீர் பகுதி முடிந்து நிலம் நோக்கிய பயணம் தொடரவிருக்கிறது.




நீர் பகுதியில் மீனவர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவேனும் தெரிந்து கொள்ள வைத்தது இந்த பதிவுகள் தான்.கடலோடிகள் எனும் அழகிய தமிழ் சொல்லையும் இங்குதான் நான் முதன்முதலில் அறிந்து கொண்டேன். கடலோடிகளின் பிரச்சனைகளை அவர்களின் குரலிலேயே பதிய வைத்து ஒரு நீரோட்டத்துக்கே உரிய தெளிவை ஏற்படுத்திவிட்டார்   திரு.சமஸ். படிக்காதவர்கள் அவருடைய வலைப்பக்கத்தில் படித்துப் பாருங்கள்.




தி இந்து தமிழ் நாளிதழின் இன்னொரு சிறப்பு இணைப்பு மலர்களைக் கூறலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு இணைப்புடன் வெளிவரும் ஒரே தமிழ் தினசரி இதுவாத்தான் இருக்கும்.அதிலும் மாயாபஜார், பெண்கள் உலகம்,இந்து டாக்கீஸ் , இளைஞர் ஸ்பெசல் உள்ளிட்டவை மிகவும் அருமையாக இருக்கும்.  வாசகர்களுக்குரிய  மரியாதையை தருவதிலும் தி இந்து தமிழ் தனித்தே நிற்கிறது. நமது குரலிலேயே பகிர்ந்து கொள்ளும் வசதி கூட வந்துவிட்டது. உங்கள் குரல் மூலம் நமது பகுதி பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்யலாம்.ஒரு ஒரு பக்கத்திற்கும் மேலே கூட தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.செய்திகளை விரிவாக தருவது போல தகவல்களை விரிவாக தருவது தான் ஆச்சரியமான ஒன்று.இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலங்கள் எழுதும் புதிய பகுதி அறிமுகமாயிருக்கிறது.தங்கர்பச்சான்,கிரேசி மோகன் தொடர்கள் அற்புதமாக போகிறது.



எல்லாமே சிறப்பு தான எனப் பார்த்தால் எதுவுமே இவ்வுலகில் முழுமையாக சிறப்பாக இருக்க முடியாது, அவ்வகையில் இதற்கும் சில குறைபாடுகள் உண்டு. அரசியலில் ஆளுங்கட்சி சார்பாகவே இருக்கிறது என்பது என் கருத்து. தலையங்கமும் அவ்வளவு ஒரு பலமானதாக தெரியவில்லை. (என்னைப் பொறுத்தவரை தலையங்கம் என்றால்  தினமணி தான்). அதே போல தி.மு.க பற்றி நேர்மறையான பதிவுகள் வருவது குறைவு தான்.இன்னொன்று தேவையில்லாத அல்லது அதிகம் விரும்பாதவைகளுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம். ஆன்மீக சிறப்பு மலர் முழுதும் அதற்காகவே தான். நான்கு பக்க‌ங்கள் முழுதும் அதே!! அதே போல சொந்தவீடு மலரும் அப்படித்தான்.நிறைகளோடு ஒப்பிடும் போது குறைகள் அவ்வளவாக இல்லை. எனவே மற்ற தினசரிகளுக்கு மாற்றாக கண்டிப்பாக தி இந்து தமிழ் நாளிதழை வரவேற்கலாம். இந்த ஒரு வருடத்திலேயே இப்படி என்றால் இனி வரும் காலங்களிலும் கண்டிப்பாக மேன்மையுறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது........





பதிவு குறித்தும் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்தும் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாமே....


Friday, September 19, 2014

எண்ணக் கிறுக்கல்கள் - 1 ( WEEK END SPECIAL -1)


எண்ணக் கிறுக்கல்கள் - 1


கடந்த சனிக்கிழமை வழக்கம்  போல BROWSING செய்து கொண்டிருந்த போது கருவாச்சி காவியம் புத்தகம் பதிவிறக்கக் கிடைத்தது. வைரமுத்து எழுத்து எனக்கு பிடிக்கும் ஆதலால் பதிவிறக்கி படிக்க ஆரம்பித்தேன்.சனி , ஞாயிறு என விடாமல் 290 பக்கத்தையும் இரு மூச்சாக படித்து முடித்துவிட்டேன். ரொம்ப அருமையான புத்தகம்.கிராமத்து வட்டார வழக்கு மொழியில் மிக அற்புதமாக எழுதியிருந்தார் வைரமுத்து. கருவாச்சியைக் கதாநாயகியாக்கி காவியம் படைத்திருந்த ஒரு கிராமத்து மண்வாசனை பொங்க ஒரு அற்புதமான படைப்பாக இதைக் கருதலாம். உண்மையிலேயே படித்து முடித்த போது நம்மையும் நம் கண்களையும் அறியாமலேயே ஒரு துளி கண்ணீராவது நாம் சிந்துவோம். மனசு கணப்பது போன்று தோன்றும்.கஸ்டங்கள் வருவது தான் வாழ்க்கை. ஆனால் கருவாச்சிக்கு கஸ்டமே வாழ்க்கையாகியிருந்தது.. சே !!! சான்ஸே இல்லை.. முடிந்தால் நீங்களும்  படித்துப் பாருங்கள்...



இந்த வாரம் 15 ஆம் தேதி அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. முந்தைய நாளே பாடல்கள் வந்துவிட்டன. ஏ.ஆர் ரகுமான், எனக்குப் பிடித்த சங்கர் ஆகியோருக்காக பாடலை பதிவிறக்கினேன். நன்றாக இருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை, நல்லாயில்லை என்றும் சொல்ல முடியாது. பரவாயில்லை ரகம். மெர்சலாயிட்டேன் அனிருத் குரலில் சுமார் ரகம். பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாட்டு செம மெலடி, நைஸ் சாங்.

எந்திரன் ஆல்பத்திற்கு பிறகு ரகுமானுக்கு ஆல்பம் மட்டும் தனி ஹிட் கிடைக்கவில்லை. அது இந்த படத்திலும் தொடரும் எனத் தெரிகிறது. கோச்சடையான் பாடல்களும் முதலில் இப்படித்தான் இருந்தது.பின்னர்,படத்தோடு பார்க்கையில் நன்றாகவே இருந்தது. அதைப்போல ஐ பாடல்களும் நன்றாக‌ இருக்கும் என நம்புவோம். அப்புறம் ஐ டீசர், ப்பா சான்ஸே இல்லை ?? சங்கர் பிரம்மாண்டம் செய்திருக்கிறார்... விகரமா இது ?? என்ன உழைப்புடா?? நீங்களும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஐ இசை வெளியீட்டு விழா வழக்கம் போல சொதப்பல் தானாம். காரணம் ஜெயா டிவி. தலைவர் மட்டும் இல்லை என்றால் கதை கந்தலாயிருக்கும். அர்னால்ட் பேசிக் கொண்டிருக்கும் போதே மைக்கை பிடுங்காத குறை தானாம்.பாதியிலே கிளம்பியே விட்டாராம். காலந்தவறாமையை இனியாவது உணரட்டும் தமிழ் சினிமா. என்னைப் பொறுத்தவரை இந்த விழாக்களுக்கெல்லாம் விஜய் டிவிதான். சன் டிவி கூட நன்றாக பண்ணுவார்கள்.தலைவர் எண்ட்ரிக்கு ஸ்டேடியமே அதிருச்சாம். காந்தி ஜெயந்திக்கு ஜெயாடிவியில் தரிசிக்கலாம் என நினைக்கிறேன்.

பி.கு: இந்திய வரலாற்றில் ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்து ரசித்த வீடியோ ஐ டீசர் தானாம். ஒரே நாளில் 20 லட்சம் பார்வைகள்.இதற்கு முன் தலைவரின் கோச்சடையான் ஒரே நாளில் 18 லட்சம் பார்வைகள். என்னுடைய கணிப்பு ஐ படம் எந்திரன் ரெக்கார்டுகளை முறியடித்துவிடும் என நினைக்கிறேன்.பொறுத்திருந்து பார்ப்போம்..


கத்தி இசை  வெளியீடும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே 18 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது.விழாவில் விஜய் கொஞ்சம் பொடிவைத்து பேசியிருக்கிறார். தமிழன், துரோகியும் இல்லை விரோதியும் இல்லை என,சரி அது அவரோட தனிப்பட்ட விசயம். எப்படியோ படம் ஐ படத்தோடு தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.கத்தி பாடல் பதிவிறக்க விருப்பம் இல்லை. பார்ப்போம் ஐ யா இல்லை கத்தியா என??????


ஞாயிற்று கிழமை வானவராயன் வல்லவராயன் படத்திற்கு போனோம். ம.கா.பா ஆனந்துக்காக. முதல் படம் மாதிரியே தெரியவில்லை. செமயா நடித்திருக்கிறார். சின்னத்திரை போல‌ சினிமாவிலும் ஜெயித்துவிடுவார் என்றே சொல்லலாம்.படமும் பரவாயில்லை, நன்றாகவே இருந்தது. ஒரு முறை பார்க்கலாம்.இந்த வாரம படம் எதுவும் இன்ட்ரெஸ்டாக இல்லை. அரண்மனை நன்றாக இருந்தால் போகலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.



உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என நினைக்கிறேன். இங்கே திருநெல்வேலியில் பா.ஜ.க மேயர் வேட்பாளரையே வாபஸ் வாங்கச் செய்து அதிமுக வில் சேர வைத்துவிட்டனர். கஸ்டமாக இருந்தது? ஒரு நாள் லீவு போச்சே என்று....????கோவையில் வேட்பாளருக்கு அடி உதை என நாளிதழில் படித்தேன். அரசியல்ல அதுவும் அதிமுக அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என நண்பன் அடித்த‌ கமெண்ட் நியாபகத்திற்கு வருகிறது.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வேண்டியது. மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்து 27க்கு தள்ளிவைத்தாயிற்று. அதுவும் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம்... ஈழத்தாய்க்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாம், பட்டம் கொடுத்தவங்கள............????எப்படியும் இதிலிருந்து வெளிவந்துவிடுவார் ஜெ என நினைக்கிறேன்.

ஒரே வாரத்தில் மூன்று பணியிட,பணி மாற்றங்களை சந்தித்த சகாயம் IAS தலைமையில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த குழுவுக்கு எதிராக தமிழக அரசே மேல்முறையீடு செய்துள்ள அவலமும் நடந்தேறியிருக்கிறது. எங்காவது இது போன்ற கொடுமை நடக்குமா தெரியவில்லை. ஒரே வாசகம் லஞ்சம் தவிர் ! நெஞ்சம் நிமிருக்கு இவ்வளவு அலைக்கழிப்புகளா....?????

உலகிலேயே அதிக பரிசுத்தொகை கொண்ட கிரிக்கெட் டூரான‌  சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் தகுதிச்சுற்றிலேயே வெளியேறிப்போனது இந்தியாவின் மும்பை இந்தியன்ஸ்.ரோகித் சர்மா விளையாடாததால் பொல்லார்டை கேப்டனாக்கினர். கேப்டன் எவ்வாறு இருக்க கூடாதோ அவ்வாறு நடந்து கொண்டார் அவர்.  ஹர்பஜனை கேப்டனாக்கியிருக்கலாம். அவரின் தலைமையில் தான் ஒரு சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்றது மும்பை.

எல்லோருக்கும் பிடித்த சென்னை அணியும் முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவுடன் தோற்றுப் போனது. எனக்குப் பிடித்த பஞ்சாப் அணி வெற்றியுடன் ஆட்டத்தை துவக்கியிருப்பது மகிழ்சி அளிக்கிறது. அதுவும் எனக்குப் பிடித்த ஜார்ஜ் பெய்லியே ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தது கூடுதல் சந்தோசம். டிராவிட்டுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த கேப்டன்,,, கூல் பெய்லி தான். செமயா வழிநடத்துவார். இதில் என்ன சிறப்பு என்றால் அவர் நேற்று ஜெயித்த அணியும் அவருடைய அணிதான். ஆஸ்ட்ரேலிய BIG BASH ல்  அவர் கேப்டனாக இருந்து இரண்டாம் இடம் பெற்றுத்தந்த அணி.இந்த முறையும் ஏதாவது ஒரு இந்திய அணி கோபையை வென்றால் மகிழ்ச்சி, எனக்குப் பிடித்த பஞ்சாப்பே வென்றால் ரொம்ப சந்தோசபடுவேன்.போன முறை என் ஹீரோ டிராவிட் அணி பைனலில் தோற்றுப்போன வருத்தம், இன்னும் இருக்கிறது.....


இந்தவார காமெடி: 

உ.பி:   தலைவரே சொத்து குவிப்பு தீர்ப்பு மட்டும் வரட்டும் ,அப்புறம் நீங்க தான் தமிழ் நாட்டின் நிரந்தர சி.எம் !!!

தலைவர்: அட போப்பா, சொத்துக் குவிப்பு தீர்ப்பு வற்றதுக்கு முன்னாடி ஸ்பெக்
ட்ரம் வழக்கோட‌ தீர்ப்பு வந்திரும் போலிருக்கு??????????????????


இந்த வார ஹைக்கூ:

எல்லாக் கடவுள்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றார்களோ இல்லையோ... ??

ஆனால் எல்லா பிள்ளைகளுக்கும் கடவுள்கள் இருக்கின்றார்கள் !

‪#‎அம்மா‬ #அப்பா



வாரவிடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துகளுடன் 

                                                                        
                                                                                                               உங்கள் சீலன்...







உங்கள்  கருத்துகளான ஊக்கம் தான் என் எழுத்துகளின் ஆக்கம். எனவே உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிர வேண்டுகிறேன்

Thursday, September 18, 2014

புவித்தகவலியல்-GEO INFORMATICS


புவித்தகவலியல்-GEO INFORMATICS

நான் படிக்கும் பொறியியல் படிப்பு குறித்து எழுதிய முந்தைய பதிவின் தொடர்ச்சி தான் இது. முந்தைய பதிவு....


http://pudhukaiseelan.blogspot.com/2014/09/be-geo-informatics-engineering.html

புவித்தகவலியல் (GEO INFORMATICS) என்பது பூமியைப் பற்றிய தகவல்களை சேமித்து உபயோகப்படுத்துவது என்பதாகும்.அவ்வாறு சேமிக்கும் தகவல்களை எந்த முறைகளைப் பயன்படுத்தி சேமிக்கலாம், எந்த முறைகளைப் பயன்படுத்தி உபயோகிக்கலாம் என்பதைப்பற்றி படிக்கும் பொறியியல் தான் புவித்தகவலியல் பொறியியல்(GEO INFORMATICS ENGINEERING) ஆகும்.இன்று சாதாரண குடிமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஜி.பி.எஸ் (GLOBAL POSITIONING SYSTEM)எனப்படும் குளோபல் பொஸீஸனிங் சிஸ்டம் அதாவது புவியிடங்காட்டி முறை என்பது இந்த புவித்தகவலியலின் ஒரு பயன்பாடு தான்.(பார்த்தவுடன் புரியும் வகையில் எளிமையான படங்களே கொடுக்கப்பட்டுள்ளது)



Sunday, September 14, 2014

எனக்கு விருதா ??


எனக்கு விருதா ??






இன்று எனக்கு ஒரு மகிழ்வான அதிர்ச்சி காத்திருந்தது. எனக்கும் ஒரு விருது அளித்திருக்கிறார் திரு.மது சார்....

வலையுலகில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை. மற்ற பெரிய பெரிய வலைப்பதிவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனான எனக்கும் விருதளித்து பெருமைப்படுத்தியிருக்கும் திரு. மது சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


Friday, September 12, 2014

நான் ஏன் இஞ்சினியரிங் (B.E GEO INFORMATICS ENGINEERING ) சேர்ந்தேன் ?


நான் ஏன் இஞ்சினியரிங் (B.E GEO INFORMATICS ENGINEERING ) சேர்ந்தேன் ?


என்னுடைய PROFILE பார்த்தவர்களுல் சிலர் நான் படித்துக் கொண்டிருக்கும் GEO INFORMATICS ENGINEERING   என்பது எதைப்பற்றியது எனக் கேட்டனர்.அதனால் என்னுடைய பொறியியல் படிப்பைப் பற்றி விரிவாகவும் முடிந்த அளவு தமிழிலும் எழுத முயற்சி செய்கிறேன் !! அதற்கு முன்னால் நான் ஏன் இந்த படிப்பில் சேர்ந்தேன் ? எப்படிச் சேர்ந்தேன் ? என்பதையும் சொல்லிவிட்டு அடுத்த பதிவில் அதைப் பற்றி  விரிவாக எழுதுகிறேன்.


Monday, September 8, 2014

என்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை

என்னைக் கவர்ந்த திரைப்படம் -  புதுக்கவிதை


திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, இனி எப்பொழுதும் சரி. ஆனால் அதை நாம் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் தான் பார்க்கிறோமா எனறால் இல்லை என்பது தான் விடை. அதை ஒரு வித ஈர்ப்போடு, ஒரு வித அதீத ஆர்வத்தோடு ஏன் சில நேரங்களில் நம் வாழ்க்கையோடு கூட ஒப்பிட்டு மகிழ்கிறோம். நாம் எதிர்பார்க்கும் விசயங்களும் நிகழ்வுகளும் அதில் இருந்துவிட்டால் அதை கொண்டாடவும் செய்கிறோம்.ஒவ்வொருவருக்கும் சில திரைப்படங்கள்  எத்தனை முறை பார்த்தாலும் கண்டிப்பாக சலிப்பைத்தராத கொண்டாட்டங்களாக இருக்கவே செய்யும். அப்படி எனக்கு இருந்த‌ என்னைக் கவர்ந்த ஒரு திரைப்படம் புதுக்கவிதை !


Friday, September 5, 2014

ஆசிரியர் தினம்


ஆசிரியர் தினம்

ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் 
கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌
மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல்
மேடைதனில் இருக்கிறதா க‌விதை !


Thursday, September 4, 2014

யார் இந்த சுப்பிரமணிய சாமி ??


யார் இந்த சுப்பிரமணிய சாமி ??


போன ஆட்சியில் நாராயண சாமி, இந்த ஆட்சியில் இந்த சுப்பிரமணிய சாமி ! நா.சாமி யாவது பரவாயில்லை, சும்மா சாதா கருத்துகளைக் கூறி இணையதளங்களில் திட்டு வாங்குவார், ஆனால் இந்த சு. சாமி பண்ற அலும்புகள் தாங்க முடியல.