Tuesday, December 1, 2015

வடகிழக்கு பருவ மழை - 1


                        வடகிழக்கு பருவ மழை - 1


எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பின்னி எடுத்து வருகிறது. மழையின் அளவும் பாதிப்பும் குறையும் என்று எதிர்பார்க்கும் போதெல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது . ஒரு புவிதகவலியல் மாணவனாக எனக்கு  இந்த மழை பற்றியும் மழையின் பாதிப்புகளுக்கான காரணம் குறித்தும் என்னுடைய பார்வையில் புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த பதிவை எழுத முடிவு செய்தேன். பைனல் இயர் ப்ராஜெக்ட் வேறு இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. இதையே எடுத்துவிடலாமா எனும் எண்ணமும் வருகிறது. டேட்டா கிடைப்பது தான் கடினம். பார்க்கலாம்.

2005 என்று நினைக்கிறேன் .  எங்கள் ஊர் கண்மாய் நிறைந்து உபரி நீர் வெளியேறிய வருடம். நம்ம தெற்கு வெள்ளாற்றில் கடையக்குடி பாலத்துக்கு மேலே தண்ணீர் சென்றது. சைக்கிளில் சென்று வேடிக்கை பார்த்தது இன்னும் நியாபகம் இருக்கிறது. நம்ம மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுதும்  நல்ல மழை. பெரும் பாதிப்புகள். ஆனால் இந்த முறை வட தமிழகமும் தென் தமிழகமும் மட்டும் தான் பாதிப்பு. உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் அவ்வளவு பாதிப்பு இல்லை. சொல்லப்போனால் மழைஅளவு இன்னும் சராசரி அளவைக்கூட எட்டவில்லை. ஆனாலும் இவ்வளவு உயிர் சேதம் பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதற்கான காரணத்துக்குள் நான் போக விரும்பவில்லை. அது பல செய்தித் தாள்களிலும் தொலைகாட்சி விவாதங்களிலும் அலசப்பட்டுவிட்டது.

தமிழகத்தின் சராசரி மழை அளவு 958-970 மி.மீ. அதாவது வடகிழக்கு,தென்மேற்கு,கோடைமழை அனைத்தையும் சேர்த்து. இதில்  50 -60 %வடகிழக்கு பருவமழைக்கானது. கோவை,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் இரண்டு பருவத்திலும் மழை பெறக்கூடியவை. தேனி,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இரண்டிலும் சுமார் மழையே பெறக்கூடியது.  வடகிழக்கு பருவ மழை காலம் எனபது அக்டோபர் முதல் டிசம்பர் வரை. டிசம்பரை சேர்த்தே பெய்திருக்க வேண்டிய  வ.கி மழை சராசரி  485 மி.மீ.ஆனால் டிசம்பரை சேர்க்காமலேயே இது வரை 440 மி.மீ வரை பெய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை மாவட்டம் மட்டும் அல்ரெடி நூற்றாண்டு சாதனைய  தாண்டிருச்சு. இப்பவே 1000 மி.மீ தாண்டி நாட் அவுட்டா போய்கிட்டு இருக்கு. இன்னும் மூன்று இடங்களில் லோ ப்ரெஸ்ஸர் (low pressure )  உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது ( IMD data ). அதில் ஏதாவது புயலாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு கெட்ட காலம் தான்.

2013 ஆம் ஆண்டு கேதார்னாத் பெருவெள்ளம் குறித்து மறந்திருக்க மாட்டோம். அந்த பெருவெள்ளத்திற்கு மிகமுக்கிய காரணம்  அதீத மழைப்பொழிவு (sudden rainfall). அதுவும் மேகம் முழுதும் மழை மேகமாக இருந்திருக்கிறது.(cloud monitoring தொழில்நுட்பம் இன்னும் இந்தியாவில் அதிகளவு வளர்ச்சியடையவில்லை ) அதை நமது வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதால் அத்தகைய இழப்பை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை சென்னை மழைப் பொழிவை துல்லியமாக கணித்தும் கோட்டை விட்டது ஆளும் அதிமுக மற்றும் செயல்படாத முதலமைச்சர். அதற்குள் போக விரும்பவில்லை.

அந்தமானுக்கு தெற்கே உள்ள கடல்பகுதியும் கன்னியாகுமரிக்கு தெற்கே லட்சத்தீவுக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியும் தான் இந்திய பருவ மழைக்கு 80-90% காரணமாக இருக்கிறது. அதாவது இந்த பகுதிகளில் தான் காற்றழுத்த வேறுபாடு ஏற்பட்டு காற்றழுத்த தாழ்விநிலை,புயல்,சூறாவளி உருவாகி மழை மேகங்களை உருவாக்குகிறது. இந்த கடற்பகுதி நேரடியாக பசிபிக் நீரோட்டங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே தென் பசிப்பிக்கில் ஏற்படும் மாற்றம் நேரடியாக இந்த பகுதியிலும் மாற்றம் நிகழக் காரணமாய் இருக்கிறது. அங்கே ஏற்படும் வெப்ப மாறுபாடு இங்கேயும் சற்று குறைவாக ஏற்படுகிறது. அது கடற்பரப்பு அழுத்தத்திலும் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. தென் பசிபிக்கில் உருவாக்கப்படும் பருவ மாற்றங்களான எல்நினோ,லாநினா இந்திய பருவ மழையுடன் தொடர்பு உடையதா என்று நான் மேற்கொண்ட மினி பிராஜெக்டில்  ( இதையே மெயின் பிராஜெக்டாக எடுக்கவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் , உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன் ) குறிப்பிடத்தகுந்த முடிவுகள் கிடைத்தது. அதற்கும் இப்போதைய மழைப் பொழிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ...............?அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாய் பார்ப்போம்........!

6 comments:

  1. வணக்கம்
    எல்லாம் இறைவன் செயல்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  2. நன்றி ஐயா.. தொடர்ந்து வருகை தர வேண்டும்..

    ReplyDelete
  3. புவிதகவலியல் மாணவராக உங்கள் தகவல்கள் அருமை..இதனை ப்ராஜெக்டிற்கு எடுக்க யோசிப்பதும் பாராட்டுக்குரியது..அப்படியாவது நம் நாட்டில் பலர் அறிய வழி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
    நானும் எல் நினோ தாக்கம் தானா என்று யோசித்து, பல தகவல்களையும் என் அறிவிற்கு ஏற்றாற்போல் படித்து உணர்ந்து எல் நினோ தாக்கமே என்று நினைக்கிறேன்..அப்படியானால் இன்னும் பயம் அதிகரிக்கிறது..
    வாழ்த்துகள் சகோ..அடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறேன்

    எல் நினோ பற்றிய என் பதிவு:
    http://thaenmaduratamil.blogspot.com/2015/12/is-el-nino-reason-for-the-heavy-rains.html

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள பதிவு. பல புதிய தகவல்கள் அறிந்துகொண்டேன். நன்றி.

    ReplyDelete
  5. ஜெயசீலன் தங்கள் பதிவை இன்றுதான் பார்த்தோம். நீங்கள் வெளியிட்ட போது எங்கள் பகுதியில் எல்லாம் கரன்ட் இல்லையே...

    ஓ நீங்கள் புவிதவியலில் மாணவரா!! சூப்பர். எல் நினோ லா நினோ ஆம். இதன் தாக்கம் உண்டு இந்த வருடமே எல்னினோ வருடம்தானே. ஆனால் இப்போது பார்க்கும் போது தாக்கம் குறைந்துள்ளது போலத்தான் இருக்கு. வானிலை மேப் பார்த்தாலும் தெரியுது.

    கை கொடுங்கள். இந்த ப்ராஜெக்ட்
    கோ அஹெட். நல்ல ப்ராஜெக்ட். உங்களுக்குத் தகவல் வேண்டுமென்றால் சொல்லுங்கள் நான் ரெடி. நானும் எனது மகனும் இது பற்றி எல்லாம் நிறையபேசுவதுண்டு...

    நீங்கள் பதிவில் சொல்லியிருக்கும் கருத்துகள் தான் நாங்களும் அடிக்கடி பேசுவது. நல்ல பதிவு

    இது பற்றி எழுதுங்கள் ஜெயசீலன். நானும் அதிகம் இதை எல்லாம் படித்தாலும் ஆங்கிலத்தில் என்பதால் எனக்கு அதைச் சரியாகத் தமிழில் மொழி பெயர்க்க வருவதில்லை. எனவே உங்களைப் போன்றோர் செய்தால் நல்லது..

    கீதா

    ReplyDelete