Tuesday, February 17, 2015

ரஜினி ! ‍ அரசியலா ? அடுத்த படமா ?



                     
ரஜினி !  ‍ அரசியலா ? அடுத்த படமா ?



இரண்டு நாள் முன்னர் லிங்கா பிரச்சனையின் பிரஸ்மீட் வீடியோவை சமூக வலைத் தளங்களில் காண நேர்ந்தது.என்னடா உண்ணாவிரதம் இருந்தவர்களை இடையில் ஆளைக் காணோமே என்று பார்த்தேன். இதோ இருக்கிறோம் என அடுத்த ரவுண்ட் கிளம்பிவிட்டார்கள்.ஆமாம் இப்போ பிச்சை எடுக்கும் போராட்டமாம்.(இவ்வளவு நாளாமட்டும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்களாம்) தொடக்கத்திலிருந்தே இந்த பிரச்சனையின் சாராம்சம் எனக்குப் புரியாமலில்லை.இருந்தாலும் என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே என இத்தனை நாள் இது பற்றி நான் வாயே திறக்கவில்லை.

முதலில் படம் வெளியான மூன்றாவது நாளே படம் சரியில்லை ,ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா,ரஜினிக்கெல்லாம் மாஸ் குறைந்துவிட்டது,அவர் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்று ஒருவர் கிளம்பினார். பெயர் சிங்காரவேலனாம்.அவருக்குமுக்கியத்துவம் அளித்து அவரை வளர்த்துவிட்டது இந்த நடுநிலை ? ஊடகங்கள்.அதற்கடுத்து பல காட்சிகள் அரங்கேறின. கன்னடர் என்றார்கள்,தமிழருக்கு துரோகம் என்றார்கள்,அவர் என்ன பெரிய ..... என்று கூட கேட்டார்கள்.அதெல்லாம் நமக்கு தெரிந்த கதை தான்.உண்ணாவிரத  போராட்டத்துக்கு சீமான்,வேல்முருகன் போன்றவர்கள் வரும்போதே அவர்களுடைய சாயம் வெளுத்துப் போனது. நேற்றைக்கு ஒரு பிரஸ் மீட் . இப்போது தான் வெளிப்படையாகவே புரிகிறது. அவர்களுடைய டார்கெட் ரஜினிகாந்த் என்பது.



அந்த சிங்கு சொல்கிறார், தமிழகத்தில் லிங்கா படத்தைப் பார்த்தவர்கள் மொத்தமே 40 லட்சம் பேர் தானாம். இதிலிருந்தே அவர்களின் அண்டப் புளுகு வெளியே வந்துவிட்டது.

முதல் நாள் இரவுக்காட்சி என் நண்பர்களுடன் ராம் தியேட்டருக்கு சற்று நேரமாகியே சென்றோம். ( மூன்று தியேட்டர்: ராம்முத்துராம்,பேரின்பவிலாஸ்,பாம்பே ரிலீஸ் என்பதால்  ) ராம் தியேட்டரில் டிக்கெட் இல்லை. ஒருடிக்கெட் 250 ரூபாய் என்பதும் கவனிக்கத்தக்கது. அடுத்து அவசர அவசரமாக பேரின்பவிலாஸ் சென்றோம். அங்கே இருந்த டூவீலர்களை பார்த்து நான் மயங்கி விழாத குறைதான். அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி( டிக்கெட் விலை 200) உள்ளே போனால் அங்கே தியேட்டரே புல். முன் வரிசை மட்டுமே இருந்தது. மூன்று தியேட்டர்களிலும் நள்ளிரவு 12 மணியிலிருந்து நாளொன்றுக்கு 6 காட்சிகள் முதல் மூன்று நாடகள். மூன்று தியேட்டர்களின் குறைந்தபட்ச‌ இருக்கை 1500 என்று வைத்துக் கொண்டாலும் 1500*6 = 9000 பேர் ஒரு நாள். 27000 பேர் மூன்று நாள். ஒரு டிக்கெட் 200 என்றாலும் 54 லட்சம் திருனெல்வேலி நகரில் மட்டும். இதே போல தமிழகம் முழுதும் 600க்கும் மேற்பட்ட திரைகளில் லிங்கா ரிலீஸ். நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். கோவை ஏரியாவில் மட்டும் 40 லட்சம் பேர் பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் கணக்கு தமிழகம் முழுதும் 40 லட்சம் பேராம். இந்த சிறிய கணக்கீட்டிலேயே எவ்வளவு பெரிய பித்தலாட்டம் நடைபெற்றிருக்கிறது என யூகிக்கலாம்.

சரி அடுத்த பிரச்சனைக்கு வருவோம். உண்ணா விரதம் இருந்த பின்பு அமைதியாகிவிட்டார்கள். இடையில் ரஜினி திருப்பூர் சுப்பிரமணியத்தை பொறுப்பாளராக நியமித்து நஸ்ட ஈடு தரப்போவதாக சொன்னார்கள். ஆனால் இவர்கள் கொடுத்த 40 லட்சம் கணக்குப் பார்த்து இவர்களின் வண்டவாளங்களை புரிந்து கொண்டு அமைதியாகிவிட்டனர் போல.சரி படம் ஓடவில்லை. நஸ்டம். அப்போ யாரிடம் நஸ்ட ஈடு கேட்க வேண்டும். இவர்கள் யாரிடம் வாங்கினார்களோ அவர்களிடம் தானே. அதாவது வேந்தர் மூவீஸிடம், வேந்தர் மூவீஸ் ஈராஸிடம், ஈராஸ் தயாரிப்பாளரிடம். ஆனால் இதில் ரஜினி எங்கேயிருந்து வந்தார் ?? அரசியல்வியாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?


இந்த கூட்டுப் பிச்சைக்காரர்களின்  பிச்சை எடுக்கும் போராட்ட அறிவிப்பின் பத்திரிக்கை செய்தியைப் படிக்கும் யாருக்கும் கோபம் வரும். அப்படியானால் ரஜினி ரசிகன் ?? கோபத்தின் உச்ச  கட்டத்தை அடைவான்.

"ரஜினி படத்தை வாங்கினால் பிச்சை தான் எடுக்க வேண்டுமாம்" அத்தோடு நிற்கவில்லை "ரஜினியை நம்பும் பொதுமக்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டுமாம்"  இங்கு தான் இடிக்கிறது. இங்கே எதற்காக மக்கள் வருகிறார்கள்? மக்கள் ஏன் ரஜினியை நம்ம்புகிறார்கள் ??


முகப்புத்தகத்தில் ரஜினி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அக்கவுண்டையே டெலிட் செய்துவிட்டு ஓடிய சிங்காரவேலனுக்கு, ரஜினியின் மனம் புண்படும் படி பேசியிருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாய் பிரஸ்மீட்டில் பம்மிய இந்த சிங்கார வேலனுக்கு இந்த ஒரு மாத இடைவெளியில் எங்கே இருந்து இவ்வளவு தைரியம் வந்தது.அதுவும் ரஜினியின் இமேஜின் அடிச்செங்கலை ஆட்டம் காணச் செய்யுமளவுக்கு அறிக்கை தயார் செய்ய எங்கிருந்து பலம் வந்தது.

அது தான் அரசியல். இடையில் ரஜினி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_சங்கர் படம் குறித்தான செய்திகள் வந்த போது அமைதியான இந்த பிச்சைக்கார கூட்டம் இப்போது மீண்டும் கிளம்பியிருப்பது அதுவும் வலுவுடன் கிளம்பியிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

மொத்தத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசன்மென்ட் ரஜினியினுடைய செல்வாக்கை அசைப்பது அல்லது முற்றிலும் பெயர்ப்பது. எதற்காக? ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். ரஜினியின் அரசியல் பிரவேச நினைப்பை மழுங்கடிக்க மக்கள் மத்தியில் மறக்கடிக்க. இனவாதம் பேசி ரஜினியை தாழ்த்த முயன்று தோற்ற கூட்டம் இன்று ஈனவாதம் பேசி வெல்ல நினைக்கிறது.இவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் ஆட்டமே அடங்கியிருக்கிறது.

பிச்சையெடுக்கும் போராட்டத்தை ரஜினியின் வீட்டு வாசலிலிருந்து தொடங்கப் போகிறார்களாம். இதற்கு முதல் பிச்சை போட்டு தொடங்க இருப்பவர் பெரிய அரசியல் புள்ளியாம். அது ராமதாஸ் என்று சந்தேகம் கிளப்புகிறது தி இந்து தமிழ் நாளிதழ். நீ யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு பிச்சையெடு. அது கேள்வியல்ல ரஜினியை இழுக்கக் காரணம் என்ன ? அப்படியே இழுத்தாலும் அவர் மீதான விமர்சனப் பார்வைகளும் போராட்ட வாசகங்களும் எதற்காக?


தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள ரஜினிக்கு இது தான் இறுதியான வாய்ப்பு. ஒரு வாதத்துக்காகவேணும் அவர் அரசியலுக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் அவரை எதிர்க்கப் போவது ஏறத்தாழ எல்லாக் கட்சிகளுமே தான். பா.ஜ.க தவிர !! வார்த்தை வசை பொழியப் போவது ராமதாஸும்,சீமானும் , வேல்முருகனும் தான். இம்மூவருமே இந்த பிரச்சனையில் வெளிப்படையாக ஆதரவளித்துள்ளனர். பின்னால் இருப்பது யாரோ ?? அது ஊரறிந்த ரகசியம்.

ஒரு வேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் ஜெயிக்கிறார் தோற்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவருக்கான ஓப்பனிங் எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். ஆம் அவர் படத்திற்கு கிடைக்கும் அளவு அந்த பிரம்மாண்ட ஓப்பனிங்கை ஓட்டாக்குவது அவருடைய சாமர்த்தியம் சார்ந்தது. அர்சியல் சார்ந்தது. ஆனால் அந்த ஓப்பனிங் கூட இருக்கக் கூடாது என்பது மட்டும் அல்ல அவர் அரசியல் பக்கமே திரும்பக் கூடாது என்பதற்கான நேரடி எச்சரிக்கை தான் இந்த பிரச்சனையின் உள்நோக்கம்.

லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார், " ரஜினியை கூட இருந்து பார்த்துப் பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன் , அவர் அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி " என்று. இது ஏதோ படம் வெளியாகும் சம்யத்தில் பப்ளிசிட்டி தேட சொன்னதல்ல. படம் வெளியாகி பிரச்சனை கிளம்பி பெட்டிக்கு திரும்பியவுடன் சொன்ன செய்தி.

இனிமேலும் தான் அரசியலுக்கு வருவேன் என்ற பூச்சாண்டியைக் காட்ட தயாரில்லை என்பதைத்தான் லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ஓரளவு வெளிப்படையாகவே குறிப்பிட்டார் ரஜினி. நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்ற காலம் போய் நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை. தயங்குகிறேன் என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டார். ஆக அரசியல் ஆசை ரஜினிக்கு இல்லாமலும் இல்லை.



இன்னொன்று ரஜினியின் மேலான பெரிய தவறு, தன்னுடைய பலத்தையும் செல்வாக்கையும் இந்த உலகத்திற்கு காட்டவே இல்லை. குறைந்தபட்சம் காட்டுவதற்கு முயற்சி கூட செய்யவில்லை.1996, 2002 காவிரி உண்ணாவிரத போராட்டம் இந்த நிகழ்சிகளுக்குப் பின்பு ரஜினியின் செல்வாக்கு ஒரு முறையும் சோதித்தறியப்படவில்லை.யார் யாரோ தங்களுக்கு செல்வாக்கே இல்லை என்றாலும் தேடிப் போய் பிரதமர் வேட்பாளரை சந்திப்பது,காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பது என தங்கள் இமேஜை தக்கவைத்துக் கொள்ள முயல்கிறார்க‌ள். ஆனால் ரஜினி அதை செய்யவில்லை. தன்னுடைய செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்று நம்புகிறார். இல்லை , கூட இருப்பவர்களால் நம்ப வைக்கப் படுகிறார்.இது தான் அவரின் அரசியல் நினைப்புக்கு முட்டுக்கட்டை போடும் மிகப்பெரிய சவால். அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் ஒரு ரசிகர் மன்ற மாநாடு நடத்தக்கூட முயற்சி செய்யவில்லை.  சந்திரமுகி திரைப்பட விழாவிலிருந்து ரசிகர்கள் சார்பாக வைக்கப்படும் கோரிக்கை ரசிகர் மன்ற மாநாடு. அதை ஒவ்வொரு பட விழாவிலும் அவரே சொல்வார். பின்னர் அமைதியாகிவிடுவார். இது அவருடைய பெரிய பல்வீனம் என்றே சொல்லலாம்.

சரி இப்போது ரஜினி செய்ய வேண்டியது என்ன.? ஒரு வேளை அவர் தன்னுடைய அடுத்த படம் குறித்து அறிவித்தால் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போய்விடும். அடுத்த படம் சங்கருடனோ இல்லை யாருடனோ என அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வந்தாலே போதும், இந்த போராட்டக் காரர்களுக்கு அது தான் வேண்டும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது ஆவ்வளவு தான்.

அது எப்படி ? எனச் சந்தேகம் எழுந்தால் நீங்கள் இன்னும் சிறு குழந்தையாகவே இருக்கிறீர்கள் என அர்த்தம். அதாவது அடுத்த படம் அறிவித்தால் அதை முடிக்க குறைந்தபட்சம் 1 வருடம் . சங்கர் படம் என்றால் 2 வருடம் கூட ஆகலாம். அப்போ எங்கிட்டு அரசியலுக்கு வருவது. 2016ல் தேர்தல். நீங்கள் நினைக்கலால் 2021 இருக்கிறது என்று. அப்போ , "வளர்மதி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன அந்த ரேஞ்ச் ஆயிறும்". அதாவது அப்போ அவர் வயது 70 ஐ தாண்டிவிடும். இப்போது புரிகிறதா ? எதற்காக இந்த அளவு ரஜினியின் மீது அவர்களுக்கு இவ்வளவு கோபம் என்று.


சரி அடுத்த படம் அறிவித்து பிரச்சனையிலிருந்து தற்காலிகமாக தப்பிவிடலாம் என்று நினைத்தால் அங்கே தான் ரஜினிக்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருக்கிறது. ஆம், ஒரு வேளை ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வந்தால் இத்தனை ஆண்டுகாலம் அவர் கட்டிக்காத்து வந்த மக்கள் செல்வாக்கு, ஒரே ஒரு கேள்வியில் தூள் தூளாக அடித்து நொறுக்கப்படும்.


இத்தனை ஆண்டுகாலம் உங்கள் சுயநலத்திற்காகத்தானே அரசியல் பூச்சாண்டி காட்டினீர்கள் என்ற , இந்த கேள்வி தான் அது. இன்னொரு படம் நடித்து அது ஓடினாலும் ஓடாவிட்டாலும் திரையுலகின் இன்னொரு சிவாஜியாக வலம் வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார். ரசிகர்களுக்கு அவர் மீதிருந்த அத்தனை அபிப்ராயங்களும் தளர்ந்து அவரும் ஒரு சராசரி நடிகர் என்ற நிலைக்கு தாழ்ந்துவிடும் அபாயம் கூட நிகழலாம். எனவே தன் செலவாக்கை தக்க வைக்க வேண்டுமானால் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு காரணம் ஊடகங்களோ இல்லை அவரின் ரசிகர்களோ இல்லை. முழுக்க முழுக்க அவரே காரணம். நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்திருந்தால் இந்நேரம் இவ்வளவு நெருக்கடிக்கு ஆளாகியிருக்க மாட்டார்,கமலஹாசன் போல படம் நடித்துக் கொண்டிருப்பார். அவருடைய ரசிகர்களும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பர். அதை விடுத்து அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி அவருக்காக செலவு செய்து நொடித்த ரசிகர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.அது ரஜினிக்கும் தெரியும். அவர் ரசிகர்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது அரசியலுக்கு வருவது தான் ஒரே வழி.

சமீபத்திய இவரின் மௌனமும் இதையே தான் காட்டுகின்றதென நான் நினைக்கிறேன்.இதில் எனக்கு இருவர் மீது வருத்தம்.

ஒன்று ஊடகங்கள். அவர்கள் கொடுக்கும் செய்தியை அப்படியே வெளியிடுகின்றன. நேற்றும் கூட "ரஜினியை நம்பினால் பிச்சை தான் எடுக்க வேண்டும்"  என்ற வாசகம் உடபட அப்படியே பிரிண்டிட்டிருக்கிறார்கள். ஆனால் செய்தியாளர் சந்திப்பில் அவர்களிம் எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் திணறிய செய்தி வரவே இல்லை.  அவர்களின் உண்மை முகத்தை காட்ட யாருக்கும் தைரியமில்லையா ? இல்லை வர வேண்டியது வந்துவிட்டதா ?? இது தான் நடுநிலை ஊடகங்களின் செயல்பாடு. சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் சொல்லத் திராணி இல்லாத சிங்காரவேலன் & கோ வை அசைக்கக்கூடிய சக்தி இந்த தமிழ்நாட்டு ஊடகங்கள் எதற்குமே இல்லையா???

வேல்முருகன் கூறுகிறார் இதை இப்படியே விடாமல் தமிழ் சக்திகளை ஒன்றினைத்து மாநிலந்தழுவிய போராட்டத்தை முன்னெடுக்குமாம். வெட்கமாக இல்லை எனக் கேட்க வேண்டிய ஊடகங்கள் அதையும் கொட்டை எழுத்திஉல் அச்சிட்டு அனுப்புகின்றன.





இன்னொரு கோபம் ரஜினி ரசிகர்கள் மீது. ஆம் தங்கள் அபிமான நடிகரைக் கொச்சைப்படுத்தும் இவர்களை எதிர்த்து எந்த ஒரு ரஜினி மன்றமும் போராட்டம் நடத்தவில்லை. குறைந்தபட்சம் கண்டண அறிக்கைகள் கூட வரவில்லை. 1996ல் தன் தலைவரின் உத்தரவைக் கேட்டு ஆட்சியையே மாற்றியவர்கள், 2002 ல் தன் தலைவனுடைய உண்ணாவிரத போராட்டத்தில் தங்கள் சக்தியை நிரூபித்தவர்கள், 2011ல் தங்கள் தலைவனுக்காக கோவில் கோவிலாக அலைந்தவர்கள்  திராணி இவ்வளவுதானா?? எதிர்ப்புக் குரல் வலுவாக வராததால் தான் அந்தக் கூட்டம்  இப்படி ஆட்டம் போடுகிறது. இல்லை மேலிட உத்தரவின் பேரில் அமைதி காக்கின்றனரா ?? எனக்குப் புரியவில்லை. தங்களின் பலம் என்ன என்பதைக் காட்டாததால் தான்,  செல்வாக்கே இல்லையென நினைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் கூட்டம்.


ரஜினியிடம் ஒரே ஒரு வேண்டுகோள் ,

தலைவா பொறுத்ததெல்லாம் போதும், பொங்கியெழு..... உன்னைப் பற்றி தப்புக்கணக்கு போடும் போலிகளுக்கு உன் ஆறாவது முகத்தைக் காட்டு.

தலைமையே இல்லாத தமிழகத்துக்கு தலைமை ஏற்க வா !! இனி நீ அமைதி காக்கும் ஒவ்வொரு நாளும் உனக்கெதிரான சதிவலை பெரிதாகி பெரிதாகி உன்னையும் எங்களையும் வரலாற்றிலிருந்தே மறைத்துவிடும். அந்த அளவு வீரியத்துடன் பின்னப்படும் அச்சதிவலையை அறுக்க உன் ஒரு வார்த்தை போதும். அந்த ஒருவார்த்தை தமிழக அரசியலையே திருப்பிப் போடும். ஆம் அது  மாநாட்டுத் தேதி.......


அது அரசியல் கட்சி துவக்க விழா மாநாடோ , இல்லை சாதாரண ரசிகர் மன்ற மாநாடோ, மேடையில் நீ  நின்று எங்கள் மத்தியில் நீ உதிர்க்கும் அந்த புன்னகையைக்  காண ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு கோடிக் கண்களில் ஒரு ஜோடிக் கண்கள் என்னுடையதாக இருக்கும். அந்த அறிவிப்பு நம் கட்சியின் பெயராக இருந்தாலும் சரி நம் அடுத்த படத்தின் பெயராக இருந்தாலும் சரி வெற்றி பெற வைக்க என்னுடைய இரு கரங்களும் காத்திருக்கின்றன.


11 comments:

  1. வணக்கம்

    இரசிக்கும் பல கோடி கண்களில் இரண்டு கண்கள் என்னுடையது அருமையாக சொல்லியுள்ளீர்
    விரிவான கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எரியும் தீப்பிளம்பு:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  3. thanks sir( அந்த புன்னகையைக் காண ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு கோடிக் கண்களில் ஒரு ஜோடிக் கண்கள் என்னுடையதாக இருக்கும் )...

    ReplyDelete
  4. மிக மிக அருமையான பதிவு சூப்பர்

    ReplyDelete
  5. தொடர்ந்து எழுதுங்க சீலன்...

    ReplyDelete
  6. நண்பரே,

    ரஜினியின் தீஈஈஈஈ விர ரசிகர்களில் நீங்களும் ஒருவர் என்று தெரிகிறது. ஊடகங்களை சாடியிருக்கிறீர்கள். ஆனால் ரஜினியை இந்த அளவுக்கு வளர்த்துவிட்டதில் இதே நடுநிலை ஊடங்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ரஜினியின் அடுத்த படத்தை வெற்றிப் படமாக்குவது இருக்கட்டும் . முதலில் லிங்கா வுக்கு ஏன் அதைச் செய்யவில்லை? இந்த பிரச்சனையே வந்திருக்காதே.

    ReplyDelete
  7. நண்பரே,

    ரஜினியின் தீஈஈஈஈ விர ரசிகர்களில் நீங்களும் ஒருவர் என்று தெரிகிறது. ஊடகங்களை சாடியிருக்கிறீர்கள். ஆனால் ரஜினியை இந்த அளவுக்கு வளர்த்துவிட்டதில் இதே நடுநிலை ஊடங்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ரஜினியின் அடுத்த படத்தை வெற்றிப் படமாக்குவது இருக்கட்டும் . முதலில் லிங்கா வுக்கு ஏன் அதைச் செய்யவில்லை? இந்த பிரச்சனையே வந்திருக்காதே.

    ReplyDelete
  8. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  9. சீலன் தொடர்பு கொள்ள வேண்டுமே...

    ReplyDelete

  10. சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete