எங்கள் பல்கலைக்கழகத்தின் முதல் பிரிவுபச்சார விழாவில் நான் எழுதி வாசித்த பிரிவு மடல்...............
இந்த நான்கு ஆண்டுகள் வெறும் ஆண்டுகள் மட்டுமல்ல!
இங்குள்ள ஒவ்வொருவரின் வரலாறு எழுதப்பட்டதன் சரித்திரக் குறியீடு !
வாழ்க்கைப்பாடத்தை அனுபவித்து மகிழ்ந்த ஒரு காவியக் கணக்கு!
பூமியை ஆள புவித்தகவல்களை பேராசிரியர்களிடமிருந்து பெற்றதன் அடையாளம்!
நண்பனுடைய புதுச்சட்டையை அவனுக்கே தெரியாமல் அணிந்துவந்த நாட்களின் தொகுப்பு!
வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சென்ற சினிமாக்களாக,
கல்லூரி கலைவிழாக்களில் கலந்துகொண்ட போட்டிகளாக,
தோழர்களின் டிபன் பாக்ஸ்களை காலிசெய்த இடைவேளைகளாக,
நட்பாக,காதலாக,சண்டைகளாக,தேர்வுகளாக,திட்டுகளாக,ஆசைகளாக,அரியர்களாக,விடுமுறைகளாக ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அழியாத கோலங்களை வரைந்து சென்றிருக்கும் இந்த நான்கு ஆண்டுகள் நம்மைக் கடந்து செல்லவில்லை! கடத்தி செல்கிறது புது உலகத்தைக் காட்டுவதற்கு!
நினைவுக் கொசுக்களால் நித்திரை தொலைக்கப்போகும் நீள இரவுகளில் இந்த நினைவுகளையெல்லாம் அசைபோட்டுப் பாருங்கள்!
அடுத்த கணமே உங்கள் கண் முன்னால் இந்த அண்ணா பலகலைக்கழகம் வந்து நிழலாடிக் கொண்டிருக்கும் !
பல்கழைக்கலகம் மட்டுமல்ல அங்குள்ள உங்கள் வகுப்பறையின் ஒரு மூலையிலே சுவரில் கிறுக்கிய கிறுக்கல்கள் கூட உங்கள் கண்களைவிட்டு மறையப்போவதில்லை!
எந்த ஒரு தாய்க்கும் தனது மூத்த குழந்தையின் மீது கொஞ்சம் கரிசணம் அதிகமாக இருப்பது போல இந்த பல்கலைகழகத்திற்கும் உங்கள் மேல் கரிசணம் அதிகம் தான்? கல்லூரிக்கு இருக்கிறதோ? இல்லையோ? எங்களுக்கு அதிகம் தான் , எத்தனை பேரைப் பார்த்தாலும் உங்களைப் பார்க்கும் போதுமட்டும் ஏதோ இனம் புரியாத தாகம் , நேசம்...
தனையனாக, தமக்கையாக,தோழனாக, தோழியாக,சகோதரனாக, சகோதரியாக எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த வழிகாட்டியாக எங்களை வழிநடத்தியவர்கள்!
இன்று வழிகாட்டியவர்களுக்கு வழியனுப்புவிழா! விம்முகிறது நெஞ்சம் இருந்தும் விழைகிறது கரங்கள் விடைகொடுப்பதற்கு!
நாங்கள் என்றுமே முதல்வர்கள் தான் என்பதனை மீண்டும் ஒருமுறை இந்த உலகத்திற்கு காட்ட, அன்று பற்றிய கரங்களை இன்று விடுகின்றோம் மீண்டும் ஒருநாள் இணைந்து கரகோசம் எழுப்ப!
உங்களை வழியனுப்புவது நாங்கள் மட்டுமல்ல இந்த நெல்லை மாநகர வீதிகளும் தான்!
எதிர்காலத்தில் நேரமிருந்தால் இங்குள்ள வீதிகளில் நடந்து தேடிப்பாருங்கள் நீங்கள் தொலைத்த நினைவுகளை அது தாங்கி நிற்கும்!
உங்களுடைய வெற்றி வாழ்க்கையில் சாதிப்பதில் மட்டுமல்ல, உங்களுக்கு அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்த இந்த பல்கலைக்கலகத்திற்கு நீங்கள் ஏற்படுத்தப்போகும் வரலாற்றிலும் தான்!
குறித்துக் கொள்ளுங்கள் இந்த நாள் உங்கள் வாழ்நாளின் எந்த நாளிலும் மறக்க முடியாத நாளாகப்போவது மட்டும் நிஜம்!
ஒன்று மட்டும் சொல்கிறேன் இது முடிவல்ல முடிவுக்ளின் பின்னால் ஏற்படப்போகும் புது அத்தியாயத்தின் ஆரம்பம்!!
இன்று பிரிகின்றோம், நம்பிக்கை கொண்டு பாருங்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திப்போம் !!!!!!!!!!!!!!!!
வாழ்த்துகளுடன் உங்கள் சீலன், மற்றும் உங்கள் இளைய மாணவர்கள் ,அமைப்பியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி......
உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்..
ஒவ்வொருத்தருக்கும் வாழ்நாளின் மறக்க முடியாத நாள்... நினைத்தாலே இனிக்கவும் செய்யும்... ஏங்கவும் செய்யும்...
ReplyDeleteஆம் ஐயா , எல்லோரும் அழுதே விட்டனர்... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.....
Deletethose golden days of each and every pne!!!
ReplyDeleteyes mam, glden moments also. thanks for your coming and keep visit my blog mam.....
Deletemissing that wonderful moments......................,
ReplyDeletethanks for your coming and keep visit my blog madhan
Deleteநல்ல பதிவு . . .
ReplyDeleteஅருமை