Thursday, April 17, 2014

கேப்டன் விஜயகாந்த்


கேப்டன் விஜயகாந்த் 







இன்றைய தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட கேப்டனுக்கு முக்கியமாக இருக்கிறது. இது முரசுக்கு  ஒரு மானப்பிரச்சனை என்று கூட சொல்லலாம். ஆனால் அதை விஜயகாந்த் புரிந்துகொண்டிருக்கிறாரா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்பதே விடையாக இருக்கும். 2005ல் கட்சி ஆரம்பித்தபோது இவர் மாற்று அரசியல் செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே விடையாகக் கிடைத்துள்ளது. ஆனாலும் இவருக்கென்று வாக்கு வங்கி உருவாகியிருக்கும் நிலையில் அதை வளர்த்துக்கொள்வதில் அக்கறை செலுத்தாமல் குறைத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்.



2006 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த் அதில் கணிசமாக ஒட்டு வாங்கவும் தவறவில்லை.  2009ல் மக்களவையில் தணித்துப்போட்டியிட்டு அரசியல் கட்சிகளை ஆட்டம் காணச்செய்த விஜயகாந்த் இன்று 2 மக்களவை தொகுதிக்காக தனது வாக்கு வங்கியை அடமானம் வைத்திருக்கிறார். மக்களோடும் தெய்வத்துடனும் கூட்டணி என்று சொல்லி தேர்தலை சந்தித்த கேப்டன் 2011 ஆம் ஆண்டு அம்மாவுடன் கூட்டணி வைத்து சட்டப்பேரவைத்தேர்தலைச் சந்தித்து வெற்றியும் கண்டார்.


2011 ல் ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றியதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான் என்பது நாடறிந்த ரகசியம். ஆனால் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவர் பதவியை அடைந்ததற்கு அம்மாதான் காரணம் என்பதும் உண்மை. ஆம் ஸ்பெக்ட்ரம் ஊழலைத்தவிர்த்து திமுகவை குறைசொல்ல ஏதும் இல்லை, இலங்கை தமிழர் பிரச்சனை கூட அவ்வளவாக எடுபட்டிருக்காது, ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் 25000 வாக்கு வைத்திருக்கும் விஜயகாந்த் கட்சி தனித்து நின்றிருந்தால்.


அன்றைய சட்டப்பேரவைத்தொகுதி முடிவுகளை உற்று நோக்கினால் இந்த உண்மை விளங்கும். ஆம் அதிமுக கூட்டணி ஜெயித்த இடங்களில் ஏறத்தாழ‌

90 - 100 தொகுதிகள் 20000 வக்கு வித்தியாசத்திற்கு குறைவான வித்தியாசத்தில் ஜெயிக்கப்பட்டவை. ஒருவேளை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கேப்டனின் தேமுதிக தனித்து நின்றிருந்தால் இன்றைய நிலைமைட‌யே வேறு ஆம், அந்த 90 - 100 தொகுதிகளில் கண்டிப்பாக திமுக 50 - 60 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். எஞ்சிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் திமுக கூட்டணி 100  -

120 இடங்களிலும் சமமான இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றிபெற்று தொங்கு சட்டப்பேரவை அமைந்திருக்கும். ஆனால் தேமுதிக வின் வாக்குகளால் அதிமுகவும் அதிமுகவின் வாக்குகளால் தேமுதிகவும் பயனடைந்தன என்ற உண்மையை மறந்துவிட்டோம் இன்று.






அதற்கு பிறகு சட்டப்பேரவையில் அம்மா vs கேப்டன் களேபரங்கள் ஊர் அறியும் . அப்போதிலிருந்து தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார் முதல்வர். தேமுதிக என்ற கட்சியை ஒழித்துக்கட்டுவதை தனது முக்கிய கடமையென நினைத்து அதை சரியாக செய்துவருகிறார். இதில் தான் விஜயகாந்தும் ஜெயலலிதாவும் வேறுபடுகின்றனர். அவரின் ராஜ தந்திரத்திற்கு முன்னால் விஜயகாந்த் காணாமல் போய்விடுவாறோ என்று எண்ணத்தோன்றுகிறது. சரி இப்போது விழித்துக்கொள்வார் அப்போது விழித்துக்கொள்வார் என்று பார்த்தால் ம்கூம் நடக்கவே இல்லை.



சரி அவருக்கு எதிராக அரசியல் செய்யவேண்டிய நிலைக்கு விஜயகாந்த் வந்துவிட்டார். அப்படியானால் அதற்கு சரியான இடம் திமுக தான் என்பதை மறந்துவிட்டார். கலைஞர் நேரடியாக அழைப்புவிடுத்தும் அங்கு செல்லாமல் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார். இது அவரின் மிகப்பெரிய தவறு என்பது என் எண்ணம்.அதற்கு விஜயகாந்தின் ராஜ தந்திரம் காரணமாம். இப்போது நடக்கும் மக்களவைத்தேர்தலைவிட அவருக்கு 2016ல் நடைபெறப்போகும் சட்ட்ப்பேரவைதான் முக்கியமாம். இப்போது கலைஞரோடு கூட்டணி வைத்துவிட்டு இன்னும் இரண்டு வருடத்தில் அவரையே எதிர்க்க வேண்டுமே என்ற ராஜ தந்திரம் தான் அது. ஆஹா எவ்வளவு அருமையான எண்ணம். நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் தகுந்த கூட்டணியில் அல்லவா சேர்ந்திருக்க வேண்டும். பா.ஜ.க உடன் சேர்ந்தார். யாரை எதிர்த்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறாரோ அவருடன் எதிர்காலத்தில் சேரப்போகும் கட்சியுடன் , ஒருவேளை நரேந்திர மோடி பிரதமராக வந்தால் அந்த அமைச்சரவையில் இவரும் இடம்பெறுவார், இவருடைய எதிரியும் இடம்பெறுவார். அல்லது இவர் கழட்டிவிடப்படுவார்.




எது எப்படியாயினும் நஸ்டம் விஜயகாந்துக்குத்தான். இடையில் காங்கிரஸ், தனித்துப்போட்டி என இமேஜை வேறு கெடுத்துக்கொண்டார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் விஜயகாந்திற்கு அரசியல் தெரியவில்லை. தான் இருக்கும் இடத்தில் உண்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கு பொருந்தினாலும் அரசியலுக்குப் பொருந்தாது. அதை செய்து வருகிறார் captain. தமிழ்நாடு முழுவதும் அலைந்து கொண்டு தான் சார்ந்த கட்சிக்கு, கூட்டணிக்கு உழைத்து வருகிறார். எங்கே போனார்கள் தமிழினத்தலைவர்கள் வைகோ ! ராமதாஸ்! பொன்னார்! இல.கணேசன்! போன்றவர்கள்.


சரி இவரின் உழைப்புக்கு ஊதியம் கிடைக்குமா என்று பார்த்தால் அதுவும் சந்தேகம் தான். சிறுபான்மையின மக்களைப் பகைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், தனது வாக்குவங்கியையும் அடமானம் வைத்துவிட்டார். ஒருவேளை இவர் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு அதிமுகவை பகைத்துக்கொள்ளுமேயானால் அது தான் பா.ஜ.க இவருக்கு கொடுக்கும் உண்மையான  ஊதியம். அது நடைபெற குறைந்தபட்ச வாய்ப்புதான் உள்ளது. சரி போகட்டும் 2016 இருக்கிறது என்று தேற்றிகொள்ள்ளலாம் . அது கூட‌  2016 வரை இந்த கூட்டணி நிலைத்தால் தான், சட்டப்பேரவையில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக வலுவடைய முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. வைகோ விஜயகாந்தை முதல்மைச்சராக, குறைந்தபட்சம்  முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வாரா ? இல்லை ராமதாஸ் தான் ஏற்றுக்கொள்வாரா? கண்டிப்பாக மாட்டார்கள்!!!!


தமிழ்நாட்டில் நடப்பது வாக்குவங்கி அரசியல் தான் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை.




என்னைப் பொறுத்தவரை விஜயகாந்த், திமுகவுடன் சேர்ந்து தேர்தலைச்சந்தித்து அவரின் அரசியல் எதிரிக்கு தக்க பாடம் புகட்டியிருக்கவேண்டும். அல்லது தனித்தோ காங்கிரஸ் அல்லது இடது சாரிகளோடோ சேர்ந்து தேர்தலைச்சந்தித்து தனது பலத்தை மீண்டும் ஒருமுறை காட்டியிருக்கவேண்டும். ஆனால் இதை செய்யாமல் தானும் ஒரு அரசியல்வாதிதான் எனக்காட்ட ஒரு கொள்கை முரணான கூட்டணீயில் சேர்ந்து அவரின் அரசியல் எதிரிக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார். காலம் தான் பதில் சொல்லவேண்டும் அவர் அரசியலைக் கற்றுக்கொண்டு மீண்டு வருகிறாரா இல்லையா என்பதை!!








நான் எப்போதுமே மாற்று அரசியல் ஏற்படவேண்டும் என்பதைத்தான் விரும்புவேன். திமுகவும் சரி அதிமுகவும் சரி இரண்டுமே ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள் தான். ஆனால் தேமுதிகவை அவ்வாறு நினைக்கவில்லை. இன்று அதுவும் ஒரு மட்டைதான். என்ன வித்தியாசம் என்றால் இன்னும் ஊறிவிடவில்லை அவ்வளவு
 தான்.



உங்கள் சீலன்!!





வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள், உங்கள் 

கருத்துகளை தெரிவிக்கவும் ஒரு கணம் 

ஒதுக்கலாமே? தயவு செய்து!!!!

7 comments:

  1. பதிவுகள் தொடரட்டும் அலசல்கள் தொடரட்டும்..

    ReplyDelete
  2. காலம் பதில் சொல்லட்டும் கேப்டனுக்கு

    ReplyDelete
    Replies
    1. thanks for your coming sir keep visit my blog sir..

      Delete
  3. அருமையான பதிவு

    ReplyDelete