Saturday, February 1, 2014

ரஜினியின் ஆளுமை

ரஜினியின் ஆளுமை





நான் சிறுவனாக இருக்கும் போது எல்லாரையும் போலவே எனக்கும் 
இரண்டின் மீது அபிப்ராயம் இருந்தது. ஒன்று கிரிக்கெட்! மற்றொன்று சினிமா! என் வயது தோழர்கள் அனைவருக்கும் விஜய், அஜீத் பிடித்திருந்தது.(கில்லி,வில்லன் வந்த சமயங்கள்) ஆனால் எனக்கு மட்டும் ரஜினியை பிடித்திருந்தது. என்ன காரணம் என சொல்லத்தெரியவில்லை. அதேபோல கிரிக்கெட், அனைவருக்கும் சச்சின்,கங்குலி பிடித்திருக்க எனக்கு மட்டும் ராகுல் டிராவிடை பிடித்திருந்தது.
ஆனால் இதற்கு காரணம் இருந்தது.. அவருடைய விக்கெட் கீப்பிங் ஸ்டைல் மற்றும் அணியை வெற்றி பெற வைக்கும் திறமை.





இப்பொழுது எதற்கு இதை கூறுகிறேன் என நீங்கள் நினைக்கலாம். காரணம் இருக்கிறது....

திரைத்துறையில் ரஜினியின் ஆளுமை எவ்வாறு இருக்கிறது என்பது நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அவருடைய ஆளுமை எப்படி இருக்கிறது என்பதை எனக்கு ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு!






1975 களில் திரைத்துறையின் கதவைத்திறந்து உள்ளே நுழைந்த அவர் 1980 ல் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த அவர், 1985 களில் திரையுலகின் முதல் நிலைக்குச் சென்ற அவர், 1990 களில் மக்கள் நாயகனாக ஏற்றுக்கொள்ள‌ப்பட்ட அவர், 1990  களில் அரசியல் சக்தியாக விளங்கிய அவர், 2010 களில் உலக நட்சத்திரமாக ஜொலித்து வரும் அவர் இன்று மக்கள் மத்தியில் எவ்வாறு பார்க்கப்படுகிறார்?






நான் இங்கு சொல்லும் நிகழ்வுகள் அனத்தும் சிறிதும் மிகைப்படுத்தப்ப‌டாதவை என்பதையும், அனைத்தும் நான் நேரில் பார்த்தவை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கே முன்னர் தோன்றியது , ரஜினி 90 களில் மக்கள் செல்வாக்கு நிறைந்தவராக இருந்திருக்கலாம்! இப்போது அப்படி இல்லை, அனால் ஊடகங்களால் இன்னும் அப்படி சித்தரிக்கப்படுகிறார் என்று நானே பல நேரங்களில் நினைத்ததுண்டு! ஆனால் இந்த நிகழ்ச்சிகளை பார்த்த பிறகு ஊடகங்கள் கூறுவது உண்மையே! இப்போது மட்டுமல்ல எப்போதும் அவருடைய மக்கள் செல்வாக்கு குறையாது என்பதையும் தெரிந்துகொண்டேன்.


நிகழ்ச்சி1;

 நான் கல்லூரி விடுமுறைமுடிந்து மீண்டும் கல்லூரி செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு (திருநெல்வேலி செல்வதற்காக) இரவு 9.30 க்கு பேருந்தில் ஏறினேன். வண்டி கிளம்பியவுடன் பேருந்தில் உழைப்பாளி திரைப்படம் போட்டார்கள். என்ன ஆச்சரியம்  வண்டியில் ஒருவருமே தூங்கவில்லை! இது அது சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் என்பதால் தூங்காமல் பார்த்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம்? ஏன் நானே அப்படித்தான் முதலில் நினைத்தேன்! ஆனால் போகப்போக பேருந்தில் நிலமை மாறியது. ஒருகட்டத்தில் ரஜினி  பன்ச் வசனங்கள் பேசும் போது கைதட்ட ஆரம்பித்துவிட்டனர். இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு 10, 15 பேர் விசில் அடித்து தலைவா என்று குரல் எழுப்பி திரை அரங்கமாகவே மாற்றி விட்டனர்.  பொறுத்திருந்து பார்த்த பேருந்தின் நடத்துனர் படத்தை நிறுத்திவிட்டு படம் பார்ப்பதாக இருந்தால் அமைதியாக பார்க்க வேண்டும் இல்லையெனில் படம் போடப்பட மாட்டாது என்று எச்சரிக்கை செய்த பிறகுதான் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர்! பிறகு இரவு 11.30 மணிக்கு? இப்படி நடந்து கொண்டால்.. என்னதான் பலருக்குப் பிடித்திருந்தாலும் சிலர் இதையெல்லாம் ரசிக்க மாட்டார்கள் தானே? 





நிகழ்ச்சி2;

  சிவாஜி 3டி படம் பார்ப்பதற்காக ஒரு வெள்ளிக்கிழமை படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட  3 வாரம் கழித்து நண்பர்களுடன் நெல்லை முத்துராம் திரையரங்கிற்கு சென்றேன். கீழே ராம் திரையரங்கில் துப்பாக்கி எனும் மெகா ஹிட் திரைபடம் ஓடிக்கொண்டிருந்தது.. திரையரங்கில் அதிக கூட்டம் அலை மோதியது. துப்பாக்கி படத்திற்கு வந்தவர்களாய் இருக்கும் என உள்ளே நுழைந்தால், இல்லவே இல்லை அனைவரும் துப்பாக்கிக்கு வரவில்லை ஒரு ரீரிலீஸ் திரைப்படம், அதுவும் பலமுறை டி.வியில் போடப்பட்ட திரைப்படம், வந்து கிட்டத்தட்ட 3 வாரம் நிறைவடையப்போகும் திரைப்படமான சிவாஜி திரைப்படத்திற்கு! அதுவும் அந்த நாள் விடுமுறை தினம் கூட இல்லை! வெள்ளிக்கிழமை!  ஹவுஸ் புல் என்று பொய் கூற மாட்டேன்! ஆனால் ஏ.சி இருக்கைகளுக்கான டிக்கெட் எங்களுக்கு கிடைக்கவில்லை. சாதாரண இருக்கை
களிலும் கிட்டத்தட்ட 70% சீட்டுகள் நிரம்பி விட்டன! திரையரங்கினுள் நடந்ததை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும்.

 என்னுடைய சில விஜய் ரசிக நண்பர்கள் கீழே ஓடிக்கொண்டிருந்த மெஹாகிட் திரைப்படமான துப்பாக்கிக்குச் சென்றிருந்தனர். அவர்கள் வெளியில் வந்த பிறகு கேட்டேன். படதிற்கு கூட்டம் எப்படி என? 15% இருக்கைக‌ளே நிரம்பியிருந்ததாகவும்,அதற்கு  அன்று வேளை நாள் எனவும் காரணம் கூறினர்.

இதேபோல பின்னர் நானே சிங்கம் 2 படம் ரிலீஸான முதல் வார இறுதி நாள் இரவுக்காட்சிக்கு நெல்லை பேரின்ப விலாஸ் போனேன். அப்போதும் 20 % இருக்கைகள் கூட நிரம்பியிருக்கவில்லை! சிங்கம்2 வும் மெஹா ஹிட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது!








நிகழ்ச்சி3;   

இன்னொரு முறை கல்லூரியிலிருந்து ஊருக்கு போவதற்காக, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையதிற்கு இரவு 12 மணிக்கு வந்திருந்தேன். அந்த பேருந்து நிலையத்தில் தினமும் இரவு நேரத்தில் திரைப்படங்கள் போட்டு பயணியர் காத்திருக்கும் வளாகத்தின் பின்புறம் உள்ள கன்ட்ரோல் ரூமில் அதிகாரிகள் பார்ப்பது வழக்கம். போடப்படும் திரைப்படங்களின் ஒலி பேருந்து நிலைய வளாகத்தில் ஆங்காஙே இருக்கும் ஒலிப்பெருக்கியில் கேட்கும். நான் பல முறை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செண்றிருக்கிறேன். அன்றுமட்டும் அந்த அறைக்கு வெளியே ஏறத்தாழ 50 70 பேர் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். நான் அதை கவனிக்க நேரம் இல்லாதவனாய் என்னுடைய பேருந்தில் ஏறிவிட்டேன். ஏறிய‌ பிறகு ஒலிப்பெருக்கியில் கேட்ட சத்ததை வைத்து அது அண்ணாமலை திரைப்படம் என அறிந்து கொண்டேன்! எனக்கு ஒரே ஆச்சரியம்,இதுவரை பல திரைப்படங்கள் அங்கு ஓடி நான்  ஊரிலிருந்து வரும்போதும்  போகும்போதும் பார்த்திருக்கிறேன். ஒருநாள் கூட அன்று கண்ட காட்சிகளை பார்க்கவில்லை.இனிமேல் பார்த்தாலும் அதுவும் ரஜினி படமாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்!



மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளும் ஊடகங்கள் கூறுவது உண்மைதான் என எனக்கு உணர்த்தியது..  இவற்றை எதற்காக நான் கூறுகிறேன் என்றால் நேற்று ரஜினியின் பெங்களூர் வீட்டில் ரசிகர் கூட்டம் கூடியதை ஊடகங்கள் வெளியிட்டதை பார்த்த என் நண்பன் என்னிடம் 10 பேர் வந்திருப்பாங்க, 100 பேர்னு பொய் சொல்லீட்டாங்கடா. இப்பல்லாம் ரஜினிக்கு செல்வாக்கு இல்லை என நான் முன்னர் நினைத்த கேள்வியை என்னிடம் கேட்டான். அப்பொது தோன்றியது தான், அவனிடம் என் அனுபவங்களை கூறியபோது இதை ஒரு பதிவாக போடுமாறு கூறினான்! 




ரஜினி இன்று மட்டும் அல்ல என்றுமே மக்கள் செல்வாக்கு குறையாதவர்! எத்தனை விமர்சனங்கள் அவர்மீது வந்தாலும் அவருடைய மக்கள் செல்வாக்கு குறையாது..

3 வருடங்களுக்கு ஒரு முறை படம் நடிக்கும் போதே இப்படி என்றால்,முன்னர் போல‌ வருடத்திற்கு 3 படம் நடித்தால்?











உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்!










4 comments:

  1. He is Ever Green .

    ReplyDelete
  2. thanks for your coming. keep visiting my blog sir! @Anonymous

    ReplyDelete
  3. சினிமாவின் வழியாக உலகத்தைப் பார்க்கும் மக்களுக்கும், சமூகநிகழ்வுகளில் மக்களின் வாழ்க்கைத் தர மாற்றங்களைக் கவனிக்கும் சிந்தனையாளருக்கும் இடையில் இந்த ஊடகங்கள்... சரியான நிலையைச் சரியாகக் கவனித்து சரியான முடிவுக்கு வாருங்கள் சீலன்... நாம் மேய்ப்பர்கள்பின்னால் ஓடும் ஆடுகளல்ல. தங்கள் கருத்தில் மாறுபடுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். பெரியாரும், அம்பேத்காரும் உங்கள் பார்வைக்கே வரவிலலையா? இதனால், ட்ராவிடையும் ரஜனியையும் நான் மட்டப்படுத்துகிறேன் என்று பொருளல்ல... மாற்றி யோசித்துப் பாருங்கள் அன்பு கூர்ந்து.

    ReplyDelete
  4. yes , rajni sir is always great..

    ReplyDelete