Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, February 25, 2016

ஒரு நாள்


ஒரு நாள்




நள்ளிரவுத் தூக்கம் தூக்கத்துல கனவு

கனவுல அவ வந்தா தூக்கமும் கனவாகும்

கனவு கலைய தூக்கம் தெளிய காலை மணி எட்டாகும்

குளிச்சும் குளிக்காம வந்து

வளிச்சிக்குட்டு நிப்பேன் தலைய ‍ -  பின்னே 

சாப்பிட்டும் சாப்பிடாம காலேஜ் வந்து நின்னா

கண்களும் தேடும் நாலுபுறம் ‍-  அவள‌

க்ளாஸ ஒரு உருட்டு உருட்டி நிமிஷத்துக்கு 

பத்துதரம் உத்து உத்து பார்த்தா

காதோர அழகுமுடி மறச்சு நின்னு ஆடும் 
                      
                      -   கண்ண பாக்க விடாம‌

காத்துல அந்த முடி ஒதுங்குமா ஒதுங்காதானு

எதிர்பார்த்துக் காத்துருந்தா முடிஞ்சுபோகும்  - ஒரு நாளே...!




( நண்பன் காளியின் டைரியிலிருந்து )










Wednesday, February 24, 2016

பிரண்டன் மெக்கல்லம் - ‍ நவீன யுகத்தின் கிரிக்கெட் வீரன்

பிரண்டன் மெக்கல்லம் - ‍ நவீன  யுகத்தின் கிரிக்கெட் வீரன்





கோடி மகன்களின் நாயகனே கோடி மக்களின் மன்னவனே.. இந்த வரிகள் அநேகம் பேருக்கு மறந்து போயிருக்கலாம்..  எனக்கு நினைவிருக்கிறது.... ஆம் முதல் ஐபிஎல் தொடரின் தமிழ் தீம் சாங். ஏகத்துக்கும் எதிர்பார்த்த ஒரு தொடர். இது வரையில் பார்த்திராத  ( ஆசிய 11, உலக 11 எல்லாம் பேப்பரில் படித்தது தான்) ஒரு புது முயற்சி. வேற்று நாட்டு வீரர்களுடன் உள்ளூர் அணிகளுக்கெதிரான கலர்புல் டி20 தொடர். இந்தியா உலகக் கோப்பை வென்றிருந்த நேரம், டிராவிட்டின் அணி நீக்கத்துக்குப் பின் அவர் பெங்களூர் கேப்டனான தருணம் என உலகக்கோப்பையைக் காட்டிலும் அதிகம் எதிர்பார்த்த தொடர்.


Monday, February 22, 2016

நீயா நானா‍- கடைசி பென்ச் மாணவர்கள்

நீயா நானா‍- கடைசி பென்ச் மாணவர்கள்


இடையில் என்னவோ தெரியவில்லை அந்த மழை வெள்ள எபிசோட்டிற்கு பிறகு நீயா நானாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவே இல்லை. இன்று ஹாஸ்டலில் இரவு உணவை முடித்துவிட்டு எதார்த்தமாக சானல் மாற்றும் போது BACK BENCHERS பற்றிய விவாதம் கண்ணில் பட்டது. அதே நேரம் ப்ரோ கபடியை அனைவரும் ஆர்வமாய் ரசித்துக் கொண்டிருந்தனர். ஏதொ நம்ம இன்ப்ளுயன்ஸ் வச்சு கொஞ்சமாய் ஆள்திரட்டி, சண்டை போட்டு கடைசியில் மாற்றச் செய்துவிட்டோம். இந்த மாதிரி கஸ்டப்பட்டு சண்டைபோட்டு மாற்றும் டாபிக்கெல்லாம் சில சமயங்களில் மொக்கையாகிவிடும், அது பெரிய பல்ப் ஆகிவிடும் .ஆனா நேத்து தப்பிச்சுட்டோம்னு தான் சொல்லணும். சுருக்கமான ஆனால் ஒரு சிறப்பான நீயா நானா நேற்றையது.

Tuesday, February 16, 2016

டிராவிட்டுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது...?


டிராவிட்டுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது...?

ராகுல் டிராவிட். உலகின் ஆகச்சிறந்த டெக்னிக்கல் கிரிக்கெட்டர். ஆனால் அதிகம் பேசப்படாத, அதிகம் மரியாதை செலுத்தப்படாத, மற்ற வீரர்களின் சாதனைகளின் நிழலிலேயே தன் மொத்த சாதனைகளையும் கடந்துவிட்ட கவனிக்கப்படாத கிரிக்கெட் வீரர் அவர் தான். சரி வீரராகத்தான் அதிர்ஸ்டம் இல்லையென்றால் ஓய்வுக்குப் பின்னரும் கூடவே அப்படியே நடப்பது ஒவ்வொரு டிராவிட் ரசிகரின் துரதிஸ்டம். தொடரும் உதாரணம், நேற்றைய தோல்வி. இருக்கட்டும் துரதிஸ்டம் எவ்வளவு தூரம் டிராவிட்டை துரத்துகிறதோ அதே போல் நாங்களும் பின் தொடர்வோம் எப்போதும்.

Thursday, February 11, 2016

இறுதிச்சுற்று


இறுதிச்சுற்று

கொஞ்சம் லேட் என்றாலும், மனதில் நினைத்ததை எழுதிவிடலாம் என்பதால் தான்......

அரண்மனை 1 முதல் நாள் இரவுக்காட்சி ஹாஸ்டலே வெக்கேட் ஆனதைப் போல எல்லோரும் சென்று பார்த்த திரைப்படம். ஆனால் என்னவோ தெரியவில்லை, அரண்மனை 2 யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, இன்னும் சொல்லப் போனால் விருப்பமும் இல்லை. இறுதிச்சுற்று பட ரிலீஸன்று க்ளாஸ் நண்பர்கள் மாலைக் காட்சி சென்று வந்து படம் குறித்து ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள். என்ன டா என விமர்சனம் படிக்காமல் ஸ்டார்ஸை மட்டும் பார்த்தேன், 4 ஸ்டார் இருந்த்து. அட, மிஸ் பண்ணக் கூடாது என அடுத்த நாள் இரவுக்காட்சிக்கு கிளம்பினோம். ( எப்போதும் இரவுக்காட்சியில் பார்ப்பது தனி சுகம், அதும் பார்த்துவிட்டு வாட்ஸ்மேனுக்கும் ட்யூட்டருக்கும் தெரியாமல் ஹாஸ்டல் சுவரை ஏறிக் குதித்து வரும் த்ரில்லும் கூட ) படம் நன்றாக இருக்கிறது என்ற வாய்மொழி விமர்சனம் பரவியிருந்ததால் நல்ல கூட்டம். அதுவும் இளைஞர்கள் கணிசம். சனி இரவுக்காட்சி, நெல்லையின் பெரிய தியேட்டரில் (பிவிடி) 80 % நிரம்புவது சாதாரண விசயம் அல்லவே..?

Monday, December 7, 2015

கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?


 கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?




தமிழக மக்களின் மனிதத்தையும் மக்கள் ஒற்றுமையையும் கண்டு இந்தியா மட்டும் அல்ல உலகமே மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மீட்பு பணிகள்  கடந்து மறுகுடியமர்வு வரைக்கும் உதவிக்கரம் நீண்டு கொண்டிருக்கிறது. எல்லாமுமாக இருந்து செயல்படுவது பிறபகுதி பொதுமக்களும் தன்னார்வலர்களுமாகத் தான் இருக்கிறார்கள். அப்படியானால் அரசு...? இருக்கிறது, ஸ்டிக்கர் ஒட்ட, அடியாட்களை வைத்து மிரட்ட, நொடிக்கொருமுறை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க என்று வசனம் பாட, அதற்கும் மேல் அறிக்கை அர்ர்ச்சனை நடத்த. வெட்கம் மானம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கமலஹாசன் அவர்கள் கூறிய கருத்துக்கு 3 பக்க அளவுக்கு கண்டன அறிக்கை விடத்தெறிந்த அரசுக்கு மக்களுக்கு ஆறுதல் சொல்லிக் கூட அறிக்கை வெளியிட முடியவில்லை. அறிக்கை கூட வேண்டாம் டிவியில் கூடவா  தோன்றி ஒரு உரையை நிகழ்த்தக்கூடாது. ஆளுங்கட்சியின் இயலாத் தனமும் அதிகார குவிப்பும் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். எதற்கெடுத்தாலும் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மந்திரிகள், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்க திராணி இல்லாத மந்திரிகள் என அமைச்சராக இருப்பதற்கான தகுதிகளையே இழந்து நிற்கிறது அதிமுக அரசு.

மீட்புப் பணிகளுக்கு ராணுவம் வந்திராவிட்டால் அதிமுக அரசு ஒன்றுமே செய்திருக்காது என்பது தான் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த ஆதங்கம். ஆனால் நொடிக்கொருமுறை மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கினங்க எனும் வார்த்தையைக் கேட்டுக் கேட்டு காது எறிகிறது. மியாட் மருத்துவமனை பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் துறை செயலாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும், அமைச்சர்களுக்கான கேள்விகளுக்குக் கூட அதிகாரிகளே பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதும் என்ன நடக்கிறது என்பது புரியாதது போலவே தேமே என உட்கார்ந்திருந்த அமைச்சர்களை பார்க்கும் போது எரிச்சலும் கோபமும் வந்தது. இத்தனைக்கும் அரசின் உயர் பொறுப்பு அமைச்சர்கள் அவர்கள்.

ஒரு நல்ல அரசாக இருந்திருந்தால் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தேவைப்படும் இடங்களுக்கு அரசே அனுப்பியிருக்கலாம்.பலவித குழப்பங்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம்.  உயர் நீதி மன்றம் குட்டு வைத்தபின்பே இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டது என்பது கூட மறைக்கப்பட்டு ஒவ்வொரு பேருந்திலும் முதல்வரின் படத்தை ஒட்டி மலிவு விளம்பரம் தேடிய அரசு தான் இந்த அரசு. எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேடும் இந்த செயல் திமுக ஆட்சியில் கூட இருக்கவில்லை எனபதே நிதர்சனம். ஆனால் நாளை இதே ஒரு பாணியாக மாறிவிடும். ஒரு பேரிடர் ஏற்படும் போது மக்களின் முதல் எதிர்பார்ப்பு முதல்வரோ அமைச்சரோ வந்து ஆறுதல் சொல்வார்கள் என்பதாகத் தான் இருக்கும். அது தான் நடைமுறையும் கூட. ஆனால் முதலமைச்சரோ சென்ற வெள்ளத்திற்கு கார் கண்ணாடியை கூட இறக்காமல்  பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து வாக்காளப் பெருமக்களே என வாக்கு சேகரித்துவிட்டு சென்றார். இந்த முறை வேறு வழியில்லாமல் ஹெலிகாப்டரில் பார்வையிட்டு ? சென்றார். அவ்வளவு தான், ஆளையே காணோம். டிவியில் கூடதோன்ற நேரமில்லை, அந்த அளவு அரசுப் பணியில் பிசி.

வழக்கத்திற்கு மாறாக மத்திய அரசே நேரடி நிவாரணம் அளிக்கும் அளவுக்கு மெத்தனமான மாநில அரசாக இருக்கிறது.தன்னார்வலர்களுக்கும் அரசுக்குமான ஒருங்கிணைப்பு முழுவதும் இல்லை இன்னும் கூட. எந்த செயல்களிலும் இல்லாத அளவு இந்த முறை பொதுத் தளத்திலும், சமூக வலைதளங்களிலும் படு தோல்வி அடைந்திருக்கிறது ஆளும் அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.  குறிப்பாக இளையவர்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்து செல்லாக் காசாக மாறிவிட்டது அரசின் செயல்பாடுகள். இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் வெற்றியை தீர்மானிக்கப் போவது பணம் தான் என முடிவெடுத்து செயல்படுகிறார்கள் போலும். எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது அதே போலத் தான் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கிட முடியாது.  PREDISASTER PREPARATION, DURING DISASTER MITIGATION ல் தான் தோல்வி, RE-HABITATION , RECONSTRUCTION  யாவது சீரிய முறையில் செய்து இழந்த பெயரை மீட்கப் பாருங்கள். இல்லை என்றால் தமிழகத்தில் உங்கள் இருப்பே கேள்விக்குள்ளாக்கப் படும்.

Wednesday, November 25, 2015

ஃபேஸ்புக் கவிதைகள்-1


முகப்புத்தகத்தில் நான் எழுதியவைகள்....! ( கிறுக்கியவைகள் ) 


உண்மைதானே....?



1. நாம் நினைப்பவர்கள் எப்பொழுதாவது நம்மை 

நினைப்பவர்களாகஇருப்பார்களா என 

யோசிக்காமல் இருக்கமுடிவதில்லை.......!


Monday, September 22, 2014

தி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்

தி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்



ஒரு நாள் எதார்த்தமாக  எங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் தி இந்து தமிழ் நாளிதழை படிக்க நேர்ந்தது. (அறிமுகமான சமீபம்). படித்து முடித்தவுடன் மற்ற தினசரிகளைப் படிக்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு ஏற்படவில்லை. அசாதாரணமான ஒரு உணர்வு தோன்றியது. ஆம் மற்ற தினசரிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததால் முதல் முறை படித்தவுடனேயே அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது நிஜம்.உடனே விடுதியிலும் அந்த நாளிதழை வரவழைக்க பெருமுயற்சி எடுத்து ஒருமாத போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக வரவழைத்தும் விட்டோம்.அதிலிருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன் .மிகைப்படுத்தவில்லை உண்மையாகவே மற்ற தினசரிகளிலிருந்து தி இந்து தமிழ் வேறுபட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.


தினசரிகளுக்கே உரிய அனைத்து வரைமுறைகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்து அதில் வெற்றியும் காண்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை தானே??தமிழ் தினசரிகளுக்கே உரிய சில குறைபாடுகள் இதற்கும் பொருந்தினாலும், நாம் எதிர்பார்க்கும் விசயங்களில் நடுநிலைத்தன்மையோடு நடந்து கொள்வது உண்மையிலேயே பெரிய விசயம் தான்.செய்திகளுடன் சில இணைப்பாக வெளிவரும் மற்ற தினசரிகளுக்கு மத்தியில் இணைப்புகளுடன் சில செய்திகளாக வருவதுதான் இதனுடைய வெற்றி ரகசியம்.ஒவ்வொரு நாளும் வண்ணமயமான இணைப்புகளோடு வெளிவந்து வாசகர் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதோடு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியிருப்பது இதனுடைய வளர்சிக்கு காரணங்களுள் ஒன்றெனக் கூறலாம்.



தி இந்து தமிழ் நாழிதழின் சிறப்பு என்றால் அது நடுப்பக்கம் தான்.அற்புதமான பல அரிய தகவல்களோடு அலங்கரிக்கப்படும் நடுப்பக்கத்தின் ரசினாகவே மாறிவிட்டேன் நான்.நாளிதழ் வாங்கியவுடன் தலைப்புச் செய்தியைப் பார்க்கும் பழக்கம் போய் நடுப்பக்கத்தைப் பார்க்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது என்று கூடச் சொல்லலாம். விடுமுறை நாட்களில் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சிறந்த எழுத்தாளர்களால் நிரப்பப்படும் பக்கமாக நடுப்பக்கத்தை தாராளமாகக் கூறலாம்.கலை, இலக்கியம் ,விளையாட்டு, அறிவியல் என அனைத்தையும் தரும் இடம் தி இந்து தமிழின் நடுப்பக்கமாகத் தான் இருக்க முடியும். இதழாளர் சமஸ் எழுதும் நிலம்,நீர்,காற்று எனும் தொடர் மிகவும் நன்றாக இருக்கும். இப்போது தான் நீர் பகுதி முடிந்து நிலம் நோக்கிய பயணம் தொடரவிருக்கிறது.




நீர் பகுதியில் மீனவர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவேனும் தெரிந்து கொள்ள வைத்தது இந்த பதிவுகள் தான்.கடலோடிகள் எனும் அழகிய தமிழ் சொல்லையும் இங்குதான் நான் முதன்முதலில் அறிந்து கொண்டேன். கடலோடிகளின் பிரச்சனைகளை அவர்களின் குரலிலேயே பதிய வைத்து ஒரு நீரோட்டத்துக்கே உரிய தெளிவை ஏற்படுத்திவிட்டார்   திரு.சமஸ். படிக்காதவர்கள் அவருடைய வலைப்பக்கத்தில் படித்துப் பாருங்கள்.




தி இந்து தமிழ் நாளிதழின் இன்னொரு சிறப்பு இணைப்பு மலர்களைக் கூறலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு இணைப்புடன் வெளிவரும் ஒரே தமிழ் தினசரி இதுவாத்தான் இருக்கும்.அதிலும் மாயாபஜார், பெண்கள் உலகம்,இந்து டாக்கீஸ் , இளைஞர் ஸ்பெசல் உள்ளிட்டவை மிகவும் அருமையாக இருக்கும்.  வாசகர்களுக்குரிய  மரியாதையை தருவதிலும் தி இந்து தமிழ் தனித்தே நிற்கிறது. நமது குரலிலேயே பகிர்ந்து கொள்ளும் வசதி கூட வந்துவிட்டது. உங்கள் குரல் மூலம் நமது பகுதி பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்யலாம்.ஒரு ஒரு பக்கத்திற்கும் மேலே கூட தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.செய்திகளை விரிவாக தருவது போல தகவல்களை விரிவாக தருவது தான் ஆச்சரியமான ஒன்று.இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலங்கள் எழுதும் புதிய பகுதி அறிமுகமாயிருக்கிறது.தங்கர்பச்சான்,கிரேசி மோகன் தொடர்கள் அற்புதமாக போகிறது.



எல்லாமே சிறப்பு தான எனப் பார்த்தால் எதுவுமே இவ்வுலகில் முழுமையாக சிறப்பாக இருக்க முடியாது, அவ்வகையில் இதற்கும் சில குறைபாடுகள் உண்டு. அரசியலில் ஆளுங்கட்சி சார்பாகவே இருக்கிறது என்பது என் கருத்து. தலையங்கமும் அவ்வளவு ஒரு பலமானதாக தெரியவில்லை. (என்னைப் பொறுத்தவரை தலையங்கம் என்றால்  தினமணி தான்). அதே போல தி.மு.க பற்றி நேர்மறையான பதிவுகள் வருவது குறைவு தான்.இன்னொன்று தேவையில்லாத அல்லது அதிகம் விரும்பாதவைகளுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம். ஆன்மீக சிறப்பு மலர் முழுதும் அதற்காகவே தான். நான்கு பக்க‌ங்கள் முழுதும் அதே!! அதே போல சொந்தவீடு மலரும் அப்படித்தான்.நிறைகளோடு ஒப்பிடும் போது குறைகள் அவ்வளவாக இல்லை. எனவே மற்ற தினசரிகளுக்கு மாற்றாக கண்டிப்பாக தி இந்து தமிழ் நாளிதழை வரவேற்கலாம். இந்த ஒரு வருடத்திலேயே இப்படி என்றால் இனி வரும் காலங்களிலும் கண்டிப்பாக மேன்மையுறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது........





பதிவு குறித்தும் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்தும் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாமே....


Sunday, September 14, 2014

எனக்கு விருதா ??


எனக்கு விருதா ??






இன்று எனக்கு ஒரு மகிழ்வான அதிர்ச்சி காத்திருந்தது. எனக்கும் ஒரு விருது அளித்திருக்கிறார் திரு.மது சார்....

வலையுலகில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை. மற்ற பெரிய பெரிய வலைப்பதிவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனான எனக்கும் விருதளித்து பெருமைப்படுத்தியிருக்கும் திரு. மது சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


Friday, September 12, 2014

நான் ஏன் இஞ்சினியரிங் (B.E GEO INFORMATICS ENGINEERING ) சேர்ந்தேன் ?


நான் ஏன் இஞ்சினியரிங் (B.E GEO INFORMATICS ENGINEERING ) சேர்ந்தேன் ?


என்னுடைய PROFILE பார்த்தவர்களுல் சிலர் நான் படித்துக் கொண்டிருக்கும் GEO INFORMATICS ENGINEERING   என்பது எதைப்பற்றியது எனக் கேட்டனர்.அதனால் என்னுடைய பொறியியல் படிப்பைப் பற்றி விரிவாகவும் முடிந்த அளவு தமிழிலும் எழுத முயற்சி செய்கிறேன் !! அதற்கு முன்னால் நான் ஏன் இந்த படிப்பில் சேர்ந்தேன் ? எப்படிச் சேர்ந்தேன் ? என்பதையும் சொல்லிவிட்டு அடுத்த பதிவில் அதைப் பற்றி  விரிவாக எழுதுகிறேன்.


Monday, September 8, 2014

என்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை

என்னைக் கவர்ந்த திரைப்படம் -  புதுக்கவிதை


திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, இனி எப்பொழுதும் சரி. ஆனால் அதை நாம் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் தான் பார்க்கிறோமா எனறால் இல்லை என்பது தான் விடை. அதை ஒரு வித ஈர்ப்போடு, ஒரு வித அதீத ஆர்வத்தோடு ஏன் சில நேரங்களில் நம் வாழ்க்கையோடு கூட ஒப்பிட்டு மகிழ்கிறோம். நாம் எதிர்பார்க்கும் விசயங்களும் நிகழ்வுகளும் அதில் இருந்துவிட்டால் அதை கொண்டாடவும் செய்கிறோம்.ஒவ்வொருவருக்கும் சில திரைப்படங்கள்  எத்தனை முறை பார்த்தாலும் கண்டிப்பாக சலிப்பைத்தராத கொண்டாட்டங்களாக இருக்கவே செய்யும். அப்படி எனக்கு இருந்த‌ என்னைக் கவர்ந்த ஒரு திரைப்படம் புதுக்கவிதை !


Friday, September 5, 2014

ஆசிரியர் தினம்


ஆசிரியர் தினம்

ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் 
கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌
மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல்
மேடைதனில் இருக்கிறதா க‌விதை !


Friday, August 22, 2014

கிரிக்கெட்டும் நானும் - 2 ( MY EARLY LIFE WITH CRICKET - 2 )


கிரிக்கெட்டும் நானும் - 2 

முந்தைய பகுதியை படிக்க:  கிரிக்கெட்டும் நானும் - 1( MY EARLY LIFE WITH CRICKET -1)

நான் ஏன் ராகுல் டிராவிடின் வெறியனாக மாறினேன் அந்த 2007 உலக கிரிக்கெட்டுக்குப் பிறகு ????


முதல் மேட்ச் இந்தியாவுக்கும் வங்காள தேசத்துக்கும்.எங்கள் ஊர் கேபிளில் அப்போது 4 சேனல்கள் மட்டுமே தெரியும்.கிரிக்கெட் பார்ப்பதற்காக மாலையில் அவர் வீட்டுக்குச் சென்று இன்று இரவு மறக்காமல் தூர்தசன் சேனல் மாற்றி விடுங்கள் என சொல்லி வந்துவிட்டேன்.மாலை முதல் இன்னிங்க்சும் இரவு அடுத்த இன்னிங்க்சும் நடக்கும்.


Wednesday, August 20, 2014

கிரிக்கெட்டும் நானும் - MY EARLY LIFE WITH CRICKET


கிரிக்கெட்டும் நானும்

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விசயத்தின் மீது அதிக ஆர்வம் இருக்கும். அது எந்த துறையாக இருந்தாலும் சரி.சிலர் பொத்தாம் பொதுவாக எல்லாமும் பிடிக்கும் என சொன்னாலும் அவர்கள் அறியாமலேயே சிலவற்றின் மீது நல்ல அபிப்ராயம் இருக்கும்.அந்த வகையில் எனக்கு பிடித்த ஒன்று கிரிக்கெட். அது என்னில் எப்படி வந்தது இன்று எவ்வாறு இருக்கிறது என தேட முயற்சிப்பது தான் இந்த பதிவு. சற்று நீண்டு விட்டதால் பகுதிகளாக தரலாம் என நினைக்கின்றேன்.



கிரிக்கெட்டின் தோற்றத்தினைப் பற்றியோ ரெக்கார்டுகளையோ தர விரும்பவில்லை. அது பல வலைகளில் கொட்டிக் கிடக்கின்றன.எனவே கிரிக்கெட்  மீதான என் ரசனைகளை பதிவு செய்யவே விரும்புகிறேன். இனி பதிவுக்குள் போகலாம். 


Sunday, August 17, 2014

கொடிகாத்த குமரன்


எங்கள் பல்கலைக்கழக சுதந்திர தின விழாவில் கொடிகாத்த குமரன் நிலைக்காட்சியில் நான் பேசியவை இதோ உங்களுக்காக !!


Tuesday, April 22, 2014

முதல் வாக்காளர்களின் வாக்கும் என்னுடைய கணிப்பும்!!


முதல் வாக்காளர்களின் வாக்கு!!!

இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு. பொதுமக்களுக்கு நிம்மதி. வேட்பாளர்களுக்கு இனிதான் கவலை. கொடுத்த காசு வேளை செய்யுமா? ஜெயித்துவிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என யோசித்தே மண்டை வலி வரப்போகிறது வேட்பாளர்களுக்கு. இன்னொறு பிரச்சனையும் இருக்கிறது இந்த முதன் முறை வாக்காளர்களின் ஓட்டுகளைக் கவர்வது. ஆம் அதுவும் வெற்றியைத்தீர்மானிக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிசமான ஓட்டுகள் கிடைக்கலாம். இந்த முறை முதன் முறை வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு கணிசமாக கிடைக்கும் எனப் பார்ப்பது தான், பார்க்க முயல்வதுதான் இந்தப்பதிவு,

இளைஞர்கள் மத்தியில் முதல்முறை வாக்களிக்கப் போகும் உணர்வே அதிகமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மற்றவர்கள் போல குறிப்பிட்ட இந்தக்கட்சிக்குத்தான் வாக்கு என்றெல்லாம் முடிவெடுத்து செல்வதில்லை வாக்காளர்கள். தீர்க்கமான முடிவு அறிவுசார்ந்த வேட்பாளர் தேர்வு என இளம் வாக்காளர்களின் வாக்கு அமையும் என்று கூட சொல்லலாம்.இன்றைய தேதியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இதைப் பற்றி மற்றவர்களுடன் விவாதித்துக்கூட முடிவெடுக்கின்றனர். உதாரணமாக என் நண்பர்களையே சொல்லலாம்.


ஆனால் எதை வைத்து வாக்களிக்க உள்ளனர் என்று பார்த்தால் முக்கியமாக‌ ஊடகத்தை பார்த்து தான் தேர்வு செய்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நமது இளைஞர்களின் ஓட்டு யாருக்கு என்று பார்க்கவேண்டும். அவை கூட கூடப் படிக்கும் மாணவர்களிடம் விவாதிக்கப்பட்ட ஒரு தேர்வாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. நான் பார்த்த பழகிய என் தோழர்கள் , என் பல்கலைக்கழக நண்பர்கள், என் விடுதி நண்பர்கள், என் ஊர் நண்பர்கள் யாவருமே புதிய வாக்களர்கள் தான் (நானுட்பட). அவர்களிடம் பல நேரங்களில் பேசியதிலிருந்து, அவர்களாகவே கூறியதிலிருந்து நான் கூற வருவதுதான் உண்மையாக இருக்கும் என்று கூறமுடியாது. சில இடங்களில் மாறலாம். ஆனால் பெரும்பான்மையாக இது தான் இருக்கிறது.


இன்றைய சூழலில் இளைஞர்களின் தேர்வாக இருப்பது கண்ணை மூடிக் கொள்ளுங்கள், மோடி மோடி மோடி தான். ஆம், என்ன காரணம் என்று பார்த்தால் ஊடகம். ஊடகங்களிம் மூலம் மோடிக்குக் கிடைத்த வெளிச்சம். இதில் தான் ஊடகங்கள் ஒருபக்கமாக இருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
எப்போது மோடி பாஜகவின் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அப்போதிலிருந்து நமோ கோசம் தான் எந்தப் பக்கத்தை புரட்டினாலும். இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மீதான வெறுப்பு. இதை வெறுப்பு என்று கூட சொல்ல முடியாது, போதும் என்ற மனநிலை. அவர்களே ஆட்சி செய்யக்கூடாது. மாற்றித்தான் பார்க்கலாமே என்ற எண்ணம் தான்.மூன்றாவது முகப்புத்தகம் . அதில் செய்யப்படும் பிரச்சாரம், மோடி புகழுரைகள் போன்றவை. இன்னொன்று இன்றைய இளைஞர்கள் மக்களவை, சட்டசபை தேர்தலுக்கான வித்தியாசத்தையும் புரிந்துவைத்துள்ளனர்.


நான் பல முறை மோடி போடும் வேசத்தை என் நண்பர்களிடம் விளக்கும் போது, அவர்கள் கூறும் ஒரே பதில், பிறகெப்படி அவர் முன்று முறை முதல்வராக வெற்றி பெற்றார் என்பது தான். அவரின் வரலாற்று அறிவு, பொருளாதார சிந்தனை  உள்ளிட்டவற்றை மன்மோகனோடு ஒப்பிட்டால் கண்டிப்பாக மோடி சிறந்தவர் இல்லை தான். ஆனாலும் அவரின் குஜராத் வளர்ச்சி வித்தை, அவரை காப்பாற்றிவிடுகிறது.


இரண்டாவதாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் மன்மோகன் பெயர் மிகவும் டேமேஜ் ஆகிக் கிடக்கிறது. இதுவும் ஊடகங்களைப் பார்த்து புரிந்துகொண்டதுதான் எனலாம். சோனியாவின் கைப்பாவை என தினமொறு செய்தியாகப் போட்டுப் போட்டு மன்மோகனை டேமேஜ் செய்துவிட்டன்ர்.  ராகுல் காந்திக்கு ஓரளவு இளைஞர்களிடம் ஆதரவு இருக்கிறது. ஆனாலும் மோடியோயுடு ஒப்பிட்டக்கூட முடியாத அளவில் தான்.


தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரை இளைஞர்களின் ஆதரவு திமுக ஆதிமுக வுக்கு சம‌மாக இருக்கிறது. கேப்டனுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது, ஆனால் அது எவ்வாறு என நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சற்று அரசியலை கூர்ந்து நோக்கும் மாணவர்களிடம் மோடியின் பருப்பு வேகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில்  சிறுபான்மை இளைஞர்களிடமும் மோடி பெயர் வாங்க முடியவில்லை.

கலைஞர் பற்றிப் பார்த்தால் அவருடைய பெயரும் அவ்வளவாக இல்லை. குடும்ப அரசியல் , ஊழல் என அவர் பெயரும் டேமேஜ் தான். முதல்வரின் மீதும் நல்ல பார்வை இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, எழுதிவைத்துப் பேசுவது போன்றவைகளை தெரிந்தே வைத்துள்ளனர்.அதே நேரத்தில் லாப் டாப் திட்டத்தினால் ஓரளவு இளைஞர் ஆதரவு இல்லாமலும் இல்லை. வைகோவிற்கு நல்ல பெயர் உள்ளது. ஆனால் அது ஓட்டுகளாக மாறும் அளவிற்கு இல்லை. கம்யூனிஸ்டுகள் பற்றிய பார்வை அரசியலை கூர்ந்து நோக்கும் மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. அதே போல ஜாதிக்கட்சிளுக்கான ஆதரவு துளியும் இல்லை இன்றைய இளைஞர்களிடம். பாராட்டப்படவேண்டிய விசய‌ம் தானே?அதே நேரம் படிப்பறிவில்லாத முத‌ல் வாக்காளர்களிடம் ஜாதி கொடிகட்டிப் பறக்கிறது என்பதும் உண்மை. நோட்டாவிற்கும் கூட ஆதரவு இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக பயன்படுத்த‌ மாட்டார்கள். 


மொத்தத்தில் இன்றைய இளைஞர்களின் ஆதரவு கீழ்கண்டவாறு இருக்கிறது.


முதல் இடம்; நரேந்திர மோடி

இரண்டாவது; கேப்டன் விஜயகாந்த் (விதிமுறைகளுக்கு உட்பட்டது)

மூன்றாவது இடம் ; முதல்வர் ஜெயலலிதா

நான்காவது இடம்; கலைஞர் 

ஐந்தாவது இடம்; நோட்டா

ஆறாவது இடம்; மன்மோகன் சிங்க் ( எதிர்மறை ஆதரவு)

ஏழாவது இடம்; வைகோ ( வாக்காக மாறுமா எனத்தெரியவில்லை, நல்ல பெயர் இருக்கிறது)


தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் என்னுடைய கணிப்பாக சில தொகுதிகளின் வெற்றி நிலவரம். ( என்னுடைய கணிப்பு மட்டுமே)

சிவகங்கை( என்னுடைய‌ தொகுதி) ;  அதிமுக ஜெயித்துவிடும் என்றே தெரிகிறது. இரண்டாவது இடம் திமுகவிற்கு கிடைக்கலாம். கார்த்தி சிதம்பரம் தோல்வி அடைந்தாலும் கவனிக்கத்தகுந்த வாக்குகளைப் பெறலாம். ஹெச்.ராஜாவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது.


கன்னியாகுமரி;  பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றியடைவார் எனத்தெரிகிறது.காங்கிரஸ் வசந்த குமார் கவனிக்கத் தகுந்த வாக்குகளைப் பெறலாம்.

விருதுநகர்; வைகோ வென்றுவிடுவார் எனத் தோன்றுகிறது. ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் எனப்படுகிறது.


நீலகிரி; திமுக ராஜா ஜெயிப்பார்.

மத்தியசென்னை; தயாநிதி மாறனுக்கு வாய்ப்புகள் அதிகம்.

தென்காசி; புதிய தமிழகம் கட்சிக்கே அதிக வாய்ப்பு.

சிதம்பரம்; விசிக்கு வாய்ப்பிருக்கிறது.

தஞ்சாவூர்; திமுக மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஜெயிக்கலாம்.

புதுச்சேரி; என். ஆர் காங்கிரஸ் ஜெயிக்க அதிக வாய்ப்பு, காங்கிரஸுக்கும் வாய்ப்பு அதிகம்.

அவ்வளவு தான் என்னுடைய கணிப்பு. மொத்தமாக அதிமுக  18-20 தொகுதிகள்.திமுக 16-18 பாஜக -1 மதிமுக -1 பாமக 0-1 தேமுதிக 0 தொகுதிகள் ஜெயிக்கலாம்.(பாவம் கேப்டனின் அரசியல் வாழ்க்கை இத்தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகப் போகிறது எனத்தெரியவில்லை)

இது பற்றிய என்னுடைய பதிவு;  http://pudhukaiseelan.blogspot.in/2014/04/blog-post_17.html


வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள், உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஒருகணம் ஒதுக்கலாமே?

உங்கள் சீலன்!

கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன!!!!







Monday, March 31, 2014

பிரிவுமடல்...


எங்கள் பல்கலைக்கழகத்தின் முதல் பிரிவுபச்சார விழாவில் நான் எழுதி வாசித்த பிரிவு மடல்...............





இந்த நான்கு ஆண்டுகள் வெறும் ஆண்டுகள் மட்டுமல்ல!

இங்குள்ள ஒவ்வொருவரின் வரலாறு எழுதப்பட்டதன் சரித்திரக் குறியீடு !

வாழ்க்கைப்பாடத்தை அனுபவித்து மகிழ்ந்த ஒரு காவியக் கணக்கு!

பூமியை ஆள புவித்தகவல்களை பேராசிரியர்களிடமிருந்து பெற்றதன் அடையாளம்!

நண்பனுடைய புதுச்சட்டையை அவனுக்கே தெரியாமல் அணிந்துவந்த நாட்களின் தொகுப்பு!

வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சென்ற சினிமாக்களாக,

கல்லூரி கலைவிழாக்களில் கலந்துகொண்ட போட்டிகளாக,

தோழர்க‌ளின் டிபன் பாக்ஸ்க‌ளை காலிசெய்த‌ இடைவேளைக‌ளாக‌,

ந‌ட்பாக‌,காத‌லாக‌,ச‌ண்டைக‌ளாக‌,தேர்வுக‌ளாக‌,திட்டுக‌ளாக‌,ஆசைக‌ளாக‌,அரிய‌ர்க‌ளாக‌,விடுமுறைக‌ளாக‌ ஏதோ ஒரு வித‌த்தில் ஒவ்வொருவ‌ரின் உள்ள‌த்திலும் அழியாத‌ கோல‌ங்க‌ளை வ‌ரைந்து சென்றிருக்கும் இந்த‌ நான்கு ஆண்டுக‌ள் ந‌ம்மைக் க‌ட‌ந்து செல்ல‌வில்லை! க‌ட‌த்தி செல்கிற‌து புது உல‌க‌த்தைக் காட்டுவ‌த‌ற்கு!


நினைவுக் கொசுக்க‌ளால் நித்திரை தொலைக்க‌ப்போகும் நீள‌ இர‌வுக‌ளில் இந்த‌ நினைவுக‌ளையெல்லாம் அசைபோட்டுப் பாருங்க‌ள்!


அடுத்த‌ க‌ண‌மே உங்க‌ள் க‌ண் முன்னால் இந்த‌  அண்ணா ப‌ல‌க‌லைக்க‌ழ‌க‌ம் வ‌ந்து நிழ‌லாடிக் கொண்டிருக்கும் !


ப‌ல்க‌ழைக்க‌ல‌க‌ம் ம‌ட்டும‌ல்ல‌ அங்குள்ள‌ உங்க‌ள் வ‌குப்ப‌றையின் ஒரு மூலையிலே சுவ‌ரில் கிறுக்கிய‌ கிறுக்க‌ல்க‌ள் கூட‌ உங்க‌ள் க‌ண்க‌ளைவிட்டு ம‌றைய‌ப்போவ‌தில்லை!


எந்த‌ ஒரு தாய்க்கும் த‌ன‌து மூத்த‌ குழ‌ந்தையின் மீது கொஞ்ச‌ம் க‌ரிச‌ண‌ம் அதிக‌மாக‌ இருப்ப‌து போல‌ இந்த‌ ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்திற்கும் உங்க‌ள் மேல் க‌ரிச‌ண‌ம் அதிக‌ம் தான்?  க‌ல்லூரிக்கு இருக்கிற‌தோ? இல்லையோ? எங்க‌ளுக்கு அதிக‌ம் தான்  , எத்த‌னை பேரைப் பார்த்தாலும் உங்க‌ளைப் பார்க்கும் போதும‌ட்டும் ஏதோ இன‌ம் புரியாத‌ தாக‌ம் , நேச‌ம்...

தனையனாக, தமக்கையாக,தோழனாக, தோழியாக,சகோதரனாக, சகோதரியாக எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த வழிகாட்டியாக எங்களை வழிந‌டத்தியவர்கள்!

இன்று வழிகாட்டியவர்களுக்கு வழியனுப்புவிழா! விம்முகிறது நெஞ்சம் இருந்தும் விழைகிறது கரங்கள் விடைகொடுப்பதற்கு!

நாங்கள் என்றுமே முதல்வர்கள் தான் என்பதனை மீண்டும் ஒருமுறை இந்த உலகத்திற்கு காட்ட, அன்று பற்றிய கரங்களை இன்று விடுகின்றோம் மீண்டும் ஒருநாள் இணைந்து கரகோசம் எழுப்ப!




உங்களை வழியனுப்புவது நாங்கள் மட்டுமல்ல இந்த நெல்லை மாநகர வீதிகளும் தான்!


எதிர்காலத்தில் நேரமிருந்தால் இங்குள்ள வீதிகளில் நடந்து தேடிப்பாருங்கள் நீங்கள் தொலைத்த நினைவுகளை அது தாங்கி நிற்கும்!

உங்களுடைய வெற்றி வாழ்க்கையில் சாதிப்பதில் மட்டுமல்ல, உங்களுக்கு அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்த இந்த பல்கலைக்கலகத்திற்கு நீங்கள் ஏற்படுத்தப்போகும் வரலாற்றிலும் தான்!

குறித்துக் கொள்ளுங்கள் இந்த நாள் உங்கள் வாழ்நாளின் எந்த நாளிலும் மறக்க  முடியாத  நாளாகப்போவது மட்டும் நிஜம்!

ஒன்று மட்டும் சொல்கிறேன் இது முடிவல்ல முடிவுக்ளின் பின்னால் ஏற்படப்போகும் புது அத்தியாயத்தின் ஆரம்பம்!!

இன்று பிரிகின்றோம், நம்பிக்கை கொண்டு பாருங்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திப்போம் !!!!!!!!!!!!!!!!


வாழ்த்துகளுடன் உங்கள் சீலன், மற்றும் உங்கள் இளைய மாணவர்கள் ,அமைப்பியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி......


உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்..

Wednesday, March 12, 2014

என்னுடைய ஓட்டு ?




நான் பிறந்தது, வளர்வது எல்லாமே புதுக்கோட்டை மண்ணில் தான். ஒவ்வொருவருக்கும் தான் பிறந்த ஊர், நாடு,தாய் மொழி மேல் பற்று இருப்பது போலத்தான் எனக்கும். 



புதுக்கோட்டை நகருக்கும்,சமஸ்தானத்திற்கும் தனி வரலாறே உண்டு என்பது நூற்றாண்டு கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்நேரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

                                         TN Districts Pudukkottai.gif




சுதந்திரம் அடைந்த பின் இந்தியத் திரு நாட்டுடன் இணைந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை தான். 1912 ம் ஆண்டிலேயே நகராட்சியாகிய நமது நகரம் தொடர்ந்து அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு வருவது உண்மைதானா என ஆராயும் போது, ஆம் ஓரளவு உண்மைதான் என்று தோன்றுகிறது.

1948 ல் தனி சமஸ்தானமாக இணைந்த புதுகை, 1974ம் ஆண்டில் தான் தனி மாவட்ட அந்தஸ்தே அடந்தது. அதே போல 1988 ம் ஆண்டில் தான் தேர்வுனிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 

                        படிமம்:Pudukkottai taluks.gif



ஆங்கிலேயர் காலத்தில் தனி சமஸ்தான அந்தஸ்துடன் திகழ்ந்த பெருமையுடையது புதுக்கோட்டை. கடந்த 1912 -ம் ஆண்டு அப்போதைய சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை நகராட்சி உருவானது. சமஸ்தானத்தில் இருந்த ஒரே நகராட்சியும் இதுதான். அப்போது நகரசபைக்கு 18 உறுப்பினர்கள் இருந்தனர்.

தொடக்ககாலத்தில் மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்த நிலையில், 1949 -ல் இரண்டாம் நிலைக்கும், 1963 -ல் முதல் நிலை நகராட்சியாகவும், 23.3.1988 -ல் தேர்வு நிலை நகராட்சியாகவும் படிப்படியாக தரம் உயர்ந்தது. இதையடுத்து கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்குமுன் புதுக்கோட்டை ஊராட்சி நகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் தற்போது  நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்,  நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ 10 கோடியும், ஒரு லட்சத்துக் மேலான மக்கள் தொகையும் இருந்தால் அந்த நகராட்சியை சிறப்பு நிலைக்கு உயர்த்தலாம் என்பது அரசின் கொள்கை முடிவு என்ற நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்குமுன்பே  புதுக்கோட்டை நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ 10 கோடியாகவும்,  வரவு, செலவுத்திட்டம் ரூ. 16 கோடியாகவும், மக்கள்தொகை ஏறத்தாழ 2  லட்சத்துக்கு மேலாகவும்  அதிகரித்த நிலையில், இன்னும் சிறப்புநிலைக்கு அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படாதது ஏன் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்து நிற்கிறது.

சிறப்பு நிலை தகுதி நிலைக்கு உயர்ந்தால்  மொத்த நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கும், குடிநீர், சாலைகள் , தெருவிளக்குகள் ஆகிய பிரிவுகளுக்கு தற்போதுள்ள ஓவர்சீயர் பதவி தகுதி உதவி பொறியாளர் நிலையில் தனி பதவியிடங்கள் கிடைக்கும்,  நகராட்சி ஆணையர் தகுதி கோட்டாட்சியர் பதவி தகுதியில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் தகுதிக்கு உயரும், இதனால் அனுபவமிக்க மூத்த அதிகாரிகள் மட்டுமே இப்பதவிக்கு வர முடியும், அலுவலர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை உயரும். மேலும் ரூ 30 கோடி வரையிலான திட்டங்களை நகராட்சி நிர்வாகமே சுயமாக மேற்கொள்வது,  மத்திய அரசின் நிதி, கூடுதல் மானியங்கள் போன்ற  நன்மைகள் கிடைக்கும்.  இந்நிலையில், கடந்த 1988 -ல் தேர்வு நிலை நகராட்சியானபின் சுமார் 25 ஆண்டுகளாக சிறப்பு நிலைக்கு உயர்த்தப்படாமல் இருக்கும் ஒரே நகராட்சி புதுக்கோட்டை மட்டும்தான் என்றால் வியப்பில்லை. நன்றி - தினமணி 



நமது அருகிலுள்ள காரைக்குடி இன்று சிறப்பு நிலை நகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் மக்கள்தொகை 88000(2001 கணக்கின் படி), நமது நகரத்தின் மக்கள் தொகை 1.3 லட்சம் அதே 2001‍ கணக்கின்படி. இவை மட்டுமல்ல, இன்னும் பலவிததில் காணா நகராகவே இருக்கிறது நம் நகரம் .
                               


                                          



இந்தியாவிலேயே முதன் முதல் பெண் மருத்துவர் பிறந்த மண்ணில் ஒரு 
மருத்துவப் பல்கலைக்கழகம் கூட கிடையாது. மருத்துவப் பல்கலை கூட வேண்டாம் ஒரு அரசுப் பல்கலையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு அரசு பொறியியல் கல்லூரிகூட‌ நகரக் கட்டுமானத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் புதுக்கோட்டையில் இல்லை என்பது வேதனையான விசயம் தான்.


எல்லாவற்றுக்கும் மேலாக 1951 முதல் நமக்கு என இருந்து வந்த மக்களவைத் தொகுதிக்கான உரிமையும் கடந்த 2009ல் பறிக்கப்பட்டது தான் வேதனையிலும் வேதனை.

அப்போது நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் நமது மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆம் படிவம் நிரப்பி பல வேலை முடித்து வாக்களிக்கக்கூடிய 49 ஓ ஓட்டு 14000  அருகில் விழுந்து ஒரு தேசியக்கட்சியின்( இன்னும் ஏன் பயப்பட வேண்டும் காங்கிரஸ் )  வெற்றியையே தட்டிப்பறித்த வரலாறு நிகழ்ந்தது. இல்லை நிகழ்த்தப்பட்டது !

அதைக்ககண்டும் அஞ்சாத மத்திய அரசு மக்களவை தொகுதிகளையே அந்தந்த மாவட்டத்  தலைநகராக்க வேண்டும் என்று கூறியது. (வீரப்ப மொய்லி ) நல்ல வேலை அது நிராகரிக்கப்பட்டது, இல்லையெனில் நமது மாவட்ட அந்தஸ்தும் பறிபோய் இருக்கும்.



                                                 



இப்படி சுதந்திர வரலாற்றில் நாம் எத்தனை காலம்தான் புறக்கணிக்கப்படுவோம்? இதற்கு ஒரு முடிவு வேண்டாமா? இந்த பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கவனத்தையும், அரசுகளின் கவனத்தையும், அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தால் தான் நாம் நமது உரிமைகளை பெறமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து!

படிவம் நிரப்பி, பல வேலை முடித்து 49 ஒ ஓட்டுப் போடும் முறையை மாற்றி எளிதாக நோட்டா வாக்களிக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் நமக்கு வழங்கியுள்ளது.


நமக்கான உரிமையைப் பெற நாம் பயன்படுத்த‌ப்போகும் உரிமை நோட்டா. நான் இந்த தேர்தலில் தான் முதன்முறையாக வாக்களிக்க உள்ளேன். யாருக்கு ஓட்டுப் பொடுவேன் என்பது உங்களுக்கே தெரியும். நமது மாவட்டத்திலுள்ள 15 லட்சம் வாக்காளர்களும் போடப்போகும் ஓட்டு!!!!!!!!!!!! ஆம்!!!!!!


அப்போது தான் 2015ல் அமைக்க இருக்கும் தொகுதி மறுசீரமைப்பின் குழுவிற்கு நமது எதிர்ப்பை தெரிவிக்க முடியும் என்பது என் கருத்து. மாற்றுக்கருத்துகள் வறவேற்கப்படுகின்றன.  மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்!


                                     ‍----உங்கள் புதுகை சீலன்!!!!
















Wednesday, January 29, 2014

இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது!


இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது!


எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தலைப்பு இது தான். பட்டிமன்றத்திற்கு நடுவராக புலமை முதல்வர் அவர்கள் வீற்றிருந்தார். பட்டிமன்றத்தின் தீர்ப்பை கடைசியில் தருகிறேன். இனி நான் பேசியவை.....











அனைவருக்கும் வணக்கம்! நடுவர் பெருந்தகைக்கும் அனைவருக்கும் என்னுடைய குடியரசு தின வாழ்த்துகளும் வணக்கங்களும்! ஆம் இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது! குறைந்து வரவில்லை கரைந்து வருகிறது என்று கூட சொல்லலாம்.

போற்றூவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வோம் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்‍---=______ பாரதிதாசன்.

நான் பயப்பட மாட்டேன் இப்படிக்கூறுவதற்கு. இன்றைய இளைஞர்களின் தேசப்பற்றுக்கு  இங்கு வருகை தந்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையே உதாரணம். 

மேலும் இன்றைய தேசப்பற்று இப்படித்தான் இருக்கிறது. முகப்புத்தகத்தில் குடியரசு தின வாழ்த்து என நிலைத்தகவல் பதிவேற்றுவதிலும் அதற்கு லைக் பெறுவதிலும் தான் இருக்கிறது.உண்மையா இல்லையா நடுவர் அவர்களே? 

படை வலிமையிலும் அணுக்கருவி படைப்பிலும் அமெரிக்கா,ர‌ஸ்யா,பிரிட்டன்,பிரான்ஸ்,சீனா ஆகிய 5 பெறும் வல்லரசுகளுக்கு இணையாக வளர்ந்து நிற்கிற‌து இந்தியா. ஆனால் பொருளாதாரத்தில் மட்டும் வளர்சி கை கூடமுடியாமல் தவிக்கிறோம். இதற்கு நாமும் சிறிய அளவு காரணம் என்று நினைக்கும் போது ஏமாற்றமாக உள்ளது. ஆம் இன்றைய இளைஞர்களின் விருப்ப பானம் பெப்ஸி. தலைக்கு தேய்க்கும் சாம்பு முதல் காலில் அணியும் செருப்பு வரை பெரும்பாலும் அந்நிய பொருட்களே. பிறகெப்படி உள் நாட்டுப் பொருளதாரம் வளர்ச்சி அடையும். இவை நாட்டுப்பற்றுள்ளவன் செய்யும் செயல்களா?





இந்திய அரசாங்கத்தின் செலவுகளிலும்,சலுகைகளிலும் படிக்கும் பெரும்பாலனவர்கள் தேடி ஓடுவது வெளிநாடுகளைத்தானே! கேட்டால் வேலைவாய்ப்புகளில்லை என்ற சப்பு காரணங்கள்.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்! ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்! ஒழுங்காய் பாடுபடு வயல்க்காட்டில்! உன் புகழ் உயரும் அயல் நாட்டில்! என்று பாடிய பட்டுக்கோட்டையாரின் நாட்டிலே வாழ்ந்து கொண்டு இப்படிக்கூறலாமா? 

நான்கு பேர் நிற்கும் இடத்தில் நாட்டைப்பற்றிப் பேசினால் காத தூரம் ஓடுபவர்கள் தான் இன்றைய இளைஞர்கள்! இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவின் வரலாறு தெரிவதில்லை, பொருளாதாரம் தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லம் அரியர் கிளியர் செய்வது, நாலு பொண்ணுங்கள சைட் அடிக்கிறது,வேலைக்கு போறது,சம்பாதித்து செட்டில் ஆவது, இவை மட்டும் தான் நடுவர் அவர்களே!

                                            

தேசப்பற்று என்பது என்ன ?

  தமிழ் சினிமாக்களில் அர்ஜுனும்,விஜயகாந்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டுவது மட்டும் தேசப்பற்றாகாது,
இந்தியாவின் மலைகளையும் எல்லைகளையும் நேசிப்பது மட்டும் தேசப்பற்றாகாது,இந்திய ஏவுகணைகள் விண்ணில் ஏவப்படும் போது அதை நினைத்துப் பார்ப்பது மட்டும் தேசப்பற்றாகாது,ஏ.ஆர் ரகுமான் 2 ஆஸ்கார் விருதை கையில் வாங்கி எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று தமிழில் கூறியதை நினைத்து புலங்கிதம் அடைவது மட்டும் தேசப்பற்றாகாது.இவை எல்லவற்றுக்கும் மேலாக,

சிதம்பரம் கோவில் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடக்கூடாது எனும் மொழித்தீண்டாமையை தரியமாக எதிர்த்துப் பேசுவதுதான் உண்மையான தேசப்பற்று.


ஒரிஸ்ஸாவிலும்,குஜரத்திலும் சிறுபான்மையினர் அநியாயமாக கொல்லப்படும் போது தட்டிக்கேட்பதுதான் உண்மையான தேசப்பற்று.


சாதி மறுத்து திருமணம் செய்பவர்களை சாதி வெறியர்கள் ஈவு எரக்கம் இன்றி கொல்வதை எதிர்த்துக்க் கேட்பது தான் உண்மையான தேசப்பற்று.

பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் போது அதை எதிர்த்துக் கேட்பதுதான் உண்மையான தேசப்பற்று.

இவைகளில் ஒன்றையாவது நாம் செய்திருக்கிறோமா? பிறகெப்படி தேசப்பற்று வளர்கிறது என்று சொல்லமுடியும் நடுவர் அவர்களே!


காஸ்மீர் இந்த்யாவிற்குச் சொந்தம் என்று நினைக்கும் எத்தனை இளைஞர்க பாகிஸ்தானமும் இந்தியாவினுடையது என்று நினைத்டிருப்பீர்கள். காலம் காலமாக நாம் இருவரும் எதிரி நாடுகள் என்று சொல்லியே வளர்க்கப்பட்டுள்ளோம்.

காலம் கடந்துவிடவில்லை! நேரம் முடிந்துவிடவில்லை! இனிமேலாவது இளைஞர்கள் விழித்துக்கொண்டு "இளைய ரத்தம் என்ன போலியா? எழுத வேன்டும் புதிய இந்தியா"  எனும் கூற்றை உண்மையாக்கப் பாடுபடவேண்டும்.
அதுவரை இளைஞர்களிடம் நாட்டுப்பற்று வளராது குறையும்!குறையும்!  குறையும்!


எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்! வாழ்க த‌மிழ்! வளர்க பாரதம்!



இறுதியில்  இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைவது போல தோன்றினாலும் தேசப்பற்று ஒருபோதும் குறையாது! வளர்ந்தது! வளர்கிறது! வளரும்! என்று நடுவராய் வீற்றிருந்த புலமை முதல்வர் அவர்கள் தீர்ப்பு வளங்கினார்.