Tuesday, July 12, 2016

காஸ்மீர் பிரச்சனை எப்போது தான் முடியும்..?

காஸ்மீர் பிரச்சனை எப்போது தான் முடியும்..?

யோசித்துப்பார்த்தால் நாம் பிறந்த தேசமும் சரி இனமும் சரி (தமிழகம்) சுதந்திரத்துக்குப் பின் ஒரு போதும் அத்துமீறி அல்லது நீதிக்கு புறம்பாக எந்த பெரிய‌ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. சுதந்திர வங்க தேசம் ஒரு அத்தியாவசிய தேவையாய் இருந்ததால் அது விதிவிலக்கு. கன்னடர் தமிழரை விரட்டி விரட்டி அடித்த போது,இலங்கை இனப்பிரச்சனையில் நம் ராணுவ நடவடிக்கைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனானப்பட்ட உலக வல்லரசாம் இங்கிலாந்தின் நேர்மையும் கூட சில்காட் அறிக்கையால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆக அத்துமீறுதல் என்ற நிலை இந்தியாவுக்கு என்றைக்கும் சாத்தியம் இல்லை,ஏன் விரும்பத்தகாத‌ நிலையும் கூட.