Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, May 21, 2017

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்



ரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரின் நிறை குறை என்னவாக இருக்க முடியும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.. நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம் என்று நினைப்பவர்கள் தயவு செய்து கிளம்பிவிடுங்கள்....

முதலில் ப்ளஸ்கள்...

Friday, May 19, 2017

என்ன பெரிய ரஜினி





என்ன பெரிய ரஜினி, ரஜினின்னு துள்ற‌ என பலர் நினைக்கக்கூடும்... ஏனென்றால்...
.
.
நேற்றைய பேட்டியை உன்னிப்பாய் கவனித்திருந்தால் புரியும்.. நேற்றையதை மட்டுமல்ல தலைவரின் ஒவ்வொரு பேச்சுகளுமே இதயத்திலிருந்து வருபவை.. திட்டமிட்டு இதை பேச வேண்டும் என்று பேச முயற்சிக்கமாட்டார்.. நேற்று பேசிக்கொண்டு இருக்கும் போது இத்தனை வருடமாக ஏன் ரசிகர்களை சந்திக்கவில்லை என்பதற்கு பதில் சொல்லும் போது முன்னாடி பட வெற்றி விழாக்களில் சந்திப்பேன்.. இப்போது அந்த வாய்ப்பு அமையவில்லை.. எந்திரன் நன்றாக போனது இருந்தும் அதற்கான வெற்றி விழாவை தயாரிப்பு நிறுவனம் நடத்த முன்வரவில்லை, கபாலி நன்றாக போனது அதற்கு நடத்தமுடியாமல் போய்விட்டது... இத்தோடு முடித்துக் கொண்டிருக்கலாம்.... ஆனால் கோச்சடையான்,லிங்கா சரியாக போகவில்லை என்பதையும் சொன்னார்.. இன்றைய தேதியில் எந்த முண்ணனி நடிகரும் சொல்லத்தயங்கும் இடம் இது தான்.. படம் சூரமொக்கையாக தோற்றிருந்தாலும், மேடையில் வந்து நின்றுகொண்டு ஜெயித்திருக்க வேன்டிய படம் என சமாளிக்கத்தான் பார்ப்பார்கள்... ஆனால் ரஜினி. அப்படியல்ல...!

Thursday, January 12, 2017

எழுவாய் தமிழா..!

இந்தியா சுதந்திரம் அடைந்த போது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு எத்தனை நாள் தாங்கும் என மேற்குலக நாடுகள் எடைபோட்டன. அதை தவிடுபொடியாக்கி பவள விழா நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் இந்தியனாக. ஆனால் அதற்கான பிரதிபலனாக அதைக்கொடு இதைக்கொடு என்றெல்லாம் இதுவரை போராடியதில்லை.. எங்கள் உரிமைகளிலும்,பண்பாட்டு கலாச்சாரத்திலும் தலையிடாமல் இருந்தாலே போதும். டெல்லிக்கு கோவில் கட்டுவார்கள் தமிழர்கள்.. அதையும் கூட விட்டுவைக்காமல் அடி மேல் அடி அடித்துக் கொண்டிருந்தால் விளைவுகளை தாங்கும் சக்தி உங்களுக்கு இருக்காது என்பது தான் நிதர்சனம்.


Tuesday, July 12, 2016

காஸ்மீர் பிரச்சனை எப்போது தான் முடியும்..?

காஸ்மீர் பிரச்சனை எப்போது தான் முடியும்..?

யோசித்துப்பார்த்தால் நாம் பிறந்த தேசமும் சரி இனமும் சரி (தமிழகம்) சுதந்திரத்துக்குப் பின் ஒரு போதும் அத்துமீறி அல்லது நீதிக்கு புறம்பாக எந்த பெரிய‌ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. சுதந்திர வங்க தேசம் ஒரு அத்தியாவசிய தேவையாய் இருந்ததால் அது விதிவிலக்கு. கன்னடர் தமிழரை விரட்டி விரட்டி அடித்த போது,இலங்கை இனப்பிரச்சனையில் நம் ராணுவ நடவடிக்கைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனானப்பட்ட உலக வல்லரசாம் இங்கிலாந்தின் நேர்மையும் கூட சில்காட் அறிக்கையால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆக அத்துமீறுதல் என்ற நிலை இந்தியாவுக்கு என்றைக்கும் சாத்தியம் இல்லை,ஏன் விரும்பத்தகாத‌ நிலையும் கூட.

Friday, May 13, 2016

அடுத்த ஆட்சி...? திமுக..? அதிமுக..? கேப்டன்..? சீமான்..?

தொடர்ச்சி...


என் கணிப்பின் படி  கண்டிப்பாக வெல்ல இருக்கும் வேட்பாளர்கள்...


1.மா.சுப்பிரமணியம் திமுக 

2.சிவசங்கர் திமுக‌

3.சக்கரபாணி திமுக‌

4.ஐ.பி திமுக‌

5.செங்கோட்டையன் அதிமுக‌

6.தங்கம் தென்னரசு திமுக‌

7.அப்பாவு திமுக‌

8.சி.ஆர்.சரஸ்வதி அதிமுக ( அக்காவோட ஸ்பீச்சுக்கு நான் அடிமை மக்கழே)

9.பூங்கோதை ஆலடி அருணா திமுக‌

10.கிருஸ்ணசாமி புதிய தமிழகம்

11.ஜிவாஹிருல்லா ம.ம.க‌

12.தனியரசு அதிமுக‌

13.அன்புமணி பா.ம.க‌

14.ஆஸ்டின் திமுக‌

15.துரைமுருகன் திமுக‌

16.மா பாண்டியராஜன் அதிமுக‌


என்னுடைய தொகுதியான திருமயத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி 15,000 வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். 

என் பகுதிகளில்,


1.புதுக்கோட்டை அதிமுக ( முரசு வேட்பாள்ரின் வாக்கு பிரிப்பால் பெரியண்ணன் அரசு வெல்வது கடினம் )


2.விராலிமலை திமுக (அமைச்சர் விஜய பாஸ்கர் கடும் போட்டி )


3.கந்தர்வகோட்டை அதிமுக‌


4.ஆலங்குடி திமுக 


5.அறந்தாங்கி கடும் போட்டி


6.காரைக்குடி அதிமுக‌


7.திருப்பத்தூர் திமுக (வீடியோ வந்த பின் க‌டும் போட்டி)



தமிழகத்தில் கடும் இழுபறி நிலவும்  தொகுதிகள்,


1.திருச்செந்தூர்

2.திருவாடணை

3.கோவை தெற்கு

4.உளுந்தூர்பேட்டை

5.கடலூர்

6.மேட்டூர்

7.தளி

8.விருகம்பாக்கம்

9.செஞ்சி

10.விழுப்புரம்

11.திருக்கோவிலூர்

12.சிவகங்கை

மொத்தத்தில் என்னுடை கணிப்பின் படி அடுத்து திமுக ஆட்சி அமைக்கிறது. தொகுதிகளின் படி,


திமுக கூட்டணி 120  - 130


அதிமுக கூட்டணி 90 - 100


தேமுதிக,ம.ந.கூ,த.மா.கா 5‍ - 9


பா.ம.க  2‍ - 4


பா.ஜ.க 1- 2


நா.த.க 0- 1


என் கணிப்புகள் - 1

நாளையில இருந்து கருத்துக் கணிப்பு வெளியிட தடையாம்...அதனாலா எல்லாரும் முண்டியடிச்சுக்கிட்டு கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுறாங்க. எனக்கு அரசியல்ல சின்ன வயசில இருந்தே ஆர்வம் அதிகம். 2004 நாடாளுமன்றத் தேர்தல்ல இருந்து தேர்தல் முடிவன்னைக்கு நான்  டீவி முன்னாடி தான் கெடப்பேன்.சின்ன வயசுலயே அரசியல் ஆர்வம் வர முக்கிய காரணம் அப்பா. வாரம் தவறாம எல்லா அரசியல் புலனாய்வு இதழ்களையும் வாங்கிட்டு வந்து குடுத்து படிக்க சொல்லுவாறு. (பெரும்பாலும் நக்கீரன் ) எங்க தாத்தா வீட்ல தலைகீழ். பக்கா ஏ.டி.எம்.கே. எம்ஜிஆர் புராணம், அதிமுக சாதனை வரலாறுன்னு கேட்டு கேட்டு தெரிஞ்சுக்குவேன். அப்புறம் நம்ம மிரட்டுநிலை ஹை ஸ்கூல். பசங்களோட மதியம் பக்கத்துல உள்ள டீக்கடைக்கு போய் எல்லா பேப்பரையும் அலசி ஆராய்வோம். எட்டாவது வந்ததுக்கு அப்புறம் ப்ரேயர் நடத்துனதும் அதுல செய்திகள் வாசிச்சதும் நானே. அதுனாலயும் இருக்கலாம். அப்ப வாசிச்சதுல இன்னைக்கும் மறக்காம இருக்க தலைப்பு செய்திகள்ல ஒன்னு," திருமங்கலம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் லதா அதியமான் 40000 ஓட்டு வித்தியாச்த்தில் அபார வெற்றி".இப்ப ஏன் இதெல்லாம் சொல்றேன்னா, நானும் கருத்துக்கணிப்பு வெளியிடப் போறேன்... ;)




கடந்த எம்.பி எலக்சன்ல தான் முதல் முறையா வாக்களிச்சேன். அப்சொல்யூட்லி திமுகவுக்கு தான். இந்த முறை யாருக்குன்றத கடைசியா சொல்றேன். கடந்த தேர்தலுக்கு நான் கணிச்சது டோட்டலா அவுட். கன்னியாகுமரி,புதுச்சேரி அப்புறம் என்னோட தொகுதியான சிவகங்கை தவிர மத்த எதுவும் நடக்கல. அதுனால என்ன..?  கணிப்பு விடாம இருந்துருவனா... ஆனானப்பட்ட நக்கீரனே போனதடவை(2011) திமுக 180 தொகுதில ஜெயிக்கும்னு சொல்லிட்டு இன்னிக்கு மறுபடி கணிப்பு சொல்ல வரல...?சரி நம்ம கணிப்புலகிற்குள் நுழையலாம்.

கருத்துக் கணிப்புகள் நடக்கும்னு நம்பவே முடியாது. ஒரு சில விதிவிலக்கு இருக்கலாம். எனக்குத் தெரிஞ்சு இது வரைக்கும் சோடை போகாத ஒரே கருத்துக் கணிப்பு டாக்டர்.ராஜநாயகம் (லயோலா) கருத்துக் கணிப்பு மட்டும் தான். 2006ல திமுகன்னார், அதே நடந்தது. 2011ல அதிமுகன்னாரு அதே தான் நடந்தது. இபோ திரும்ப திமுகங்குறாரு. பாப்போம்.என்னைப் பொறுத்த வரை 2006ல் திமுக ஜெயிச்சதுக்கு காரணம் திமுக தேர்தல் அறிக்கை. 2011ல அதிமுக ஜெயிச்சதுக்கு காரணம் 2ஜி வெறுப்பு. அதே போல 2016ல திமுக ஜெயிச்சதுன்னா அதுக்கான காரணமும் திமுகவோட தேர்தல் அறிக்கையாத்தான் இருக்கும். காரணம் ரொம்ப சிம்பிள்.அது, ஜெயலலிதா. ஆம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த 5 ஆண்டு ஆட்சி போல நடக்க சான்சே இல்ல. அப்டி இருந்தும் இவ்ளொ வோட்டு அள்றதுக்கும், இவ்ளோ கான்பிடண்ட்டா அதிமுக  இருக்கறுத்துக்கும் முக்கிய காரணம் ஜெ,ஜெ,ஜெ மட்டுமே. இது தமிழகத்தோட டிசைன்.



சென்ற முறை இளைஞர்களின் முழு ஆதரவு மோடிக்கு என்று சொன்னேன்,அப்படியே இருந்தது. இம்முறையும் பாஜகவுக்கு இளைஞர்களிடம் ஆதரவு இருக்கிறது என்று சொன்னால் நம்பவே முடியாது. ஆனால் அது தான் நிதர்சனம். ஆனால் கடந்த முறை அளவுக்கு இல்லை. அப்போ அந்த ஓட்ட பிரிக்குறது யாரு...? நீங்கள் கற்பனையே செய்ய முடியாத நபர். ஆம் சீமான். நாம் தமிழர் கட்சிக்கு இளைஞரகளிடம் அதீத ஆதரவு. அதற்கு அடுத்த இடத்தில் நம்ம கேப்டன். பின்பு பிஜெபி, அதற்குப் பின்னரே திமுக அதிமுக. 

ஆக முதல் முறை வாக்காளர்கள்/இளைஞர்கள் ஆதரவு,


1.சீமான்
2.கேப்டனின் ம.ந.கூ (அதுவும் முரசுக்கு மட்டுமே)
3.பி.ஜெ.பி
4.திமுக‌
5.அதிமுக‌

என் கணிப்பின் படி ஜெயிக்க இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள்....


1.ஜெயலலிதா‍ ஆர்.கே.நகர் (வாக்கு வித்தியாசம் இடைத்தேர்தலைக் காட்டிலும் வெகுவாக குறையும்)


2.கலைஞர்‍ - திருவாரூர்


3.ஸ்டாலின் - கொளத்தூர் ( வாக்கு வித்தியாசம் குறைவாக)


4.வசந்த குமார் (காங்கிரஸ்)

5.ஓபிஎஸ் - போடி  அதிமுக‌

இதுக்கும் மேல கண்டிப்பா ஜெயிபாங்கண்ணு சொல்ற ஸ்டார் வேட்பாளர்கள் இல்லை.

எனக்குப் பிடித்த கண்டிப்பாக சட்டமன்றம் செல்ல வேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளர்கள்....


1.சீமான்- கடலூர் (வெற்றி பெறுவது கடினம், ஆனால் அதையும் மீறி வென்றால் மிக்க மகிழ்ச்சி. தோல்வி அடைந்தாலும் 30000 வாக்குக்கு மேல் வாங்குவார்)


2.திருமா- காட்டுமன்னார்கோவில் ( ம.ந.கூ ஒரே நம்பிக்கை ,கடும் போட்டி , ஆனாலும் வென்றுவிடுவார் எனும் நம்பிக்கை இருக்கிறது)


3.கேப்டன் -  உளுந்தூர்பேட்டை ( வரும் செய்தியெல்லாம் பாத்தா ஒன்னும் சொல்றதுக்கில்ல)


4.வானதி - கோவை ( கடும் போட்டி )


5.ஆளுர் ஷானாவாஸ் - குன்னம் ( கடும் போட்டி)


6.தமிழிசை - விருகம்பாக்கம் (வெல்வது கடினம் )


7.அன்பில் மகேஷ் - திமுக ( வெற்றி)

8.வி.சி.சந்திர குமார் ம.தே.மு.தி.க 


தொடர்ச்சி நாளை...

Tuesday, May 10, 2016

நுழைவுத்தேர்வு

நுழைவுத்தேர்வு வைத்து தான் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதற்கு ஆட்சேபிக்காத மத்திய அரசின் நிலைப்பாடுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதிலும் தமிழகம் போன்ற பதினோறாம் வகுப்புகளே பெரும்பாலும் நடத்தப்படாமல் 12ஆம் வகுப்பை நேரடியாக நடத்தி மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக வைத்திருக்கும் நமக்கு இது பொருந்துமா என்பதையும் பார்க்க வேண்டும். சிபிஎஸ்இ தரத்திலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் போது அதை எழுதும் மாணவர்களின் கல்வித்தரமும் அப்படியே இருக்க வேண்டும். நுழைவுத்தேர்வுக்கென தனி சிறப்பு வகுப்புகள் செல்லும் மேட்டிமைத்தன அல்லது பணக்கார மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். கிராமப்புற ஏழை நடுத்தர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு குறித்த ஐயப்பாடுகளே இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை எனும்போது நுழைவுத்தேர்வு எழுதினால் தான் மருத்துவர் கனவு சாத்தியம் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்..?

Thursday, February 18, 2016

விஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....?

விஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....?


இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி, இதுவாகத் தான் இருக்க முடியும் தமிழக அரசியல் களத்தில். 2005 ஆம் ஆண்டு அவரின் கட்சி துவக்க விழா மாநாட்டை  இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரம்மிப்பாக உள்ளது. என்னா கூட்டம், மதுரையில்... ஆனால் அவராலுமே கூட தனித்தே நின்று ஒரு மாற்றாக வளர முடியவில்லை என்று நினைக்கும் போது அவருடைய அணுகு முறை மாற்றம் பெறுவதில் தவறு சொல்ல முடியாது. தனித்தே நின்று வாக்குகளை சிதறடித்துக் கொண்டே இருக்கும் போது தொண்டர்களும், பணம் செலவு செய்பவர்களும் விரக்தியடைந்து விடுவார்கள். அதற்காக 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானது நல்லதொரு முடிவுதான் என்னைப் பொறுத்தவரை. அதற்குப் பின் என்ன நடந்தது என்பது நாடறியும்.

Tuesday, February 16, 2016

புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?


புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?


தேர்தல் நெருங்கும் போதெல்லாம் கருத்துக் கணிப்பை நடத்திவிடுவது என்பது எல்லா ஊடகத்தினருக்கும் எழுதப்படாத விதி ஆகிவிட்டது. சரி எடுக்கப்படும் கணிப்புகளாவது குறைந்தபட்ச நேர்மையைக் கொண்டிருக்கின்றனவா என யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.லயோலா ஆரம்பித்து வைத்த இந்த கணிப்பு கண்ணாமூச்சி ஆட்டம், தேர்தல் தேதிவரை தொடரத்தான் போகிறது. எல்லாமுமே அதிமுகவை விட திமுக நூலிழை வித்தியாசத்தில் பிந்தங்கி தமிழக மக்கள் மாற்றம் என்றால் என்ன என்று யோசிக்கக் கூட இடம் தராதவைகளாகவே இருக்கப் போகிறது. 

Sunday, February 14, 2016

மாற்று அரசியல் சாத்தியமாகுமா....?


மாற்று அரசியல் சாத்தியமாகுமா....?

எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை வித்தியாசமாக அமையப் போகிறது வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல். மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கூட. எப்போதும் ஆளும் கூட்டணி, அதற்கு எதிரான ஒரு கூட்டணி, மூன்றாவதாக சிறிய அணி என நடைபெற்ற தேர்தல் இம்முறை பலமுனை போட்டிகள் கொண்டதாக இருக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்ததே..! தற்போதைய சூழலில் அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, மக்கள் நல கூட்டணி, பாமக, புறக்கணிக்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ள நாம் தமிழர் கட்சி, தனித்து விடப்பட்டுள்ள பா.ஜ.க என ஆறு முனை போட்டி. கடைசிநேர மாற்றத்திற்குட்பட்டு 5 முனைப் போட்டி என்பது உறுதியான ஒன்று.


Monday, December 7, 2015

கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?


 கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?




தமிழக மக்களின் மனிதத்தையும் மக்கள் ஒற்றுமையையும் கண்டு இந்தியா மட்டும் அல்ல உலகமே மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மீட்பு பணிகள்  கடந்து மறுகுடியமர்வு வரைக்கும் உதவிக்கரம் நீண்டு கொண்டிருக்கிறது. எல்லாமுமாக இருந்து செயல்படுவது பிறபகுதி பொதுமக்களும் தன்னார்வலர்களுமாகத் தான் இருக்கிறார்கள். அப்படியானால் அரசு...? இருக்கிறது, ஸ்டிக்கர் ஒட்ட, அடியாட்களை வைத்து மிரட்ட, நொடிக்கொருமுறை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க என்று வசனம் பாட, அதற்கும் மேல் அறிக்கை அர்ர்ச்சனை நடத்த. வெட்கம் மானம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கமலஹாசன் அவர்கள் கூறிய கருத்துக்கு 3 பக்க அளவுக்கு கண்டன அறிக்கை விடத்தெறிந்த அரசுக்கு மக்களுக்கு ஆறுதல் சொல்லிக் கூட அறிக்கை வெளியிட முடியவில்லை. அறிக்கை கூட வேண்டாம் டிவியில் கூடவா  தோன்றி ஒரு உரையை நிகழ்த்தக்கூடாது. ஆளுங்கட்சியின் இயலாத் தனமும் அதிகார குவிப்பும் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். எதற்கெடுத்தாலும் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மந்திரிகள், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்க திராணி இல்லாத மந்திரிகள் என அமைச்சராக இருப்பதற்கான தகுதிகளையே இழந்து நிற்கிறது அதிமுக அரசு.

மீட்புப் பணிகளுக்கு ராணுவம் வந்திராவிட்டால் அதிமுக அரசு ஒன்றுமே செய்திருக்காது என்பது தான் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த ஆதங்கம். ஆனால் நொடிக்கொருமுறை மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கினங்க எனும் வார்த்தையைக் கேட்டுக் கேட்டு காது எறிகிறது. மியாட் மருத்துவமனை பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் துறை செயலாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும், அமைச்சர்களுக்கான கேள்விகளுக்குக் கூட அதிகாரிகளே பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதும் என்ன நடக்கிறது என்பது புரியாதது போலவே தேமே என உட்கார்ந்திருந்த அமைச்சர்களை பார்க்கும் போது எரிச்சலும் கோபமும் வந்தது. இத்தனைக்கும் அரசின் உயர் பொறுப்பு அமைச்சர்கள் அவர்கள்.

ஒரு நல்ல அரசாக இருந்திருந்தால் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தேவைப்படும் இடங்களுக்கு அரசே அனுப்பியிருக்கலாம்.பலவித குழப்பங்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம்.  உயர் நீதி மன்றம் குட்டு வைத்தபின்பே இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டது என்பது கூட மறைக்கப்பட்டு ஒவ்வொரு பேருந்திலும் முதல்வரின் படத்தை ஒட்டி மலிவு விளம்பரம் தேடிய அரசு தான் இந்த அரசு. எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேடும் இந்த செயல் திமுக ஆட்சியில் கூட இருக்கவில்லை எனபதே நிதர்சனம். ஆனால் நாளை இதே ஒரு பாணியாக மாறிவிடும். ஒரு பேரிடர் ஏற்படும் போது மக்களின் முதல் எதிர்பார்ப்பு முதல்வரோ அமைச்சரோ வந்து ஆறுதல் சொல்வார்கள் என்பதாகத் தான் இருக்கும். அது தான் நடைமுறையும் கூட. ஆனால் முதலமைச்சரோ சென்ற வெள்ளத்திற்கு கார் கண்ணாடியை கூட இறக்காமல்  பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து வாக்காளப் பெருமக்களே என வாக்கு சேகரித்துவிட்டு சென்றார். இந்த முறை வேறு வழியில்லாமல் ஹெலிகாப்டரில் பார்வையிட்டு ? சென்றார். அவ்வளவு தான், ஆளையே காணோம். டிவியில் கூடதோன்ற நேரமில்லை, அந்த அளவு அரசுப் பணியில் பிசி.

வழக்கத்திற்கு மாறாக மத்திய அரசே நேரடி நிவாரணம் அளிக்கும் அளவுக்கு மெத்தனமான மாநில அரசாக இருக்கிறது.தன்னார்வலர்களுக்கும் அரசுக்குமான ஒருங்கிணைப்பு முழுவதும் இல்லை இன்னும் கூட. எந்த செயல்களிலும் இல்லாத அளவு இந்த முறை பொதுத் தளத்திலும், சமூக வலைதளங்களிலும் படு தோல்வி அடைந்திருக்கிறது ஆளும் அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.  குறிப்பாக இளையவர்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்து செல்லாக் காசாக மாறிவிட்டது அரசின் செயல்பாடுகள். இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் வெற்றியை தீர்மானிக்கப் போவது பணம் தான் என முடிவெடுத்து செயல்படுகிறார்கள் போலும். எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது அதே போலத் தான் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கிட முடியாது.  PREDISASTER PREPARATION, DURING DISASTER MITIGATION ல் தான் தோல்வி, RE-HABITATION , RECONSTRUCTION  யாவது சீரிய முறையில் செய்து இழந்த பெயரை மீட்கப் பாருங்கள். இல்லை என்றால் தமிழகத்தில் உங்கள் இருப்பே கேள்விக்குள்ளாக்கப் படும்.

Tuesday, February 17, 2015

ரஜினி ! ‍ அரசியலா ? அடுத்த படமா ?



                     
ரஜினி !  ‍ அரசியலா ? அடுத்த படமா ?



இரண்டு நாள் முன்னர் லிங்கா பிரச்சனையின் பிரஸ்மீட் வீடியோவை சமூக வலைத் தளங்களில் காண நேர்ந்தது.என்னடா உண்ணாவிரதம் இருந்தவர்களை இடையில் ஆளைக் காணோமே என்று பார்த்தேன். இதோ இருக்கிறோம் என அடுத்த ரவுண்ட் கிளம்பிவிட்டார்கள்.ஆமாம் இப்போ பிச்சை எடுக்கும் போராட்டமாம்.(இவ்வளவு நாளாமட்டும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்களாம்) தொடக்கத்திலிருந்தே இந்த பிரச்சனையின் சாராம்சம் எனக்குப் புரியாமலில்லை.இருந்தாலும் என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே என இத்தனை நாள் இது பற்றி நான் வாயே திறக்கவில்லை.

முதலில் படம் வெளியான மூன்றாவது நாளே படம் சரியில்லை ,ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா,ரஜினிக்கெல்லாம் மாஸ் குறைந்துவிட்டது,அவர் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்று ஒருவர் கிளம்பினார். பெயர் சிங்காரவேலனாம்.அவருக்குமுக்கியத்துவம் அளித்து அவரை வளர்த்துவிட்டது இந்த நடுநிலை ? ஊடகங்கள்.அதற்கடுத்து பல காட்சிகள் அரங்கேறின. கன்னடர் என்றார்கள்,தமிழருக்கு துரோகம் என்றார்கள்,அவர் என்ன பெரிய ..... என்று கூட கேட்டார்கள்.அதெல்லாம் நமக்கு தெரிந்த கதை தான்.உண்ணாவிரத  போராட்டத்துக்கு சீமான்,வேல்முருகன் போன்றவர்கள் வரும்போதே அவர்களுடைய சாயம் வெளுத்துப் போனது. நேற்றைக்கு ஒரு பிரஸ் மீட் . இப்போது தான் வெளிப்படையாகவே புரிகிறது. அவர்களுடைய டார்கெட் ரஜினிகாந்த் என்பது.



அந்த சிங்கு சொல்கிறார், தமிழகத்தில் லிங்கா படத்தைப் பார்த்தவர்கள் மொத்தமே 40 லட்சம் பேர் தானாம். இதிலிருந்தே அவர்களின் அண்டப் புளுகு வெளியே வந்துவிட்டது.

முதல் நாள் இரவுக்காட்சி என் நண்பர்களுடன் ராம் தியேட்டருக்கு சற்று நேரமாகியே சென்றோம். ( மூன்று தியேட்டர்: ராம்முத்துராம்,பேரின்பவிலாஸ்,பாம்பே ரிலீஸ் என்பதால்  ) ராம் தியேட்டரில் டிக்கெட் இல்லை. ஒருடிக்கெட் 250 ரூபாய் என்பதும் கவனிக்கத்தக்கது. அடுத்து அவசர அவசரமாக பேரின்பவிலாஸ் சென்றோம். அங்கே இருந்த டூவீலர்களை பார்த்து நான் மயங்கி விழாத குறைதான். அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி( டிக்கெட் விலை 200) உள்ளே போனால் அங்கே தியேட்டரே புல். முன் வரிசை மட்டுமே இருந்தது. மூன்று தியேட்டர்களிலும் நள்ளிரவு 12 மணியிலிருந்து நாளொன்றுக்கு 6 காட்சிகள் முதல் மூன்று நாடகள். மூன்று தியேட்டர்களின் குறைந்தபட்ச‌ இருக்கை 1500 என்று வைத்துக் கொண்டாலும் 1500*6 = 9000 பேர் ஒரு நாள். 27000 பேர் மூன்று நாள். ஒரு டிக்கெட் 200 என்றாலும் 54 லட்சம் திருனெல்வேலி நகரில் மட்டும். இதே போல தமிழகம் முழுதும் 600க்கும் மேற்பட்ட திரைகளில் லிங்கா ரிலீஸ். நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். கோவை ஏரியாவில் மட்டும் 40 லட்சம் பேர் பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் கணக்கு தமிழகம் முழுதும் 40 லட்சம் பேராம். இந்த சிறிய கணக்கீட்டிலேயே எவ்வளவு பெரிய பித்தலாட்டம் நடைபெற்றிருக்கிறது என யூகிக்கலாம்.

சரி அடுத்த பிரச்சனைக்கு வருவோம். உண்ணா விரதம் இருந்த பின்பு அமைதியாகிவிட்டார்கள். இடையில் ரஜினி திருப்பூர் சுப்பிரமணியத்தை பொறுப்பாளராக நியமித்து நஸ்ட ஈடு தரப்போவதாக சொன்னார்கள். ஆனால் இவர்கள் கொடுத்த 40 லட்சம் கணக்குப் பார்த்து இவர்களின் வண்டவாளங்களை புரிந்து கொண்டு அமைதியாகிவிட்டனர் போல.சரி படம் ஓடவில்லை. நஸ்டம். அப்போ யாரிடம் நஸ்ட ஈடு கேட்க வேண்டும். இவர்கள் யாரிடம் வாங்கினார்களோ அவர்களிடம் தானே. அதாவது வேந்தர் மூவீஸிடம், வேந்தர் மூவீஸ் ஈராஸிடம், ஈராஸ் தயாரிப்பாளரிடம். ஆனால் இதில் ரஜினி எங்கேயிருந்து வந்தார் ?? அரசியல்வியாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?


இந்த கூட்டுப் பிச்சைக்காரர்களின்  பிச்சை எடுக்கும் போராட்ட அறிவிப்பின் பத்திரிக்கை செய்தியைப் படிக்கும் யாருக்கும் கோபம் வரும். அப்படியானால் ரஜினி ரசிகன் ?? கோபத்தின் உச்ச  கட்டத்தை அடைவான்.

"ரஜினி படத்தை வாங்கினால் பிச்சை தான் எடுக்க வேண்டுமாம்" அத்தோடு நிற்கவில்லை "ரஜினியை நம்பும் பொதுமக்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டுமாம்"  இங்கு தான் இடிக்கிறது. இங்கே எதற்காக மக்கள் வருகிறார்கள்? மக்கள் ஏன் ரஜினியை நம்ம்புகிறார்கள் ??


முகப்புத்தகத்தில் ரஜினி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அக்கவுண்டையே டெலிட் செய்துவிட்டு ஓடிய சிங்காரவேலனுக்கு, ரஜினியின் மனம் புண்படும் படி பேசியிருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாய் பிரஸ்மீட்டில் பம்மிய இந்த சிங்கார வேலனுக்கு இந்த ஒரு மாத இடைவெளியில் எங்கே இருந்து இவ்வளவு தைரியம் வந்தது.அதுவும் ரஜினியின் இமேஜின் அடிச்செங்கலை ஆட்டம் காணச் செய்யுமளவுக்கு அறிக்கை தயார் செய்ய எங்கிருந்து பலம் வந்தது.

அது தான் அரசியல். இடையில் ரஜினி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_சங்கர் படம் குறித்தான செய்திகள் வந்த போது அமைதியான இந்த பிச்சைக்கார கூட்டம் இப்போது மீண்டும் கிளம்பியிருப்பது அதுவும் வலுவுடன் கிளம்பியிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

மொத்தத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசன்மென்ட் ரஜினியினுடைய செல்வாக்கை அசைப்பது அல்லது முற்றிலும் பெயர்ப்பது. எதற்காக? ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். ரஜினியின் அரசியல் பிரவேச நினைப்பை மழுங்கடிக்க மக்கள் மத்தியில் மறக்கடிக்க. இனவாதம் பேசி ரஜினியை தாழ்த்த முயன்று தோற்ற கூட்டம் இன்று ஈனவாதம் பேசி வெல்ல நினைக்கிறது.இவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் ஆட்டமே அடங்கியிருக்கிறது.

பிச்சையெடுக்கும் போராட்டத்தை ரஜினியின் வீட்டு வாசலிலிருந்து தொடங்கப் போகிறார்களாம். இதற்கு முதல் பிச்சை போட்டு தொடங்க இருப்பவர் பெரிய அரசியல் புள்ளியாம். அது ராமதாஸ் என்று சந்தேகம் கிளப்புகிறது தி இந்து தமிழ் நாளிதழ். நீ யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு பிச்சையெடு. அது கேள்வியல்ல ரஜினியை இழுக்கக் காரணம் என்ன ? அப்படியே இழுத்தாலும் அவர் மீதான விமர்சனப் பார்வைகளும் போராட்ட வாசகங்களும் எதற்காக?


தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள ரஜினிக்கு இது தான் இறுதியான வாய்ப்பு. ஒரு வாதத்துக்காகவேணும் அவர் அரசியலுக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் அவரை எதிர்க்கப் போவது ஏறத்தாழ எல்லாக் கட்சிகளுமே தான். பா.ஜ.க தவிர !! வார்த்தை வசை பொழியப் போவது ராமதாஸும்,சீமானும் , வேல்முருகனும் தான். இம்மூவருமே இந்த பிரச்சனையில் வெளிப்படையாக ஆதரவளித்துள்ளனர். பின்னால் இருப்பது யாரோ ?? அது ஊரறிந்த ரகசியம்.

ஒரு வேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் ஜெயிக்கிறார் தோற்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவருக்கான ஓப்பனிங் எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். ஆம் அவர் படத்திற்கு கிடைக்கும் அளவு அந்த பிரம்மாண்ட ஓப்பனிங்கை ஓட்டாக்குவது அவருடைய சாமர்த்தியம் சார்ந்தது. அர்சியல் சார்ந்தது. ஆனால் அந்த ஓப்பனிங் கூட இருக்கக் கூடாது என்பது மட்டும் அல்ல அவர் அரசியல் பக்கமே திரும்பக் கூடாது என்பதற்கான நேரடி எச்சரிக்கை தான் இந்த பிரச்சனையின் உள்நோக்கம்.

லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார், " ரஜினியை கூட இருந்து பார்த்துப் பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன் , அவர் அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி " என்று. இது ஏதோ படம் வெளியாகும் சம்யத்தில் பப்ளிசிட்டி தேட சொன்னதல்ல. படம் வெளியாகி பிரச்சனை கிளம்பி பெட்டிக்கு திரும்பியவுடன் சொன்ன செய்தி.

இனிமேலும் தான் அரசியலுக்கு வருவேன் என்ற பூச்சாண்டியைக் காட்ட தயாரில்லை என்பதைத்தான் லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ஓரளவு வெளிப்படையாகவே குறிப்பிட்டார் ரஜினி. நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்ற காலம் போய் நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை. தயங்குகிறேன் என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டார். ஆக அரசியல் ஆசை ரஜினிக்கு இல்லாமலும் இல்லை.



இன்னொன்று ரஜினியின் மேலான பெரிய தவறு, தன்னுடைய பலத்தையும் செல்வாக்கையும் இந்த உலகத்திற்கு காட்டவே இல்லை. குறைந்தபட்சம் காட்டுவதற்கு முயற்சி கூட செய்யவில்லை.1996, 2002 காவிரி உண்ணாவிரத போராட்டம் இந்த நிகழ்சிகளுக்குப் பின்பு ரஜினியின் செல்வாக்கு ஒரு முறையும் சோதித்தறியப்படவில்லை.யார் யாரோ தங்களுக்கு செல்வாக்கே இல்லை என்றாலும் தேடிப் போய் பிரதமர் வேட்பாளரை சந்திப்பது,காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பது என தங்கள் இமேஜை தக்கவைத்துக் கொள்ள முயல்கிறார்க‌ள். ஆனால் ரஜினி அதை செய்யவில்லை. தன்னுடைய செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்று நம்புகிறார். இல்லை , கூட இருப்பவர்களால் நம்ப வைக்கப் படுகிறார்.இது தான் அவரின் அரசியல் நினைப்புக்கு முட்டுக்கட்டை போடும் மிகப்பெரிய சவால். அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் ஒரு ரசிகர் மன்ற மாநாடு நடத்தக்கூட முயற்சி செய்யவில்லை.  சந்திரமுகி திரைப்பட விழாவிலிருந்து ரசிகர்கள் சார்பாக வைக்கப்படும் கோரிக்கை ரசிகர் மன்ற மாநாடு. அதை ஒவ்வொரு பட விழாவிலும் அவரே சொல்வார். பின்னர் அமைதியாகிவிடுவார். இது அவருடைய பெரிய பல்வீனம் என்றே சொல்லலாம்.

சரி இப்போது ரஜினி செய்ய வேண்டியது என்ன.? ஒரு வேளை அவர் தன்னுடைய அடுத்த படம் குறித்து அறிவித்தால் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போய்விடும். அடுத்த படம் சங்கருடனோ இல்லை யாருடனோ என அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வந்தாலே போதும், இந்த போராட்டக் காரர்களுக்கு அது தான் வேண்டும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது ஆவ்வளவு தான்.

அது எப்படி ? எனச் சந்தேகம் எழுந்தால் நீங்கள் இன்னும் சிறு குழந்தையாகவே இருக்கிறீர்கள் என அர்த்தம். அதாவது அடுத்த படம் அறிவித்தால் அதை முடிக்க குறைந்தபட்சம் 1 வருடம் . சங்கர் படம் என்றால் 2 வருடம் கூட ஆகலாம். அப்போ எங்கிட்டு அரசியலுக்கு வருவது. 2016ல் தேர்தல். நீங்கள் நினைக்கலால் 2021 இருக்கிறது என்று. அப்போ , "வளர்மதி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன அந்த ரேஞ்ச் ஆயிறும்". அதாவது அப்போ அவர் வயது 70 ஐ தாண்டிவிடும். இப்போது புரிகிறதா ? எதற்காக இந்த அளவு ரஜினியின் மீது அவர்களுக்கு இவ்வளவு கோபம் என்று.


சரி அடுத்த படம் அறிவித்து பிரச்சனையிலிருந்து தற்காலிகமாக தப்பிவிடலாம் என்று நினைத்தால் அங்கே தான் ரஜினிக்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருக்கிறது. ஆம், ஒரு வேளை ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வந்தால் இத்தனை ஆண்டுகாலம் அவர் கட்டிக்காத்து வந்த மக்கள் செல்வாக்கு, ஒரே ஒரு கேள்வியில் தூள் தூளாக அடித்து நொறுக்கப்படும்.


இத்தனை ஆண்டுகாலம் உங்கள் சுயநலத்திற்காகத்தானே அரசியல் பூச்சாண்டி காட்டினீர்கள் என்ற , இந்த கேள்வி தான் அது. இன்னொரு படம் நடித்து அது ஓடினாலும் ஓடாவிட்டாலும் திரையுலகின் இன்னொரு சிவாஜியாக வலம் வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார். ரசிகர்களுக்கு அவர் மீதிருந்த அத்தனை அபிப்ராயங்களும் தளர்ந்து அவரும் ஒரு சராசரி நடிகர் என்ற நிலைக்கு தாழ்ந்துவிடும் அபாயம் கூட நிகழலாம். எனவே தன் செலவாக்கை தக்க வைக்க வேண்டுமானால் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு காரணம் ஊடகங்களோ இல்லை அவரின் ரசிகர்களோ இல்லை. முழுக்க முழுக்க அவரே காரணம். நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்திருந்தால் இந்நேரம் இவ்வளவு நெருக்கடிக்கு ஆளாகியிருக்க மாட்டார்,கமலஹாசன் போல படம் நடித்துக் கொண்டிருப்பார். அவருடைய ரசிகர்களும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பர். அதை விடுத்து அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி அவருக்காக செலவு செய்து நொடித்த ரசிகர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.அது ரஜினிக்கும் தெரியும். அவர் ரசிகர்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது அரசியலுக்கு வருவது தான் ஒரே வழி.

சமீபத்திய இவரின் மௌனமும் இதையே தான் காட்டுகின்றதென நான் நினைக்கிறேன்.இதில் எனக்கு இருவர் மீது வருத்தம்.

ஒன்று ஊடகங்கள். அவர்கள் கொடுக்கும் செய்தியை அப்படியே வெளியிடுகின்றன. நேற்றும் கூட "ரஜினியை நம்பினால் பிச்சை தான் எடுக்க வேண்டும்"  என்ற வாசகம் உடபட அப்படியே பிரிண்டிட்டிருக்கிறார்கள். ஆனால் செய்தியாளர் சந்திப்பில் அவர்களிம் எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் திணறிய செய்தி வரவே இல்லை.  அவர்களின் உண்மை முகத்தை காட்ட யாருக்கும் தைரியமில்லையா ? இல்லை வர வேண்டியது வந்துவிட்டதா ?? இது தான் நடுநிலை ஊடகங்களின் செயல்பாடு. சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் சொல்லத் திராணி இல்லாத சிங்காரவேலன் & கோ வை அசைக்கக்கூடிய சக்தி இந்த தமிழ்நாட்டு ஊடகங்கள் எதற்குமே இல்லையா???

வேல்முருகன் கூறுகிறார் இதை இப்படியே விடாமல் தமிழ் சக்திகளை ஒன்றினைத்து மாநிலந்தழுவிய போராட்டத்தை முன்னெடுக்குமாம். வெட்கமாக இல்லை எனக் கேட்க வேண்டிய ஊடகங்கள் அதையும் கொட்டை எழுத்திஉல் அச்சிட்டு அனுப்புகின்றன.





இன்னொரு கோபம் ரஜினி ரசிகர்கள் மீது. ஆம் தங்கள் அபிமான நடிகரைக் கொச்சைப்படுத்தும் இவர்களை எதிர்த்து எந்த ஒரு ரஜினி மன்றமும் போராட்டம் நடத்தவில்லை. குறைந்தபட்சம் கண்டண அறிக்கைகள் கூட வரவில்லை. 1996ல் தன் தலைவரின் உத்தரவைக் கேட்டு ஆட்சியையே மாற்றியவர்கள், 2002 ல் தன் தலைவனுடைய உண்ணாவிரத போராட்டத்தில் தங்கள் சக்தியை நிரூபித்தவர்கள், 2011ல் தங்கள் தலைவனுக்காக கோவில் கோவிலாக அலைந்தவர்கள்  திராணி இவ்வளவுதானா?? எதிர்ப்புக் குரல் வலுவாக வராததால் தான் அந்தக் கூட்டம்  இப்படி ஆட்டம் போடுகிறது. இல்லை மேலிட உத்தரவின் பேரில் அமைதி காக்கின்றனரா ?? எனக்குப் புரியவில்லை. தங்களின் பலம் என்ன என்பதைக் காட்டாததால் தான்,  செல்வாக்கே இல்லையென நினைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் கூட்டம்.


ரஜினியிடம் ஒரே ஒரு வேண்டுகோள் ,

தலைவா பொறுத்ததெல்லாம் போதும், பொங்கியெழு..... உன்னைப் பற்றி தப்புக்கணக்கு போடும் போலிகளுக்கு உன் ஆறாவது முகத்தைக் காட்டு.

தலைமையே இல்லாத தமிழகத்துக்கு தலைமை ஏற்க வா !! இனி நீ அமைதி காக்கும் ஒவ்வொரு நாளும் உனக்கெதிரான சதிவலை பெரிதாகி பெரிதாகி உன்னையும் எங்களையும் வரலாற்றிலிருந்தே மறைத்துவிடும். அந்த அளவு வீரியத்துடன் பின்னப்படும் அச்சதிவலையை அறுக்க உன் ஒரு வார்த்தை போதும். அந்த ஒருவார்த்தை தமிழக அரசியலையே திருப்பிப் போடும். ஆம் அது  மாநாட்டுத் தேதி.......


அது அரசியல் கட்சி துவக்க விழா மாநாடோ , இல்லை சாதாரண ரசிகர் மன்ற மாநாடோ, மேடையில் நீ  நின்று எங்கள் மத்தியில் நீ உதிர்க்கும் அந்த புன்னகையைக்  காண ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு கோடிக் கண்களில் ஒரு ஜோடிக் கண்கள் என்னுடையதாக இருக்கும். அந்த அறிவிப்பு நம் கட்சியின் பெயராக இருந்தாலும் சரி நம் அடுத்த படத்தின் பெயராக இருந்தாலும் சரி வெற்றி பெற வைக்க என்னுடைய இரு கரங்களும் காத்திருக்கின்றன.


பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினியா???


பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினியா???

என்ன சொல்லிவிட்டார் ? 20 வருடமாக சொல்வதைத் தான் சொல்லிவிட்டார்.. அதற்கு இந்த அளவு கேவலமாக விமர்சனங்களை வைக்க என்ன அவசியம் இருக்கிறது. நான் யாரைப் பற்றி சொல்கிறேன் என்று இந்நேரம் புரிந்திருக்கும். ஆம் ரஜினி. என்ன பாவம் செய்தாறோ அவர் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலாகிவிடுகிறது. கடந்த ஞாயிறன்று நடந்த லிங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியவை தான் பலத்த அரசியலுக்கு விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது. அவர் ஒன்றும் தானாக முன்வந்து அரசியல் பேசவில்லை. சேரன்,அமீர், வைரமுத்து,விஜய குமார் போன்ற திரைஉலகப் பிரபலங்கள் பேசியதற்கு பதில் அளித்தார் அவ்வளவுதான். ஒரு வேளை அவர் பதிலளிக்காமல் போயிருந்தால் அதையும் செய்தியாக்கி அவரை விமர்சிக்காமல் இருந்திருப்பார்களா என்றால் இல்லை என்பது தான் விடை. ஆம் அவர்களுக்குத் தேவை ரஜினியை விமர்சித்து தங்கள் பிரப்ல்யத்தையும் டீஆர்பி ரேட்டிங்கையும் அரசியலில் தங்கள் இருப்பையும் மீடியாக்களின் கவனத்தையும் பெறவேண்டும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் . இது தான் அவர்களுக்கான தேவை.


சரி விழாவில் என்ன நடந்தது என்பதை பார்த்துவிட்டு அவர்களுக்கான் என் பதில்களை தர விரும்புகிறேன். விழாவில் பேசிய அனைவரும் ரஜினியின் நலம் விரும்பிகள் என்பதைத் தாண்டி ரஜினியின் தீவிர ரசிகர்கள். ஒரு சராசரி ரஜினி ரசிகன் மேடையில் பேசியிருந்தால் என்ன பேசியிருப்பானோ அதைத் தான் சேரனும்,அமீரும்,விஜயகுமாரும் பேசினார்கள். அமீர் , தலைவர் என்று ஒருவரை நான் ஏற்றுக்கொண்டது உங்களை மட்டு தான், நீங்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று கூறியதும் எழுந்த ஆரவாரமும் கைதட்டல் விசில் சத்தமு அடங்க சரியாக இரண்டரை நிமிடம் தேவைப்பட்டது. ஆம் அது என்னுடைய ஆசைமட்டுமல்ல, இங்கிருக்கும் 2000 பேரின் ஆசை மட்டுமல்ல தமிழர்கள் அத்தனை பேருடைய ஆசைகளும் தான். நீங்கள் பார்க்காத விமர்சனங்கள் இல்லை, இனியும் உங்களை விமர்சிக்காமல் இருக்கப்ப்போவதும் இல்லை. அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் ஒரு அறிவிப்பு மட்டும் வெளிவிடுங்கள் நாங்கள் அனைவரும் அப்படியே உங்கள் பின்னால் வந்துவிடுகிறோம். என்று டைரக்டர் அமீராக அல்ல ஒரு ரசிகனாக பேசினார். சேரன் காந்தி காமராஜருக்கு பிறகு நாங்கள் உங்கள் மீது தான் நம்பிக்கை வைத்திருக்கிறோம், என அவரும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்.



இறுதியில் பேசிய ரஜினி வழக்கமான் பேச்சுகளுக்குப் பிறகு, அவர்களுக்கான  பதிலை அளிக்க வேண்டியிருந்தது. அவர், அமீர், சேரன், விஜயகுமார் போன்றவர்கள் அரசியல் பேசியதால் நான் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லவில்லை என்றால் திமிர் பிடித்தவன் தலைக்கணம் பிடித்தவன் என்று சொல்வார்கள். அரசியல் என்றால் என்ன, அதனுடைய ஆழம் என்ன , அங்கு எப்படிப் போகவேண்டும் என்பதெல்லாம் எனக்கு நன்றாக தெரியும். அப்படிப் போனால் அங்கு நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா என்ற தயக்கம் எனக்கிருக்கிறது. அரசியலை நினைத்து பயப்படவில்லை. தயங்குகிறேன் அவ்வளவுதான். ஒரு சூழ்னிலை தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கிறது, அதே சூழ்னிலை தான் என்னை அங்கும் கொண்டுபோக வேண்டும்...என்னடா இவன் இதையே சொல்றான் அடப் போய்யா என்று சொல்வார்கள், ஆனால் அது தான் உண்மை என்று பேசினார்.


இது தான் ஊடகங்களுக்கும் நடுநிலை என்ற போர்வையில் திரியும் சில மனிதர்களுக்கும் பெரிய தீனியாக அமைந்துவிட்டது. தந்தி டிவி விவாதத்தில் பங்கேற்ற மனுஸ்யப்புத்திரன்  ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது எனப் பொங்கி எழுகிறார். தமிழர்களுடைய எந்தப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார் என்று சொன்னதும் நிகழ்சி நடத்திய பாண்டேவுக்கே கோபம் வந்துவிட்டது. அவர் குரல் கொடுக்காத பெரிய பிரச்சனை எது என திருப்பி கேட்டார், அதற்கு மனுஸ் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒருநாள் உண்ணாவிரதத்தை தவிர என்ன செய்தார் அவர் என்று கேட்டதும் பாண்டே கோபத்தின் உச்சிக்கே சென்று இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார்களோ எனப் பதிலடி கொடுத்தாரே பார்க்கலாம், அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. சரியான பதிலடி தான். இந்தக் கேள்வியை எல்லாம்  கேட்பதற்கு முன்னர் அவர் ஒரு சாதாரண நடிகர் என்பதை ஒருநிமிடம் யோசித்துவிட்டு கேட்க வேண்டும். அப்படியிருந்தும் அவர் பெரியளவிலான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்.


ஒரு ஆட்சியில் இருந்த அதிருப்தியையும், மக்கள் விரோதப் போக்கையும் ஆளுங்கட்சி அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே கண்டித்த நடிகரை இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் யாரையாவது உங்களால் காட்ட முடியுமா? தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்ற வசனத்தை தமிழக மக்கள் மறந்துவிடுவார்களா.? த.மா.கா தொடங்கிய பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மூப்பனாரிடம் உங்கள் கட்சியின் தலைவர் யார் என்று கேட்ட போது சூப்பர் ஸ்டார் ரஜினி என்று போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியதை எந்த ஊடகவியலாளராவது மறுக்க முடியுமா ? ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய பிறகு இரு மாநில உறவில் விரிசல் வரக்கூடாது என்பதற்காக திரை மறைவில் அவர் எடுத்த ரிஸ்கை யாராவது மறுத்துவிட முடியுமா?  காவிரிப் பிரச்சனையில் அர்த்தமற்ற கரண்ட் மறியல நடத்தச் சென்ற பாரதிராஜாவை வெளிப்படையாக விமர்சித்து சென்னையிலே தன்னந்தனியாக உண்ணாவிரதம் இருந்து ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திருப்பியதுடன் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவு தன் பலத்தை நிரூபித்து நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி தருவதாக உறுதியளித்ததை மறக்க முடியுமா? ராஜபக்சேவையும் அவர் ராணுவத்தையும் பார்த்து ஆம்பிளைங்களா நீங்க என பொது மேடையில் பகிரங்கமாக விமர்சித்த வேறு ஒரு நடிகரைக் கூட வேண்டாம் அரசியல்வாதியை காட்டமுடியுமா ? தன்னுடைய படத்திற்கு தொந்தரவு என்றதும் ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்காமல், முதல்வர் காலில் விழ கொடநாடு வரை சென்று திரும்பிவராமல் தன்னந்தனியாக சமாளித்த வேறு ஒரு நடிகரை காட்ட முடியுமா? இவ்வளவு ஏன் சீக்கிரம் வந்துடுவேன் ராஜாக்களா என அவர் உடைந்த குரல் கேட்டு தமிழகம் முழுவதும் பக்தியில் மூழகியதை மறக்கத்தான் முடியுமா? இன்றும் பக்தியில் மூழ்கி இருக்கிறது அது எவ்வாறு என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


இன்னொன்று சொல்கிறார்கள். அதைக் கேட்டால் சிரிப்புத் தான் வருகிறது.`படம் வெளி வரும்போது மட்டும் இவ்வாறு அரசியல் பேசி தன்னுடைய வியாபரத்தை பெருக்கிக் கொள்ளும் சீப் பப்ளிசிட்டியாம், பப்ளிசிட்டி செய்து படத்தை ஓட்டும் நிலையிலா ரஜினி இருக்கிறார். அவரே ஒரு பெரிய விளம்பர ப்ராண்டாகிவிட்ட பிறகு அவருக்கு விளமரம் தேவைப்படும் என்று சொல்வதைவிட கீழ்த்தரமான விளம்பரம் இருக்க முடியாது. சரி விளம்பரத்திற்காக அரசியல் பேசுகிறார் என்றால், தமிழகத்தில் மட்டுமா படம் ஓடுகிறது. ஆந்திர்ரவிலும், கர்நாடகாவிலும், கேரளாவிலும், வட இந்தியாவிலும் , ஆஸ்திரேலியாவிலும்,அமெரிக்காவிலும் ஏன் ஜப்பானில் கூட படம் ஓடுவதற்கு இந்த அரசியல் பேச்சு தான் காரணம் என்று சொன்னால் சொல்பவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியே பார்த்தாலும் சந்திரமுகி படம் வரும்போது எந்த அரசியல் பேசினார் ?, குசேலன் வந்தபோது என்ன அரசியல் பேசினார்? சிவாஜி வந்த போது என்ன அரசியல் பேசினார்? எந்திரன் வந்த போது என்ன அரசியல் கருத்த்களை தெரிவித்தார்? கோச்சடையான் வந்த போது என்ன பாலிட்டிக்ஸ் பேசினார்? இனியும் படம் ஓடுவதற்காகத் தான் அரசியல் பேசுகிறார் என்று சொல்பவர்களைப் பார்க்கும் போது பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.



தகுந்த ஒரு அறிவிப்பை வெளியிடாத போதே இப்படிக் கொதிப்பதற்கு காரணம் என்ன? பயம், ஆம் ! ஒரு வேலை வந்து விடுவாரோ என்ற பயம் மட்டும் தான் காரணம். அவர் வரக்கூடாது, வரக்கூடது என்று கூவும் நடுநிலைவாதிகள்? அவர் வரவில்லை என்றால் மட்டும் யாருக்கு ஓட்டுப் போட்டு அடுத்த முதலமைச்சர் ஆக்கிவிடப் போகிறார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் இதே தமிழினத் தலிவர்? கருணாநிதி இல்லை ஊழலலை ஒழிக்கப் போகும் ஜெயலலிதா, இவர்களைத் தானே? ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஊடகங்கள் வைக்கும் முதல் கேள்வி நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்பது தான், இனிமேல் அவரைப் பார்க்கும் போது அடுத்த படம் என்ன என்று கேட்டுப் பாருங்கள் , அப்போதும் அவர் நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்று சொன்னால் கழுவிக் கழுவி ஊற்றுங்கள். அதை விடுத்து பதிலைத் தெரிந்து கொண்டு கேள்வியைக் கேட்டுவிட்டு அந்த நாள் முழுவதும் பரபரப்பை தனது ஊடகத்தில் காட்டிக் கொண்டு வேசம் போட வேறு நாட்டில் பல விசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது..... மக்களுக்கு தெரியாத பல விசயங்கள் இருக்கின்றன அதைப் புரிய வையுங்கள். நேற்றும் கூட அவர் பேசியது எதார்த்தம் தான் என 50 சத மக்கள் வாக்களித்ததையும், போன மாதம் அவருடைய அரசியல் தேவை தமிழ்நாட்டுக்கு கட்டாயம் தேவை தான் என 60 சத மக்கள் வாக்களித்ததையும் திரும்ப திரும்ப பொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மனுஸ்யபுத்திரன் , உதய குமார், ஞானி போன்ற எழுத்தாளர்களும் சமூகப் போராளிகளும் தங்களுடைய பணிகளில் கவனத்தை செலுத்துங்கள். ரஜினி தான் தேவை என்றால் ரஜினியை விமர்சிக்கும் இயக்கம் ஆரம்பித்து தமிழ்நாடு முழுதும் தீவிர பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொள்ளுங்கள்.


தலைவர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இயங்கப் போவது இல்லை என்பதும் அவர் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) இல்லாமல் 2016 சட்டமன்றத் தேர்தல் இல்லை என்பதும் 100 சதம் உறுதியாகிவிட்டது. அவருடைய எண்ணம், ஒரு ரஜினி ரசிகனான எனக்கு புரியாமலில்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தலைவருக்கு இருக்கிறது, வந்தால் ஜெயிக்க முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது அது தான் அவருடைய தயக்கத்திற்கான ஒரே காரணம்.ஒருவேளை அவர் வர வேண்டும் என்று முடிவெடுத்தால் அடுத்த வருட டிசம்பர் வரை தான் காலக் கெடு,அதற்கு பின்னர் அவரே நினைத்தாலும் அரசியலுக்கு வர முடியாது, அப்படி வந்தாலும் அதை நான் சொல்ல விரும்பவில்லை. வயது முதிர்ந்த ஒரு இயக்கத்தின் தலைவர், தலைவரே இல்லாத ஒரு இயக்கம், இதைப் பயன்படுத்தி காலூன்ற நினைக்கும் ஒரு தேசிய இயக்கம், புதிதாக களம் கண்டிருக்கும் ஒரு இயக்கம், தகுந்த சூழலில் இறங்காமல் சூடுபடூக் கொண்ட ஒரு இயக்கம், இது தான்  தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலை. இதைவிட தகுந்த சூழல் இனி தலைவரே நினைத்தாலும் அமையாது. ரஜினி ரசியலுக்கு வருவதைவிட எளிமையான விசயம் வந்த பிறகு இரு பிரதான கட்சிகளுக்கு எதிரான அணியை அமைப்பது.


ஏன் தயக்கம் ஓப்பனாகவே சொல்லிவிடுகிறேன். ரஜினி வந்தால் திமுக அதிமுக கட்சிகளுக்கு எதிரான அணியை பலமாக அமைக்க முடியும். பா.ஜ.க கட்சி முதல்வர் கன‌வு காணவில்லை கட்சியை காலூன்ற வைக்க வேண்டும் அவ்வளவுதான். அதே போல ஜி.கே வாசன் ரஜினியை முதல்வராக ஏற்றுக் கொள்ள ஒருபோதும் தயங்கமாட்டார். வைகோவை சமாதானப்படுத்தி விடலாம். விஜயகாந்தும் ராமதாசும் தான். பா.ம.க வராது. விஜயகாந்த் கேள்விக்குறி தான்.ரஜினி , ஜிகே வாசன்,பா.ஜ.க,வைகோ இந்தக் கூட்டணி அமைந்தால் ஆட்சியைக் கைப்பற்ற அத்தனை சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. திமுக அதிமுகவின் விமர்சனங்களையும் முறியடித்துவிடலாம். கூட்டணி இல்லாமல் தனியாக நின்று ரஜினி ஜெயிப்பாரா ? என்றால் இல்லை என்பது தான் விடை. ஆனால் பலத்த சக்தியாக உருவெடுப்பார். ஆக மொத்தத்தில் தனிக்கட்சியுடன் தலைவர் வந்து தகுந்த கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க இதைவிட பெரிய சந்தர்ப்பம் இனி அமையாது. எந்த விதமான பிரதிபலனுக்காகவும் எதிர்பார்க்காமல் இத்தனை ஆண்டுகாலம் பொறுத்திருந்த நாம் தலைவரின் அடுத்த பிறந்த நாள் வரை பொறுத்திருக்க மாட்டோமா என்ன?

ஒருவேளை தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்னும் மகிழ்சி அடைவேன். யாருடைய இழி பழிக்கும் ஆளாகாமல் கடைசி வரை சூப்பர் ஸ்டாராகவே இருப்பது எவ்வளவு பெருமை. ஆனால் எது நடந்தாலும்  நான் ரஜினி ரசிகன் என்பதை மட்டும் மாற்றிவிட முடியாது.என்னைப் போலவே தான் எல்லா தலைவரின் ரசிகர்களும் என்று உறுதியாக நம்புகிறேன்........


தயக்கம் போதும் தலைவா, தகுந்த நேரம் இது தான், தயங்காமல் முடிவெடு, நாங்கள் இருக்கிறோம்... உன்னை அவ்வளவு எளிதில் தோற்க விடமாட்டோம்.......


உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...

Saturday, October 11, 2014

ரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது ?


ரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது ?




ஜெயலலிதா சிறைக்கு போனாலும் போனார், இங்கே தமிழகத்தில் பல கேள்விகளும், ஊகங்களும் உலாவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த ஊடகங்களுக்கும் வேறு வேலையே இல்லாதது போல செயல்படுவதைப் பார்க்கும் போது வெறுப்புத்தான் வருகிறது. ஒரு நபர் தன்னுடைய கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவிக்காத நிலையில் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு கதை கட்டுவதில் இந்த ஊடகங்கள் அனைத்தும் கை தேர்ந்தவையாக இருக்கின்றன. கடந்த சில நாட்களாக நாளிதழ்களைப் படித்துவருபவர்களுக்கு நான் யாரைப் பற்றி சொல்ல வருகிறேன் எனத் தெளிவாகப் புரிந்திருக்கும். ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடைய அரசியல் குறித்து தான்.

இன்றைய தி இந்து தமிழ் நாளிதள் வாசகர் கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்வி, ரஜினிக்கு உகந்தது எது ? 1)தனிக் கட்சி தொடங்குவது 2) பா.ஜ.க வில் சேர்வது 3) அரசியல் வேண்டாம் என்பது தான். இதற்கு ரசிகர்களின் பதில் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால், தனிக் கட்சி தொடங்கலாம் என 20 % பேரும், கட்சியில் சேரலாம் என 22% பேரும் அரசியல் ஏண்டாம் என 60% பேரும் சொல்லியிருக்கிறார்கள்.எனக்கு என்ன சந்தேகம் என்றால் இதையெல்லாம் கேட்க இப்போது அவசியம் என்ன அவசியம் வந்துவிட்டது. ஒரு வேளை ரஜினி அரசியலில் இறங்கப் போகிறேன் என்று ஏதும் வெளிப்படையாகவோ, அல்லது குறிப்பாகவோ சொல்லியிருக்கிறாரா என்றால் இல்லை . பின்னர் ஏன் ரஜினியின் அரசியல் குறித்து அவருடைய ரசிகர்களை விட அதிக ஆர்வம் இந்த ஊடகங்களுக்கு.


இன்னும் சிலர் அவர் அரசியலிலே இறங்கவே இல்லை, அதற்குள்ளாக அவர் என்ன தமிழரா ? அவர் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்? மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறாரா? என்றெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இதில் ஒரு படி மேலே போய் இந்த உதயகுமார் போன்ற ஆட்கள் அவருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று தங்கள் முகப் புத்தகத்தில் பகிர்ந்து தங்களை உயர்த்திக் கொள்ளும் வேலைகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். சரி இதற்கெல்லாம் ரஜினி என்ன பதில் சொல்வார் என்று பார்த்தால் வழக்கம் போல புன்னகை தான். இன்னும் சில ஊடகங்கள் ரஜினி ரசிகர் மன்றத்தினரிடம் கருத்து கேட்ட்வருகிறாராம். தனிக் கட்சி தொடங்கலாமா இல்லை பா.ஜ.கவில் சேரலாமா என்று. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார்.





அவர் கன்னடர் என்கின்ற வாதம் எவ்வளவு அபத்தமானது. இதற்கு முன்னால் தமிழகத்தை ஆண்டவர்கள் எல்லோரும் பச்சைத் தமிழர்களா ? அதுவும் அவர் அரசியலுக்கு வரும் முன்பாகவே இவ்வளவு எதிர்ப்பு என்றால் அவர் வந்தால் அவ்வளவு தான். இதில் மற்றவர்கள் எப்படியும் நினைத்துவிட்டு போகட்டும், பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். தி இந்து தமிழ் நாள்தழின் கருத்து கணிப்பில் கூட 40 % மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் வாக்களித்திருக்கிறார்கள். அதே போல 1 மாதத்திற்கு முன்னர், தந்தி டிவி நடத்திய வாக்கெடுப்பிலும்  55% மக்கள் அரசியலுக்கு அவர் தேவை என்று தான் வாக்களித்திருக்கின்றனர். இதிலிருந்து நாம் தெளிவான முடிவெடுக்க முடியாது என்றாலும் இதை நாம் புறக்கணித்துவிடவும் முடியாது. ஏனென்றால் அவர் எந்த தெளிவான முடிவும் எடுக்கும் முன்பே இத்தகைய நிலை என்றால் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்ட் வந்தார் என்றால் இந்த நிலை இதை விட அதிகரிக்குமே தவிர குறையாது என்பது என் எண்ணம்.


இன்னொன்றையும் சொல்வார்கள் தன்னுடைய படம் வெளிவரும் போது தான் இது போன்ற ஸ்டண்ட் அடிப்பார் ரஜினி என்று. இது எவ்வளவு கீழ்த்தரமான வாதம். என்னமோ அவரா வந்து ஊடகங்களை அழைத்து வாங்க வாங்க, நான் அரசியலுக்கு வருவது என் கையில் இல்லை அது ஆண்டவன் கையில் என்று பேட்டி கொடுப்பது போல இருக்கிறது. இப்படி சொல்ல அவர் என்ன மூளை இல்லாதவரா. அவர் ஊடகங்களைச் சந்திப்பதே அரிதானது. அப்படி சந்திக்கும் போதெல்லாம் நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்று கேட்பது ஊடகங்கள் தானே தவிர, ரஜினி அல்ல. இங்கு பல படங்கள் ரஜினியைக் காட்டி ஓடும் போது அவருக்கு இந்த கீழ்த்தரமான பப்ளிசிட்டி அவசியம் தானா. அவருக்கு படம் நடிக்க வேண்டிய அவசியமே இல்லாத போது, இப்படி ஸ்டண்ட் அடித்து படம் ஓடவைக்க என்ன அவசியம் வந்துவிட்டது.நடித்து சம்பாதிக்கிறார். இதில் என்ன தப்பு இருக்கிறது என்று தெரியவில்லை.அவருக்கு பணம் தான் முக்கியம் என்றால் வருடத்திற்கு மூன்று படங்கள் நடித்து சம்பாதிக்க முடியும் ஆனால் அப்படி செய்யவில்லை. காரணம் உங்களுக்கே தெரியும்.


மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காதவரெல்லாம் அரசியலுக்கு வரக் கூடாதாம். அவர் ஒரு நடிகர் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு இந்த கேள்வியைக் கேட்டுவிட முடியுமா? அப்படியிருந்தும் பெரும்பாலான நேரங்களில் தன்னுடைய கருத்துகளை தைரியமாக
வெளிப்படுத்தியிருக்கிறார். இவரளவுக்கு பொது பிரச்சனையில் குரல் கொடுத்த வேறு பெரிய நடிகர்களை உங்களால் காட்ட முடியுமா ? ஒரு ஆட்சியில் இருந்த அதிருப்தியை யாருக்கும் பயப்படாமல் எடுத்துரைத்தவர் ரஜினி மட்டும் தான்.தனக்கு ஒரு பிரச்சனை வரும்போது ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்தோ, இல்லை ஓடிப்போய் முதலவர் காலில் விழுந்தோ காரியம் சாதிக்க நினைத்தது கிடையாது. தனியாகவே சமாளித்தார் அதிலிருந்து மீண்டும் வந்தார். அரசியல் இயக்கத்தில் இருந்து கொண்டே எத்தனையோ பேர் மக்கள் பிரச்சனைகளை பேசுவதில்லை என்பதையும் மறுத்துவிட முடியுமா ??




ஒருவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே இவ்வளவு எதிர்ப்பு வருகிறது. அவர் கட்சி ஆரம்பித்த பின்னர் அவருடைய கொள்கைகளை விமர்சிப்பதை விடுத்து தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது நியாயம் தானா எனவும் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் தமிழ்ப்பெண்ணை திருமணம் புரிந்து தமிழர்களுக்கே தன் பிள்ளைகளையும் மணமுடித்து தமிழராகவே மாறிவிட்ட பிறகு அவரை கன்னடர் என்று சொல்வது நியாயம் தானா என்பதையும் யோசிக்க வேண்டும். அவர் தன்னை கன்னடராக எங்காவது, இல்லை எந்த நிகழ்சியிலாவது சொல்லியிருக்கிறாரா? தன்னுடைய படம் உலக அளவில் பேசப்படும் போதெல்லாம்  இது எனக்குக் கிடைத்த பெருமையல்ல ஒட்டுமொத்த தமிழருக்கும் கிடைத்த பெருமை என்று தான் சொல்லியிருக்கிறார்.

தன்னுடைய சினிமா செல்வாக்கை வைத்து மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று நினைப்பதற்கு அவரும் முட்டாளில்லை தமிழக மக்களும் முட்டாள் இல்லை. அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்து தான் அவருடைய ரசிகர்களே ஓட்டுப் போடும் நிலை வந்துவிட்டது. சரி அவர் அரசியலுக்கு வரவில்லை. அப்போது யாரை மக்கள் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இதே கலைஞர் இல்லை இதே ஓபிஎஸ் இவ்வளவு தானே. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது இருந்த மக்கள் ஆதரவு இப்போது இல்லாததற்கான காரணம் அவருடைய செயல்பாடுகள். ஒரு வேளை அவரைப் போலவே ரஜினியும் இருந்தால் அவரையும்  மக்கள் புறக்கணிக்க ரொம்ப நாள் ஆகாது. இன்னொன்று, ரஜினி அரசியலுக்கு வந்தால் பிற அரசியல் வாதிகளைப் போல இருக்க மாட்டார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இது அவரை பல காலம் பார்த்து வரும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். 1996 ல் ஆட்சி தேடி வந்ததையே தவிர்த்தவர் அவர் என்பதையும் மக்கள் மறக்கவில்லை.


என்னை பொறுத்தவரை தலைவர் அடுத்த வருட ஆரம்பத்தில் கட்சி ஆரம்பித்து, தன் கொள்கைகளை தெளிவாக வகுத்து தமிழகம் முழுதும் வலம் வந்து தேவையான கூட்டணியை சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும். ஒரு வேளை மக்கள் அவரைப் புறக்கணித்தால் மனமுவந்து ஏற்றுக் கொண்டு பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்றுவிட‌ வேண்டும். ஒருவேளை அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் அதையும்விட‌ அதிகம் மகிழ்சியடைவேன். யாரிடமும் இழிபழிக்கு ஆளாகாமல் கடைசிவரை சூப்பர் ஸ்டாராக இருப்பது எவ்வளவு பெருமை. இந்த முறை அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் அவரை அரசியல் விடாது  அல்லது அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது..... மாற்றம் கொண்டுவந்த தலைவரின் தொண்டனா இல்லை என்றும் மாறாத சூப்பர் ஸ்டார் ரசிகனா என்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.....  பதில் எதுவாகினும் ஏற்றுக் கொள்வேன் என்றாலும் இரண்டாவது நடந்தால் ரொம்ப மகிழ்சியடைவேன்.....



நல்லவுங்களுக்கெல்லாம் அரசியல் சரிவராது தலைவா... வந்தால் உங்களையும் கெட்டவராக்கிவிடுவார்கள்... முடிவு உங்கள் கையில்,,என்ன முடிவெடுத்தாலும்  

என்றும் உங்கள் ரசிகன் சீலன்....


மாற்றுக்கருத்துகள் தாராளமாக வரவேற்கப்படுகின்றன...

Monday, September 29, 2014

மாறுமா அரசியல்???


மாறுமா அரசியல்???


யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம் இத்தனை நாள் முதல்வராய் வலம் வந்த  ஜெயலலிதா இன்று முன்னாள் முதல்வராக‌!!   18 ஆண்டுகாலம் வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி கடைசியில் இவ்வளவு கடுமையான நீதிபதியிடம் வந்து மாட்டிக் கொண்டார். 66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் 100 கோடி அபராதத்துடன் 4 ஆண்டு சிறைக்கும் உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பளித்து இந்தியாவே திரும்பிப் பார்க்கச் செயத‌ நீதிபதியாகிவிட்டார்   நீதியரசர்.திரு மைக்கேல் டி குன்ஹாஅவர்கள்.ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சிறை சென்றிருக்கும் முன்னால் முதல்வருக்கு ஆதரவு அதிகரித்திருப்பது தான். இதற்கு அவரின் இந்த மூன்றாண்டு கால ஆட்சி தான் காரணம். 


Thursday, September 4, 2014

யார் இந்த சுப்பிரமணிய சாமி ??


யார் இந்த சுப்பிரமணிய சாமி ??


போன ஆட்சியில் நாராயண சாமி, இந்த ஆட்சியில் இந்த சுப்பிரமணிய சாமி ! நா.சாமி யாவது பரவாயில்லை, சும்மா சாதா கருத்துகளைக் கூறி இணையதளங்களில் திட்டு வாங்குவார், ஆனால் இந்த சு. சாமி பண்ற அலும்புகள் தாங்க முடியல. 


Thursday, August 21, 2014

கத்தி திரைப்படத்திற்கு எதிர்ப்பா ? அல்லது விஜய்க்கு எதிர்ப்பா ?


கத்தி திரைப்படத்திற்கு எதிர்ப்பா ? அல்லது விஜய்க்கு எதிர்ப்பா ?

தினந்தோறும் புதுப்புது செய்திகள் இணையங்களிலும், பத்திரிக்கையிலும் கத்தி திரைப்படத்தினைப்பற்றி. மறுபடியும் சினிமா குறித்து எழுத வேண்டாம் என நினைத்தேன். ஆனால் என்னையும் எழுதச்செய்து விட்டனர். கத்தி திரைப்படத்தினை விஜய் ஒப்புக்கொண்டதிலிருந்து இன்று வரை அதற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருவது உண்மை. காரணம் முருகதாஸ் எனும் இயக்குனர், மற்றொன்று விஜய்.ஆனால் போகப் போக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன் பேர்வழி என்று ஊடக வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு சிலர் செய்யும் வேலைகள் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. 


எனக்கு விஜய் மீது எப்போதுமே பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. இனியும் அப்படித்தான். அதற்காக அவரது எல்லா விசயங்களையும் எதிர்த்துக் கொண்டே இருப்பது என்பது முட்டாள் தனம் தானே. அதைத் தான் இந்த மாணவர் அமைப்பினர் ? செய்து வருகின்றனர்.அவர்களின் எதிர்ப்புக்கான‌ காரணம் லைக்கா எனும் தயாரிப்பு நிறுவனம்.

ஐய்ங்கரன் நிறுவனத்தின் பண நெருக்கடியால் உள்ளே வந்தது தான் இந்த லைக்கா நிறுவனம். அந்த நிறுவனம் நரகன் ராஜபக்ஸேயின் வலது கரம் என சொல்லப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அது உண்மையாகவே இருந்தாலும் படத்தினை எதிர்ப்பதற்கு தகுந்த காரணமா ? எனும் ஐயம் எழாமலில்லை.

இவ்வளவு ஆர்வமாக தமிழ் உணர்வு பொங்கும் அவர்கள் மானாட மயிலாட நிகழ்சி லைக்கா ஏற்பாட்டில் இலங்கையில் நடந்த போது எங்கே போனார்கள் ?

இளைய ராஜா இசைநிகழ்சியை நடத்தியதும் இதே லைக்கா நிறுவனம் தான், அப்போது இவர்களின் தமிழுணர்வு எங்கே போனது. எதற்கெல்லாம் தமிழையும் தமிழுணர்வையும் கொண்டுவருவது என்ற வரையரை இல்லாததால் சிலர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவதற்கும் போவதற்கும் தமிழ் என்ன விற்பனைப் பொருளா ?

ஏதோ முதலிலிருந்தே இதே நிறுவனம் படத்தினை த‌யாரித்திருந்தாலும் அப்போது இந்த படத்தினை ஒப்புக்கொள்ள கூடாது என முருகதாஸையும் விஜயையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கலாம். அவர்களை அறியாமலேயே அது திரைப்படத்திற்குள் வந்துவிட்டது.இல்லை படத்தில் தமிழர் எதிரான நிலைப்பாடு ஏதும் இருந்தால் கண்டிப்பாக படம் வெளிவராமல் போராடுவதற்கு நியாயம் இருக்கிறது.

எப்போது விஸ்வரூபம் திரைப்படம் எதிர்க்கப்பட்டு அந்த முயற்சி வெற்றியும் அடைந்ததோ அன்றிலிருந்து எதிர்ப்பாளர்கள் எனும் போர்வையில் ஊடக வெளிச்சத்தினை பெறுவதற்கான குறுக்கு வழியாக திரைப்படங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். புலிப்பார்வை எனும் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வைக்கப்படிருந்ததால் அதை எதிர்ப்பதில் குறைந்தபட்ச நியாயமாவது இருக்கிறது. 

லாபகரமான சினிமாத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கத்தி எனும் ஒரு திரைப்படத்தினை கைவிடுவதால் ஏற்படப்போகும் பின்விளைவுகள் என்னவாக இருக்கப்போகிறது. விஜய் ஒரு படத்தினை இழப்பார், தயாரிப்பு நிறுவனம் காசை இழக்கும் வேறு ஏதாவது நல்ல விசயங்கள் நடந்துவிடப்போகிறதா ?

தினம் தினம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவன் விடுதலை அடையப்போகிறானா? இல்லை தமிழீழம் தான் மலர்ந்துவிடப்போகிறதா ? இது எதற்கும் சிரத்தை எடுத்துப் போராடாத அமைப்பினர் இந்த திரைப்ப்டத்தினை மட்டும் எதிர்த்துப் போராடுவதில் ஏன் இவ்வளவு சுரத்தை எடுக்க வேண்டும் ? ஒருவேளை இவர்களின் எதிர்ப்பால் படம் கைவிடப்பட்டால் , நாளை எடுக்கப்படும் ஒவ்வொரு சினிமாவையும் ஒவ்வொரு அமைப்பினர் தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவார்கள், அவை எல்லாமே தடை செய்யப்படுமா ?

இதில் விஜய் தரப்பில் தப்பு இல்லாமலில்லை. லைக்கா நிறுவனத்தைப் பற்றி தெரிந்த உடனேயே அதை நீக்கிவிட்டு வேறு தயாரிப்பு நிறுவனத்தை சேர்த்திருக்கலாம். சண்டியர் எனும் பெயர் கமல்ஹாசனால் பயன்படுத்தப்பட்ட போது வந்த கிருஷ்ணசாமிகள் இன்று யாரோ ஒரு பெயர் தெரியாத நடிகர் பயன்படுத்திய போது எங்கே போனார்கள்.எனவே இவர்கள் கத்தியையோ லைக்கா எனும் நிறுவனத்தையோ எதிர்க்கவில்லை ! விஜயை எதிர்க்கிறார்கள் ! எதிர்ப்பது போல காட்டிக் கொண்டு அவரையும் பெரிய ஆள் ஆக்குகிறார்கள் , தாங்களும் பெரிய ஆள் அகிக்கொள்கிறார்கள். 

ஒரு திரைப்படத்தினை தடையிடவும் , வெளியிடவும் அரசுக்குத் தான் உரிமை உள்ளதே தவிர எந்த ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கும் உரிமையில்லை. அது நானாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி !!

பின்குறிப்பு: லைக்கா நிறுவனம் நரன் ராஜபக்ஷேவின் ஆதரவு நிறுவனம் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. எனவே அந்நிறுவனத்தினை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். ஆனால் கேவலம் ஒரு திரைப்படத்தினை எதிர்ப்பதில் காட்டும் அக்கறையையும் ஆற்றலையும் இலங்கை தமிழரின் நலனுக்கு காட்டவேண்டும், தமிழ் மீனவர்களின் பாதுகாப்புக்கு காட்ட வேண்டும்,தமிழ் மக்களின் வளர்சிக்கு காட்ட வேண்டும் என்பது தான் என் எண்ணமும் ஆசையும். மிஞ்சி மிஞ்சிப் போனால் அந்த திரைப்படத்தினால் அந்நிறுவன்ம் ஒரு 20 கோடி லாபமடையும். அவ்வளவு தான்.  அந்த திரைப்படம் வராவிட்டாலும் கூட வேறு வழிகளிலும், தொழில்களிலும்  லாபமடையாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் எதிர்க்கப்படும் சூழல் நாளை ஒவ்வொரு படத்திற்கும் வரும், சுதந்திரமாக படம் எடுக்கும் சூழல் மறையும், ஊடக வெளிச்சத்திற்கு ஆசைப் படுபவர்களின் கூடாரமாக திரைப்படத் தடுப்பாளர் சங்கங்கள் மாறும். நியாமான போராட்டங்களும் மறையும்,

Saturday, August 2, 2014

ஆட்சி மாறியது ! ஆனால் காட்சி மாறவில்லை !


ஆட்சி மாறியது ! ஆனால் காட்சி மாறவில்லை !


இந்த புது மொழி யாருக்குப் பொருந்துகிறதோ இன்றைய நரேந்திர மோடி அரசுக்கு மிகவும் பொருந்தும்.சரி ஆட்சிக்கு வந்து 2 மாதங்களுக்குள்ளாகவே ஒரு அரசைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என பார்த்தால், 2 மாதமல்ல இரண்டு வருடங்களானாலும் மாறாது என்பது தெரிந்துவிட்டது.இனி எப்போது விமர்சித்தால் என்ன ? ஆபத்பாண்டவனாக நினைத்து வாக்களித்த மக்கள் இன்று ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ள பழகி விட்டதைப் போன்று தெரிகிறது. 

Friday, April 25, 2014

ஏழு பேர் விடுதலை?


ஏழு பேர் விடுதலை?

ராஜீவ் கொலை குற்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான விடுதலைக்கெதிரான மத்திய அரசின் முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் நேரடி தீர்ப்பு வழங்காமல் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டுள்ள நிலையில் ஏழு பேரின் விடுதலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதைப்பற்றிய ஒரு சிறிய அலசல் தான் இந்தப்பதிவு.


முதலில் குற்றம்சாட்டப்பட்ட அந்த ஏழு பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஏற்கனவே குடியரசுத்தலைவரால் குறைக்கப்பட்டதும் உங்களுக்கு நியாபகம் இருக்கலாம். இன்று அளிக்கப்பட்ட தீர்ப்புக்கான உத்தரவில் அரசியல் சாசன அமர்வு என்பது இனிமேல் தான் அமைக்கப்பட இருக்கிறது. அதுவரை இவர்களுக்கான விடுதலை தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் போன்றவர்களால் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. தீர்ப்பை எதிர்நோக்கியபோது மேலும் இழுத்தடிக்கும்விதமாகத்தான் இதை பார்க்கவேண்டியுள்ள நிலையை ஏற்படுத்தி உள்ளது.

சரி இந்தவிசயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் என்னவெல்லாம் செய்தன என்று பார்க்கவேண்டி உள்ளது. 

முதலில் திமுக. எதற்கெடுத்தாலும் வீராப்பு வசனம் பேசும் கட்சியான திமுக இந்த விசயத்தைப் பற்றியும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கலைஞர் ஆட்சியில் இவர்கள் மீதான தூக்கு தண்டணை கருணை மனு குறித்து ஆளுநர் அமைச்சரவை முடிவைக்கேட்ட போது நளினிக்கு மட்டும் தூக்கு தண்டணையைக் குறைக்கலாம் என பரிந்துரைத்தது. இப்போது இவர்கள் விடுதலை ஆனால் வறவேற்போம் என்று கூறுகிறது. இதை ஆட்சியில் இருந்த போதே செய்திருக்கலாமே. சரி இவர்கள் பரிந்துரைத்தால் ஆளுநர் தூக்கை ரத்து செய்துவிடுவாறா? என்று கேட்கலாம். ரத்து செய்வதும் செய்யாததும் இரண்டாம் பட்சம், ஆனால் இவர்கள் பரிந்துறைக்கவே இல்லையே!. இப்போது தாம் தூம் என்று குதிக்கிறார்கள். என்ன லாபம்? மொத்தத்தில் திமுக இந்த விசயத்தில் உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை என்பது தான் என் கருத்து.


அடுத்து ஆளும் அதிமுக. இந்த விசயம் இவ்வள‌வு தூரம் சென்றதற்கே அதிமுக தான் காரணம். வெறும் தேர்தல் அரசியலுக்காக இவ்வளவு அவசரப்பட்டதும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சரி இந்த விசயத்திலும் இக்கட்சியின் ஆரம்ப நிலைப்பாடு தெளிவானதாக இல்லை.விடுதலை செய்வதில் இவ்வளவு அவசரம் காட்டியதும் அதிமுக தான், நளினி பரோலில் செல்ல அனுமதி கேட்டபோது மறுத்ததும் அதிமுக தான்.அரசியல் சட்ட ஆலோசனைகளை ஆற அமர யோசித்து முடிவெடுத்திருக்கலாம். எங்கே தேர்தல் நேர கவர்ச்சி போய்விடுமோ என்று அவசர முடிவு எடுத்துவிட்டு இன்று பதறுகிறார்கள். இது போல் பலமுறை நீதிமன்றத்தால் குட்டு வாங்கியும் இருக்கிறது.(சமச்சீர் கல்வி போன்று)


காங்கிரஸ் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை எதிர்ப்பது என்ற ஒரே நிலையிலுள்ளது மனிதாபிமானமே இல்லாமல்.

தமிழ் ஆர்வலர்கள் வேறு. அவர்கள் தொல்லை வேறு தாங்க முடியவில்லை. விடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரனை தூக்கில் போடவேண்டும் என்று சொன்னவரையும், ஒருமணி நேரம் உண்னாவிரதம் இருந்தவரையும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்துவருகின்றனர்.பிறகெப்படி அவர்கள் குரல்கள் நேர்மையானதாக, உறுதிமிக்கதாக இருக்கும்?

இன்று இவர்கள் அந்த ஏழுபேரையும் நிரபராதிகள் என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்றோ குற்றம் நிரூபிக்கப்பாடதவரகள் என்றோ கூடச் சொல்லலாம்.அதை விடுத்து நிரபராதிகள் என்று சொல்வதெல்லம் திசை திருப்பும் முயற்சி. பிறகு ஏன் அவர்கள் அப்போதே விடுவிக்கப்படவில்லை? தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உச்சநீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டவர்களை நிரபராதிகள் என்று இன்று கூறும் இவர்கள் அன்றே வலிமையான வாதத்தை வைத்து விடுவித்திருக்கலாமே? ஆனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த ஏழு பேரும் ஏதோ ஒருவிதத்தில் ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள் இல்லை என்பது சின்னக்குழந்தைக்குக் கூட தெரியும் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு தெரியாதா? தெரியாமலா தூக்குதண்டனை விதித்து தீர்பளித்தது. ஆனால் ஒன்று அவர்கள் நிரபராதிகள் என்று யாரும் சொல்லமுடியாது. அதே நேரத்தில் அவர்கள் குற்றவாளிகள் என்றும் சொல்லக்கூடாது. அது அவர்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.


என்னுடைய பார்வையில் இன்றைய தீர்ப்பு ஏமாற்றத்தை தந்தாலும், முறையான தீர்ப்பு வரும் வரை மக்களைக்குழப்பாமல் இருக்கவேண்டும் இந்த அரசியல் கட்சிகள்.


என்னைப்பொறுத்தவரை இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான ஒரு அரசியல் அதிகாரப் போட்டியாகத்தான் பார்க்கிறேன். இருவரது போட்டியில் ஏழுபேர் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பம் தான் பாதிக்கப்படுகிறது. நான் மாண்புமிகு பாரதப்பிரதமரின் கொலையை நியாப்படுத்தவும் இல்லை.அவரையும் அவரோடு இறந்த குடும்பங்களையும் ஒரு நிமிடம் எண்ணிப்பார்த்தால் இது உங்களுக்கே விள‌ங்கும்.ஆனால் கொலைக்கு உண்மையான  காரணமானவர்கள் தண்டிக்க‌ப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை. அதற்காக இந்த ஏழுபேரை இனிமேலும் தண்டிப்பது நியாயம் ஆகாது.


முதலில் ,அவர்கள் இனி தூக்கு தண்டனை அடையப்போவதில்லை. அவர்களுக்கான விடுதலை தான் தள்ளிப்போடப்பட்டுள்ளது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.உச்ச நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அரசின் கொள்கை முடிவு விடுவிக்கலாம் என்பது தான்.இந்த முரண்பாடுகளெல்லாம் களையபடும். ஆயுள் தண்டனை என்பது எத்தனை வருடம் என்பதும் அரசியல் சாசன அமர்வினால் இனி கூறப்பட்டுவிடும், அதுவும் ஒருவித்ததில் நல்லது தானே.



இப்போது நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்பளித்த போது உச்ச நீதி மன்றம் இந்த வார்த்தையை பயன்படுத்தியது. இந்தியர்களின் கூட்டு மனசாட்சிப்படி எனும் வார்த்தைகள் தான் அவை. அப்படியானால் தமிழர்களுக்கு கூட்டு மனசாட்சி இல்லையா ? இந்த விசயத்தில் மொத்தமாக குழப்புவது உச்சநீதிமன்றம் தான் என்பது என் எண்ணம்.


ஆனால் குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பு வரும் வரை அவர்களை பரோலிலாவது விடுவிக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அதுவரை இந்த விசயத்தை அரசியலாக்காமல் இருக்கவேண்டும் இந்த அரசியல்வாதிகள். இன்னொன்று இன்றைய நிலைகளை எல்லாம் பார்க்கும் போது அரசியல் சாசணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனும் வாதம் வலுப்படுவது போல் தான் உள்ளது. காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமம் தானே தவிர அநீதி ஆகாது என நம்புவோம்!!!1



உங்கள் சீலன்!!

Tuesday, April 22, 2014

முதல் வாக்காளர்களின் வாக்கும் என்னுடைய கணிப்பும்!!


முதல் வாக்காளர்களின் வாக்கு!!!

இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு. பொதுமக்களுக்கு நிம்மதி. வேட்பாளர்களுக்கு இனிதான் கவலை. கொடுத்த காசு வேளை செய்யுமா? ஜெயித்துவிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என யோசித்தே மண்டை வலி வரப்போகிறது வேட்பாளர்களுக்கு. இன்னொறு பிரச்சனையும் இருக்கிறது இந்த முதன் முறை வாக்காளர்களின் ஓட்டுகளைக் கவர்வது. ஆம் அதுவும் வெற்றியைத்தீர்மானிக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிசமான ஓட்டுகள் கிடைக்கலாம். இந்த முறை முதன் முறை வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு கணிசமாக கிடைக்கும் எனப் பார்ப்பது தான், பார்க்க முயல்வதுதான் இந்தப்பதிவு,

இளைஞர்கள் மத்தியில் முதல்முறை வாக்களிக்கப் போகும் உணர்வே அதிகமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மற்றவர்கள் போல குறிப்பிட்ட இந்தக்கட்சிக்குத்தான் வாக்கு என்றெல்லாம் முடிவெடுத்து செல்வதில்லை வாக்காளர்கள். தீர்க்கமான முடிவு அறிவுசார்ந்த வேட்பாளர் தேர்வு என இளம் வாக்காளர்களின் வாக்கு அமையும் என்று கூட சொல்லலாம்.இன்றைய தேதியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இதைப் பற்றி மற்றவர்களுடன் விவாதித்துக்கூட முடிவெடுக்கின்றனர். உதாரணமாக என் நண்பர்களையே சொல்லலாம்.


ஆனால் எதை வைத்து வாக்களிக்க உள்ளனர் என்று பார்த்தால் முக்கியமாக‌ ஊடகத்தை பார்த்து தான் தேர்வு செய்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நமது இளைஞர்களின் ஓட்டு யாருக்கு என்று பார்க்கவேண்டும். அவை கூட கூடப் படிக்கும் மாணவர்களிடம் விவாதிக்கப்பட்ட ஒரு தேர்வாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. நான் பார்த்த பழகிய என் தோழர்கள் , என் பல்கலைக்கழக நண்பர்கள், என் விடுதி நண்பர்கள், என் ஊர் நண்பர்கள் யாவருமே புதிய வாக்களர்கள் தான் (நானுட்பட). அவர்களிடம் பல நேரங்களில் பேசியதிலிருந்து, அவர்களாகவே கூறியதிலிருந்து நான் கூற வருவதுதான் உண்மையாக இருக்கும் என்று கூறமுடியாது. சில இடங்களில் மாறலாம். ஆனால் பெரும்பான்மையாக இது தான் இருக்கிறது.


இன்றைய சூழலில் இளைஞர்களின் தேர்வாக இருப்பது கண்ணை மூடிக் கொள்ளுங்கள், மோடி மோடி மோடி தான். ஆம், என்ன காரணம் என்று பார்த்தால் ஊடகம். ஊடகங்களிம் மூலம் மோடிக்குக் கிடைத்த வெளிச்சம். இதில் தான் ஊடகங்கள் ஒருபக்கமாக இருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
எப்போது மோடி பாஜகவின் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அப்போதிலிருந்து நமோ கோசம் தான் எந்தப் பக்கத்தை புரட்டினாலும். இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மீதான வெறுப்பு. இதை வெறுப்பு என்று கூட சொல்ல முடியாது, போதும் என்ற மனநிலை. அவர்களே ஆட்சி செய்யக்கூடாது. மாற்றித்தான் பார்க்கலாமே என்ற எண்ணம் தான்.மூன்றாவது முகப்புத்தகம் . அதில் செய்யப்படும் பிரச்சாரம், மோடி புகழுரைகள் போன்றவை. இன்னொன்று இன்றைய இளைஞர்கள் மக்களவை, சட்டசபை தேர்தலுக்கான வித்தியாசத்தையும் புரிந்துவைத்துள்ளனர்.


நான் பல முறை மோடி போடும் வேசத்தை என் நண்பர்களிடம் விளக்கும் போது, அவர்கள் கூறும் ஒரே பதில், பிறகெப்படி அவர் முன்று முறை முதல்வராக வெற்றி பெற்றார் என்பது தான். அவரின் வரலாற்று அறிவு, பொருளாதார சிந்தனை  உள்ளிட்டவற்றை மன்மோகனோடு ஒப்பிட்டால் கண்டிப்பாக மோடி சிறந்தவர் இல்லை தான். ஆனாலும் அவரின் குஜராத் வளர்ச்சி வித்தை, அவரை காப்பாற்றிவிடுகிறது.


இரண்டாவதாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் மன்மோகன் பெயர் மிகவும் டேமேஜ் ஆகிக் கிடக்கிறது. இதுவும் ஊடகங்களைப் பார்த்து புரிந்துகொண்டதுதான் எனலாம். சோனியாவின் கைப்பாவை என தினமொறு செய்தியாகப் போட்டுப் போட்டு மன்மோகனை டேமேஜ் செய்துவிட்டன்ர்.  ராகுல் காந்திக்கு ஓரளவு இளைஞர்களிடம் ஆதரவு இருக்கிறது. ஆனாலும் மோடியோயுடு ஒப்பிட்டக்கூட முடியாத அளவில் தான்.


தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரை இளைஞர்களின் ஆதரவு திமுக ஆதிமுக வுக்கு சம‌மாக இருக்கிறது. கேப்டனுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது, ஆனால் அது எவ்வாறு என நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சற்று அரசியலை கூர்ந்து நோக்கும் மாணவர்களிடம் மோடியின் பருப்பு வேகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில்  சிறுபான்மை இளைஞர்களிடமும் மோடி பெயர் வாங்க முடியவில்லை.

கலைஞர் பற்றிப் பார்த்தால் அவருடைய பெயரும் அவ்வளவாக இல்லை. குடும்ப அரசியல் , ஊழல் என அவர் பெயரும் டேமேஜ் தான். முதல்வரின் மீதும் நல்ல பார்வை இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, எழுதிவைத்துப் பேசுவது போன்றவைகளை தெரிந்தே வைத்துள்ளனர்.அதே நேரத்தில் லாப் டாப் திட்டத்தினால் ஓரளவு இளைஞர் ஆதரவு இல்லாமலும் இல்லை. வைகோவிற்கு நல்ல பெயர் உள்ளது. ஆனால் அது ஓட்டுகளாக மாறும் அளவிற்கு இல்லை. கம்யூனிஸ்டுகள் பற்றிய பார்வை அரசியலை கூர்ந்து நோக்கும் மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. அதே போல ஜாதிக்கட்சிளுக்கான ஆதரவு துளியும் இல்லை இன்றைய இளைஞர்களிடம். பாராட்டப்படவேண்டிய விசய‌ம் தானே?அதே நேரம் படிப்பறிவில்லாத முத‌ல் வாக்காளர்களிடம் ஜாதி கொடிகட்டிப் பறக்கிறது என்பதும் உண்மை. நோட்டாவிற்கும் கூட ஆதரவு இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக பயன்படுத்த‌ மாட்டார்கள். 


மொத்தத்தில் இன்றைய இளைஞர்களின் ஆதரவு கீழ்கண்டவாறு இருக்கிறது.


முதல் இடம்; நரேந்திர மோடி

இரண்டாவது; கேப்டன் விஜயகாந்த் (விதிமுறைகளுக்கு உட்பட்டது)

மூன்றாவது இடம் ; முதல்வர் ஜெயலலிதா

நான்காவது இடம்; கலைஞர் 

ஐந்தாவது இடம்; நோட்டா

ஆறாவது இடம்; மன்மோகன் சிங்க் ( எதிர்மறை ஆதரவு)

ஏழாவது இடம்; வைகோ ( வாக்காக மாறுமா எனத்தெரியவில்லை, நல்ல பெயர் இருக்கிறது)


தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் என்னுடைய கணிப்பாக சில தொகுதிகளின் வெற்றி நிலவரம். ( என்னுடைய கணிப்பு மட்டுமே)

சிவகங்கை( என்னுடைய‌ தொகுதி) ;  அதிமுக ஜெயித்துவிடும் என்றே தெரிகிறது. இரண்டாவது இடம் திமுகவிற்கு கிடைக்கலாம். கார்த்தி சிதம்பரம் தோல்வி அடைந்தாலும் கவனிக்கத்தகுந்த வாக்குகளைப் பெறலாம். ஹெச்.ராஜாவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது.


கன்னியாகுமரி;  பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றியடைவார் எனத்தெரிகிறது.காங்கிரஸ் வசந்த குமார் கவனிக்கத் தகுந்த வாக்குகளைப் பெறலாம்.

விருதுநகர்; வைகோ வென்றுவிடுவார் எனத் தோன்றுகிறது. ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் எனப்படுகிறது.


நீலகிரி; திமுக ராஜா ஜெயிப்பார்.

மத்தியசென்னை; தயாநிதி மாறனுக்கு வாய்ப்புகள் அதிகம்.

தென்காசி; புதிய தமிழகம் கட்சிக்கே அதிக வாய்ப்பு.

சிதம்பரம்; விசிக்கு வாய்ப்பிருக்கிறது.

தஞ்சாவூர்; திமுக மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஜெயிக்கலாம்.

புதுச்சேரி; என். ஆர் காங்கிரஸ் ஜெயிக்க அதிக வாய்ப்பு, காங்கிரஸுக்கும் வாய்ப்பு அதிகம்.

அவ்வளவு தான் என்னுடைய கணிப்பு. மொத்தமாக அதிமுக  18-20 தொகுதிகள்.திமுக 16-18 பாஜக -1 மதிமுக -1 பாமக 0-1 தேமுதிக 0 தொகுதிகள் ஜெயிக்கலாம்.(பாவம் கேப்டனின் அரசியல் வாழ்க்கை இத்தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகப் போகிறது எனத்தெரியவில்லை)

இது பற்றிய என்னுடைய பதிவு;  http://pudhukaiseelan.blogspot.in/2014/04/blog-post_17.html


வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள், உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஒருகணம் ஒதுக்கலாமே?

உங்கள் சீலன்!

கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன!!!!