Friday, May 13, 2016
Tuesday, May 10, 2016
நுழைவுத்தேர்வு
நுழைவுத்தேர்வு வைத்து தான் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதற்கு ஆட்சேபிக்காத மத்திய அரசின் நிலைப்பாடுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதிலும் தமிழகம் போன்ற பதினோறாம் வகுப்புகளே பெரும்பாலும் நடத்தப்படாமல் 12ஆம் வகுப்பை நேரடியாக நடத்தி மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக வைத்திருக்கும் நமக்கு இது பொருந்துமா என்பதையும் பார்க்க வேண்டும். சிபிஎஸ்இ தரத்திலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் போது அதை எழுதும் மாணவர்களின் கல்வித்தரமும் அப்படியே இருக்க வேண்டும். நுழைவுத்தேர்வுக்கென தனி சிறப்பு வகுப்புகள் செல்லும் மேட்டிமைத்தன அல்லது பணக்கார மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். கிராமப்புற ஏழை நடுத்தர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு குறித்த ஐயப்பாடுகளே இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை எனும்போது நுழைவுத்தேர்வு எழுதினால் தான் மருத்துவர் கனவு சாத்தியம் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்..?
Thursday, February 25, 2016
ஒரு நாள்
ஒரு நாள்
நள்ளிரவுத் தூக்கம் தூக்கத்துல கனவு
கனவுல அவ வந்தா தூக்கமும் கனவாகும்
கனவு கலைய தூக்கம் தெளிய காலை மணி எட்டாகும்
குளிச்சும் குளிக்காம வந்து
வளிச்சிக்குட்டு நிப்பேன் தலைய - பின்னே
சாப்பிட்டும் சாப்பிடாம காலேஜ் வந்து நின்னா
கண்களும் தேடும் நாலுபுறம் - அவள
க்ளாஸ ஒரு உருட்டு உருட்டி நிமிஷத்துக்கு
பத்துதரம் உத்து உத்து பார்த்தா
காதோர அழகுமுடி மறச்சு நின்னு ஆடும்
- கண்ண பாக்க விடாம
காத்துல அந்த முடி ஒதுங்குமா ஒதுங்காதானு
எதிர்பார்த்துக் காத்துருந்தா முடிஞ்சுபோகும் - ஒரு நாளே...!
( நண்பன் காளியின் டைரியிலிருந்து )
Wednesday, February 24, 2016
பிரண்டன் மெக்கல்லம் - நவீன யுகத்தின் கிரிக்கெட் வீரன்
பிரண்டன் மெக்கல்லம் - நவீன யுகத்தின் கிரிக்கெட் வீரன்
கோடி மகன்களின் நாயகனே கோடி மக்களின் மன்னவனே.. இந்த வரிகள் அநேகம் பேருக்கு மறந்து போயிருக்கலாம்.. எனக்கு நினைவிருக்கிறது.... ஆம் முதல் ஐபிஎல் தொடரின் தமிழ் தீம் சாங். ஏகத்துக்கும் எதிர்பார்த்த ஒரு தொடர். இது வரையில் பார்த்திராத ( ஆசிய 11, உலக 11 எல்லாம் பேப்பரில் படித்தது தான்) ஒரு புது முயற்சி. வேற்று நாட்டு வீரர்களுடன் உள்ளூர் அணிகளுக்கெதிரான கலர்புல் டி20 தொடர். இந்தியா உலகக் கோப்பை வென்றிருந்த நேரம், டிராவிட்டின் அணி நீக்கத்துக்குப் பின் அவர் பெங்களூர் கேப்டனான தருணம் என உலகக்கோப்பையைக் காட்டிலும் அதிகம் எதிர்பார்த்த தொடர்.
கோடி மகன்களின் நாயகனே கோடி மக்களின் மன்னவனே.. இந்த வரிகள் அநேகம் பேருக்கு மறந்து போயிருக்கலாம்.. எனக்கு நினைவிருக்கிறது.... ஆம் முதல் ஐபிஎல் தொடரின் தமிழ் தீம் சாங். ஏகத்துக்கும் எதிர்பார்த்த ஒரு தொடர். இது வரையில் பார்த்திராத ( ஆசிய 11, உலக 11 எல்லாம் பேப்பரில் படித்தது தான்) ஒரு புது முயற்சி. வேற்று நாட்டு வீரர்களுடன் உள்ளூர் அணிகளுக்கெதிரான கலர்புல் டி20 தொடர். இந்தியா உலகக் கோப்பை வென்றிருந்த நேரம், டிராவிட்டின் அணி நீக்கத்துக்குப் பின் அவர் பெங்களூர் கேப்டனான தருணம் என உலகக்கோப்பையைக் காட்டிலும் அதிகம் எதிர்பார்த்த தொடர்.
Monday, February 22, 2016
நீயா நானா- கடைசி பென்ச் மாணவர்கள்
நீயா நானா- கடைசி பென்ச் மாணவர்கள்
இடையில் என்னவோ
தெரியவில்லை அந்த மழை வெள்ள எபிசோட்டிற்கு பிறகு நீயா நானாவைப் பார்க்க வேண்டும்
என்று தோன்றவே இல்லை. இன்று ஹாஸ்டலில் இரவு உணவை முடித்துவிட்டு எதார்த்தமாக சானல்
மாற்றும் போது BACK BENCHERS பற்றிய விவாதம்
கண்ணில் பட்டது. அதே நேரம் ப்ரோ கபடியை அனைவரும் ஆர்வமாய் ரசித்துக்
கொண்டிருந்தனர். ஏதொ நம்ம இன்ப்ளுயன்ஸ் வச்சு கொஞ்சமாய் ஆள்திரட்டி, சண்டை போட்டு
கடைசியில் மாற்றச் செய்துவிட்டோம். இந்த மாதிரி கஸ்டப்பட்டு சண்டைபோட்டு மாற்றும்
டாபிக்கெல்லாம் சில சமயங்களில் மொக்கையாகிவிடும், அது பெரிய பல்ப் ஆகிவிடும் .ஆனா நேத்து தப்பிச்சுட்டோம்னு
தான் சொல்லணும். சுருக்கமான ஆனால் ஒரு சிறப்பான நீயா நானா நேற்றையது.
Thursday, February 18, 2016
விஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....?
விஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....?
இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி, இதுவாகத் தான் இருக்க முடியும் தமிழக அரசியல் களத்தில். 2005 ஆம் ஆண்டு அவரின் கட்சி துவக்க விழா மாநாட்டை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரம்மிப்பாக உள்ளது. என்னா கூட்டம், மதுரையில்... ஆனால் அவராலுமே கூட தனித்தே நின்று ஒரு மாற்றாக வளர முடியவில்லை என்று நினைக்கும் போது அவருடைய அணுகு முறை மாற்றம் பெறுவதில் தவறு சொல்ல முடியாது. தனித்தே நின்று வாக்குகளை சிதறடித்துக் கொண்டே இருக்கும் போது தொண்டர்களும், பணம் செலவு செய்பவர்களும் விரக்தியடைந்து விடுவார்கள். அதற்காக 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானது நல்லதொரு முடிவுதான் என்னைப் பொறுத்தவரை. அதற்குப் பின் என்ன நடந்தது என்பது நாடறியும்.
இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி, இதுவாகத் தான் இருக்க முடியும் தமிழக அரசியல் களத்தில். 2005 ஆம் ஆண்டு அவரின் கட்சி துவக்க விழா மாநாட்டை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரம்மிப்பாக உள்ளது. என்னா கூட்டம், மதுரையில்... ஆனால் அவராலுமே கூட தனித்தே நின்று ஒரு மாற்றாக வளர முடியவில்லை என்று நினைக்கும் போது அவருடைய அணுகு முறை மாற்றம் பெறுவதில் தவறு சொல்ல முடியாது. தனித்தே நின்று வாக்குகளை சிதறடித்துக் கொண்டே இருக்கும் போது தொண்டர்களும், பணம் செலவு செய்பவர்களும் விரக்தியடைந்து விடுவார்கள். அதற்காக 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானது நல்லதொரு முடிவுதான் என்னைப் பொறுத்தவரை. அதற்குப் பின் என்ன நடந்தது என்பது நாடறியும்.
Tuesday, February 16, 2016
புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?
புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?
தேர்தல் நெருங்கும் போதெல்லாம் கருத்துக் கணிப்பை நடத்திவிடுவது என்பது எல்லா ஊடகத்தினருக்கும் எழுதப்படாத விதி ஆகிவிட்டது. சரி எடுக்கப்படும் கணிப்புகளாவது குறைந்தபட்ச நேர்மையைக் கொண்டிருக்கின்றனவா என யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.லயோலா ஆரம்பித்து வைத்த இந்த கணிப்பு கண்ணாமூச்சி ஆட்டம், தேர்தல் தேதிவரை தொடரத்தான் போகிறது. எல்லாமுமே அதிமுகவை விட திமுக நூலிழை வித்தியாசத்தில் பிந்தங்கி தமிழக மக்கள் மாற்றம் என்றால் என்ன என்று யோசிக்கக் கூட இடம் தராதவைகளாகவே இருக்கப் போகிறது.
Subscribe to:
Posts (Atom)
